Sunday, May 8, 2016

21/02/2016

இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல தமிழ் தலைவர்களையும், அப்பாவி தமிழ் மக்களையும் நூற்றுக்கணக்கில் கொன்றதுடன், இறுதிப் போரில் ஒளிந்திருந்த சிறுவர்களை கட்டாயமாக பிடித்து கொண்டு போய் அவசர பயிற்சியுடன் சாகக் கொடுத்ததும், எல்லாவற்றிற்கும் உச்சமாக தப்பி ஓடிய மக்களை சுட்டுக் கொன்றதும்.. இவை எல்லாம் மறுக்க முடியாமல் வரலாற்று பதிவுகளாகிவிட்டன. இதில் காலச்சுவடு என்ன முயன்று என்ன புதிய 'அவதூறை' புதிதாக செய்துவிட முடியும் என்று புரியவில்லை. தமிழினி எழுதிய நூலை இன்னமும் படிக்கவில்லை. ஆனால் அவர் எல்லா விதத்திலும் ஒரு சுய விமர்சனம் செய்து கொள்ளவே வாய்ப்பு இருந்திருப்பதாக தோன்றுகிறது. பாசிச அரசியலுக்கு சுய விமர்சனத்தை விட பெரிய தூரோகம் இருக்க முடியாது. நல்லவேளையாக தமிழினி இறந்த பிறகு புத்தகம் வருகிறது; அவர் வாங்க வேண்டிய வசைகளை எல்லாம் காலச்சுவடு பெற்றுக் கொள்கிறது.

No comments:

Post a Comment