Tuesday, December 29, 2015

கணிஞர்-விவாதம்-முடிவுரை

முடிவுரை: முதலில் மணிவண்ணன் நினைப்பது போல் அவர் காயின் செய்த ஒரு வார்த்தையை திருடுவது எனக்கு நோக்கமல்ல; எவ்வித உணர்வு வயப்பட்ட ஓட்டுதலும் எனக்கு அந்த வார்த்தையின் மீது மட்டுமல்ல, கணிதம் மீதே கிடையாது. தமிழில் நவீன கணிதம் குறித்து யாரும் எழுதப்போகிறார்களா என்பதே சந்தேகம்; குறிப்பாக நான் எழுதும் சூழல் அமையுமா என்பது தெரியாது. பத்ரி பதிவில் வாசித்த போது கவர்ச்சியாக பிடித்தமாக இருந்ததால் எடுத்து பலுக்க முனைந்தேன்; முன்மொழிந்தேன்; அவ்வளவே. மற்றபடி நான் எங்காவது வாசித்திருக்கலாம்; மனதில் பதியும்படி இணையத்தில் பத்திரிகைகளில் வெகுஜன புழக்கத்தில் கண்டதில்லை. சண்டை போட்டு அவ்வார்த்தையை அபகரிக்கும் ஆசையெல்லாம் நிச்சயம் இல்லை. இரண்டாம் முறை எழுதியதும் அறிவுவிவாதத்திற்கான் அழைப்பே அன்றி, ஈகோ சார்ந்த சண்டைக்காக அல்ல.
ஏன் அந்த வார்த்தையை நாடினேன் என்பது வேறு எதற்காவது பயன்படலாம் என்பதால் இந்த பதிவில் சொல்கிறேன். கவிஞன் போன்ற ஒரு படைப்பூக்கத்தன்மையை, கணிஞன் என்ற வார்த்தை உணர்த்துவதால்தான் அதை நாடினேன். அதற்கு கணிதம் படைப்பூக்க வெளி -ஒரு creative space- என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நிரல் எழுதுபவர்களுக்குத்தான் கணிஞர் என்பது பொருந்தும், கணிதவியலளர்களுக்கு அது பொருந்தாது, ஏனெனில் நிரல் எழுதுவது கலை, கணிதம் கலையல்ல என்றெல்லாம் மணி சொல்வது கொஞ்சம் கூட ஏற்கமுடியாதவை; மாற்றி வாதிடவே அதிக சாத்தியமுள்ளவை. கலை என்பது என்னவென்பது எளிதாக வரையறுக்கக் கூடியதல்ல; வரையறுப்பதில் அழகியல் சிக்கல் மட்டுமின்றி அரசியல் சிக்கலும் உள்ளது. இது குறித்த தூய்மைவாதங்களை அரசியல்ரீதியாக எதிர்ப்பவனான நான், கணிதம் கலை, நிரல் எழுதுவது கலையல்ல என்று சொல்லமாட்டேன். ஆனால் சில தீவிர வித்தியாசங்கள் படைப்பூக்கரீதியில் இரண்டிற்கும் இருப்பது தெளிவு. ஒரு ஓவியர் கலைஞர், கட் அவுட் வரைபவர் கலைஞரல்ல என்று சொல்வது பிரச்சனைக்குரியதுதான். ஆயினும் இரண்டிற்கும் தீவிர வித்தியாசம் இருக்கிறது. பானை செய்வதும் நிச்சயம் கலைதான்; சிற்பம் வடிப்பது அதைவிட படைப்ப்பூக்கம் கொண்டதாக சிலரால் நம்பப்படுகிறது. ஒரு நவீன ஓவியம் இன்னமும் படைப்புதன்மை கொண்டதாக நினைக்கிறார்கள். சினிமாப்பாடல் பாடும் எஸ்பிபி ஒரு கலைஞர்தான்; இளையராஜாவைத்தான் இசைஞர் என்பார்கள். மொசார்டின் படைப்பூக்கம், பிக்காசோவின் படைப்பூக்கம் நிச்சயம் தமுஎச பாடலில் உள்ள படைப்பூக்கத்தில் இருந்து வேறுபட்டதுதான்.
