Saturday, January 21, 2017

மண்ணாந்தையியல்

எதிர்வினை செய்தே நேரம் தொலைகிறது என்றுதான் ஃபேஸ்புக்கில் இருந்து முற்றிலும் வெளியேறினேன்; ஆனால் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவந்தவன் எதேச்சையாக டாஸ்மாக் போனால் காராபூந்தியா சாப்பிடமுடியும்!

https://www.facebook.com/rajan.k.krishnan/posts/10211948906907393?pnref=story


அறிவுபூர்வமாக பெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எடுத்துக்காட்டி விட்டு, சாதாரண காமன்சென்சை தவறவிட்டு எழுதுவதை ஒரு அறிஞர் பழக்கமாகவே மாற்றிக்கொண்டு, ராஜன்குறை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்போது “தி.மு.க-வின் ரயில் மறியல் போராட்டம் ஏன் இந்த தன்னெழுச்சிப் போராட்டம் போன்றே முக்கியமானது' என்பது. இதை சாதரணமாக தனது தர்க்க நிலைபாட்டில் இருந்து புரியும்படி சொன்னால், எதிர்த்து வாதம் செய்வார்களோ என்கிற சந்தேகத்தில், தெல்யூஸ், விக்டர் டர்னர் சொசைடாஸ் என்று பெரிய ஆட்களை எல்லாம் இழுத்து சொல்லும் விஷயம் என்னவெனில், திரும்பவும் அரசியல் கட்சிகளின் போராட்டம் இந்த தன்னெழுச்சி போராட்டம் போலவே முக்கியமானது என்கிற விஷயத்தை மொட்டையாகத்தானே. வாசகர்கள் தேடிப்போய் படித்து சரிபார்த்து தெளியும் சாத்தியம் இல்லாத சில பெயர்களை சொல்வதன் மூலம் அதை எப்படி மேலும் தெளிவு படுத்துகிறார்?

விஷயம் என்னவெனில் ஒரு மிக பெரிய போராட்ட எழுச்சி சிறிதும் வன்முறையின்றி, இனி வரும் போராட்டங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக மக்களுக்கு மிக மிக குறைந்த அளவில் தொந்தரவுகளை தரும் வகையில் நிகழ்ந்துள்ளது. உதாரணமாக முழு OMRஐ ஆக்கிரமித்தவர்கள் அதன் ஒரு பக்கம் போக்குவரத்தை அனுமதித்து மற்ற பக்கத்தை மட்டும் ஆக்கிரமிக்கின்றனர். போராட்டக்காரர்களிலேயே பலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். மக்களுக்கு உதவுகின்றனர். ஆனால் திமுக பக்கவாட்டில் போராட ஆரம்பித்த உடனேயே ரயிலை மறித்து மிக தீவிர பிரச்சனைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துகிறது. இதுதான் விமர்சனம். எந்த வகையில் சாலையில் நடந்த இந்த போராட்டத்துடன் இந்த ரயில் மறியலும் முக்கியம் என்று அறிவுநேர்மையுடன் எதிர்கொண்டு பேசியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாமல் தெல்யூஸ் என்று சில பெயர்களை இழுத்து ஜல்லியடிக்கிறார். இதை தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறார். தொடர்ந்து ஒரு நூறு பேர்கள் அதை லைக் செய்துகொண்டும் இருக்கிறார்கள். இந்த மண்ணாந்தை சூழலில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு எதை என்னை போன்ற ஆள் செய்யமுடியும்!