அதே போல் கணினியில் நிரல் எழுதுவது கலையல்ல என்று சொல்ல மாட்டேன்; ஆனால் கணிதத்தில் புதிய தேற்றத்தை உருவாக்கி நிறுவுவது போன்ற ஒரு படைப்பூக்க செயல் அல்ல. கலை என்பது அழகியலாலும், படைப்பூக்கத்தாலும் நிர்ணயிக்கப்படுவதே அன்றி அது தர்க்க பூர்வமானதா, பலவகை வாசிப்புகள் சாத்தியமா என்பதால் அல்ல. கிறுக்கி வைத்தால் அல்லது உளறினால் கூட பல நூறு வாசிப்புகள் உருவாகலாம். சினிமாவிற்கு பாட்டெழுதுவதும் கலைதான். ஆனால் நவீன இலக்கியத்தில் கவிதை என்று குறிப்பது வேறு. அந்த வகையில் பாடலாசிரியனை சிலர் கவிஞன் என மாட்டார்கள். கவிஞன் என்ற சொல்லுக்கு இணைவாக, கணிதத்தில் படைப்பவரை விளிக்க, கணிஞன் என்ற வார்த்தை பொருத்தமானது என்று -மற்ற வில்லங்கங்கள் அதில் இருப்பது சுத்தமாக தெரியாததால் - நினைத்தேன்.
அருள் கணிஞர் என்பது கணிதம் தரும் அர்த்தத்தை குறுக்குவதாக சொல்வதை நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டேன். அது தமிழின் பிரச்சனை. அவரும் கணிஞர் என்ற வார்த்தையை கணினி விஞ்ஞானிக்கு மட்டுமே பொருந்துவதாக சொல்கிறார். மணிவண்ணன் குறிப்பிடுவது போல் கணினி நிரல் எழுதுபவர்களுக்கும், கணினி பொறியாளர்களுக்கும் அவர் அதை பொருத்தவில்லை. இதையே நானும் சொன்னேன். ஆனால் கணிதவியலாளர்க்கு பொருந்தாது என்பதற்கான காரணம், ஏற்கனவே கணினியாளர்களுக்கு பலுக்கிவிட்டதை தவிர வேறு ஏதும் புலப்படவில்லை.
கணிதவியலாளரை எண்ணர் என்பது எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல. number theoryயை எண்ணியல் எனலாம்; ஆனால் ராமானுஜனைக்கூட எண்ணர் என்று கூற முடியாது; ஏனெனில் எண்வெளியின் சாத்தியக்கூறுகளை அவரது பங்களிப்புகள் தாண்டியது. (மேலும் ராமானுஜனை மட்டும் வைத்து கணிதத்தை பேசுவது தமிழர் தலைவிதி; கணிதத்தின் தலைவிதியல்ல.) நிச்சயமாக (கணினியியல் உட்பட்ட) பெருங்கடலாக இருக்கும் கணிதத்தை எண் கொண்டு குறிக்கலாகாது. அடுத்து கணிதர் என்பதில் உள்ள பிரச்சனை அது வானியலாளர்களையும், வான்சோதிடர்களையும் குறிப்பதாலா என்றால், சந்தேகமின்றி அதுதான் காரணம் என்று தெளிவாக சொல்லியுள்ளேனே. ஒரு கலைச்சொல்லாக மட்டுமின்றி, சமூகத்திலேயே கணிதர் பஞ்சாங்கம் பார்ப்பவருக்கான பெயராக புழங்குவதால்தான் இந்த பிரச்சனை. நவீன கணிதத்தை ஆங்கிலத்திலும் பிரஞ்ச்சிலும் mathematics என்பது போல் இத்தகைய குழப்பமின்றி தமிழில் கையாள முடியாததுதான் பிரச்சனை.
logic என்பதற்கு அளவையியல் என்று தமிழ் சிறுபத்திரிகைகளில் -குறிப்பாக நிகழ்-  பயன்படுத்தியுள்ளதை அறிவேன். எனக்கு அதை பல காரணங்களால் ஏற்கமுடியவில்லை. தர்க்கம் என்ற சொல்லே மேலானது. ஆயினும் இப்போதைக்கு கணிதம் என்பதே mathற்கு பொருத்தமானது, கணிஞர் ஏற்கனவே பலுக்கப்பட்டு விட்டதால், கணிதவியலாளர் என்பதே mathematicianற்கு வாய்க்கப்பெற்றது என்று ஏற்றுக்கொள்கிறேன். ஆமென்!

கணிஞர்-விவாதம் -2

Badri Seshadri கணிஞன் என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது பிடித்திருந்தது; பொருத்தம் என பட்டது. பின்னர் Haran Prasanna மற்றும்Selvakumar Ramachandran அது ஏற்கனவே கணிப்பொறியாளர்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் சொன்னார்கள்; பின்னர் மணிவண்ணனும் தான் பல காலமாக அவ்வாறு பயன்படுத்தி வருவதாக சொன்னார்; Arul Selvan அது கணினி அறிவியலாளருக்குதான் பொருந்தும், கணிதவியல் என்ற அர்த்தத்தை குறுக்குவதாக சொன்னார்; ஒரு கட்டத்தில் நானும் அதை ஏற்று கணிதர் என்கிற சாதா வார்த்தையுடன் சமரசமாக முடிவு செய்தேன். ஆனால் லக்கி கணிதர் என்பது பஞ்சாங்கம் சொல்லும் சோதிடர்களுக்கு பரவலாக பயன்படுத்தும் வார்த்தை என்ற தகவலை சொன்னபின், நானும் அதை கூகுளிட்டு ஆயிரம் பக்கங்கள் வந்தபின், அதை நிச்சயம் பயன்படுத்தலாகாது என்ற முடிவிற்கு வந்தேன். கணியன் என்பதும் கேரளத்தில் சோதிடர்களுக்கான வார்த்தை என்று அறிகிறேன்.
கணிஞர் என்பது நிச்சயமாக கணிப்பொறியாளர்களுக்கு பொருந்தாது; கவிதைகள் படைப்பவரே கவிஞர்; கவிதைகள் நிறைய தெரிந்தவரை அவ்வாறு அழைக்கலாகாது. கணினி விஞ்ஞானியை அவ்வாறு அழைப்பது பொருந்தலாம். கணிதத்தில் பங்களிப்பவரை அவ்வாறு அழைப்பதில் பிரச்சனை இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். கணிதம் என்பதன் பொருளை கணிஞர் குறுக்குவது, தமிழில் math, compute என்ற இரண்டு பொருட்களை வேறுபடுத்தும் சொற்கள் இல்லாததன் பிரச்சனை என்று தோன்றுகிறது. theoreitical computer science கணிதத்தின் ஒரு பகுதிதான் என்ற வகையில் கணிஞன் என்ற வார்த்தையை பொதுவாக ஒப்புக்கொள்ளலாமோ என்று தோன்றுகிறது; இதைவிட பரந்த பொருள் கொண்ட சிறந்த வார்த்தை கிடைக்காத பட்சத்தில், எனக்கு இது இருப்பதில் ஏற்கத்தக்கதாகவே உள்ளது (கணினியாளர்கள் பிரச்சனை செய்யாதிருப்பின்). கணிதவியலாளர் என்பது இயல்பாக இல்லை. ஒருவேளை கணினித்துறை தோன்றாமலே இருந்தாலும் கணிதம் இருந்திருக்கும்; அப்போது இந்த குழப்பம் வந்திருக்காது. மக்கள் திரும்பவும் முதலில் இருந்து கருத்து சொல்லியாக வேண்டியுள்ளதற்கு மன்னிக்கவும்.
தமிழில் நவீன கணிதம் குறித்து பரவலாக எழுதாத நிலையில் (கணினி குறித்து எழுதும் நிலையில்) இது பெரிய பிரச்சனை இல்லை; ஒருவேளை எழுதத் துவங்கினால் இதை தீர்த்தாக வேண்டியுள்ளது.

மணி மணிவண்ணன் கணி - வினைச்சொல்
கணினி - கணிப்பான், கணிப்பொறி - பெயர்ச்சொல்
கணிஞர் - கணினியைப் புழங்கிக் கணிப்பவர்.

கணிதம்/கணிதவியல்

இதில் கணிதவியல் வல்லுநர்களை நுட்பமாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இரு துறைகளும் ஒன்றல்ல. ஒரே சொல்லைப் புழங்குவதில் உள்ள சிக்கல் இதுதான். இரு வேறுபட்ட துறைகளை ஒன்றாகப் பார்ப்பது.

கணினியில் ஒரே விளைவைப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு கணிமொழிகளிலோ, அல்லது வெவ்வேறு கணிஞர்களால் ஒரே கணிமொழியிலோ ஏற்படுத்திக் காட்ட முடியும். அதனால்தான் அதுவும் ஒருவிதக் கலை என்று கொள்ளலாம்.
கணிதம் அப்படிப்பட்டதல்ல.

Roza Vasanth /கணினியில் ஒரே விளைவைப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு கணிமொழிகளிலோ, அல்லது வெவ்வேறு கணிஞர்களால் ஒரே கணிமொழியிலோ/ theoretica computer scientist என்பதையே நீங்கள் கணிஞர் என்று அழைப்பதாக நினைத்தேன். ஆனால் நீங்கள் கணினி மொழியில் program எழுதுபவரை சொல்வது போல்தெரிகிறது. இது மேலும் குழப்பத்தை தருகிறது. அடுத்து எது கலை என்பதற்கும், இந்த சொல்லின் பொருத்தப்பாடிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. (கணிதத்தில் ஒரே தேற்றத்தை பல்வேறு முறையில் நிறுவலாம்)

மணி மணிவண்ணன் நீங்கள் முன்னரே குறிப்பிட்டது போல கணிதம் ஒரு விதமான தர்க்கம் அல்லது ஏரண அளவையியல். “முரண்படாத (consistant) என்கிற பொருளில் முழுமையானது என்கிறேன். எந்த ஒரு மொழிதலும் பல வாசிப்புகளுக்கான சாத்தியத்தை கொண்டிருக்கும்; அதில் ஒன்றுக்கு ஒன்று முரண்படலாம். அவ்வாறு பல வாசிப்புகள் சாத்தியமற்ற, ஒற்றை வாசிப்பை மட்டுமே கொண்ட மொழிதலுக்கான எந்த சட்டகத்தையும் கணிதம் எனலாம் என்கிறேன்.”

கணினியில் நிரல் எழுதுவது ஒரு கலை. மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எழுதுவது ஒரு வகை. அதனால் எளிதில் அதை நீட்டிக்கலாம். புரியாத வகையில் எழுதுவதும் ஒரு திறமை. கணினிக்கலை (ஆர்ட் அவ் கம்ப்யூட்டிங்) துறையில் ஆழ்ந்தவர்களுக்கு மட்டுமே எளிதில் வரும். கணித விடைகளை வெவ்வேறு விதங்களில் எழுதுவது பற்றியோ, புரிந்து கொள்வது பற்றியோ அக்கறை கொள்வதில்லை. எழுதிய நிரல்களை மீளாய்வு செய்து அவற்றை மெருகேற்றுவது கணினித்துறையில் இயல்பு. அதன் நோக்கம் முடிவுகளை மாற்றுவதல்ல. நிரலை எளிமையாக்குதல், நிரலை நீட்டித்தல், நிரலைத் திருத்த வகை செய்தல் போன்று - கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் திருத்தம் செய்வது போன்ற திருத்தங்களைக் கொண்டு சேர்ப்பது. கணிதத் தேற்ற முடிவுகளில் இவ்வளவு ஆழமாகக் கலையுணர்வைக் கொண்டுவருவதாகத் தெரியவில்லை. அப்படிச் செய்வதை நேரத்தை வீணடிப்பதாகவும் கருதலாம். கணித்துறையில் அப்படியல்ல

Roza Vasanth ஸாரி, கணிதத்தைத்தான் கலை என்று சொல்லலாம், நிரல் எழுதுவது கலையல்ல என்று வாதிடவே அதிக காரணங்கள் உள்ளன. ;' வருகிறேன்.

மணி மணிவண்ணன் எண்ணர் eṇṇar : (page 518)

எதிர் பார்க்கை. (W.) 7. Mathematics; கணிதம். (சூடா.)

எண்ணர் eṇṇar

, n. < id. 1. Mathematicians, astronomers; கணிதர். 2. Logicians; தார்க்கிகர். ஏரணங் காணென்ப ரெண்ணர். (திருக்கோ. நூற்சிறப்பு; சங். அக.) 3. King's ministers, counsellors; மந்திரிகள். (பிங்.)

சென்னைப் பல்கலைப் பேரகராதியில் இருந்து.

மணி மணிவண்ணன் எண்ணூல் eṇṇūl : (page 519)

, n. < id. +. Confirming, establishing; உறுதிப்படுத்துகை. (சங். அக.)
எண்ணூல் eṇṇūl

, n. < id. +. Mathematics; கணிதநூல். பன்னுமெண்ணூன் முக்கந்தம் பலவு முறையி னோதினனால் (காஞ்சிப்பு. சனற்கு. 40)

மணி மணிவண்ணன் கணிகன் kaṇikaṉ

, n. < gaṇi. Astrologer; சோதிடன். கணிகரிம் மைந்தன் வைகிற் காவல னிறக்கு மென்ன (காசிக. வீரேசன். 11).

கணிகை kaṇikai

, n. < gaṇikā. 1. Harlot, courtesan, prostitute; பொதுமகள். கணிகை யொ ருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6). 2. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14)

மணி மணிவண்ணன் கணிதன் kaṇitaṉ : (page 705)

kaṇita-rattiṉam

, n. < id. +. Name of a mathematical work in Tamil; ஒரு தமிழ்க் கணிதநூல். (கணக்கதி

. பாயி.)
கணிதன் kaṇitaṉ

, n. < id. 1. Astronomer, astrologer; சோதிடன். கணிதர்சொற்ற வோரையில் (நைடத. அரசர. 9). 2. Arithmetician, mathematician; கணக்கறிவோன்.

மணி மணிவண்ணன் கணிவன் kaṇivaṉ

, n. < gaṇi. Astrologer; சோதிடன். தொல்கேள்விக் கணிவன் (பு. வெ. 8, கொளு, 20)

Roza Vasanth தகவல்களுக்கு நன்றி; எண்ணர் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. கணிதர் என்பது நீங்கள் எடுத்துக்காட்டியுள்ளதிலும் astronometr astrologer என்று வருகிறது. நம்ம ஊரில் உள்ள இந்த குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டியுள்ளது. வெளியே போகிறேன். இரவு வந்து மற்றதை பார்க்கிறேன்.

Cheenu Narasimhan  கணி என்ற வேர்ச்சொல்லின் பொருள் என்ன?

 it computing or inferring?

Actually speaking kaNi (or gaNith in Sanskrit??) should be equivalent of mathematics. But can we use kaNi for computing? Actually computing should be a subset of what is being practised as part of mathematics. So using kaNi in place of computing is in one way restricting the meaning of kaNi. I think kaNigNar is more an apt term for a mathematician than for a computer engineer.

Actually computer engineer is too broad a term. It can mean anything. I haven't seen this being used in the industry either. It is a commoner's usage. It ideally should refer a person who develops computers. We use it to refer anyone who works with computer right from programmer to a hardware or chip designer. We should have terms differentiating these than have a broad term like kaNigNar.

My 2 cents (or paise?) smile emoticon

மணி மணிவண்ணன் Mathematics is an ancient science. Tamil already has a name for both the science and its practitioners. Computer and its engineers are very new and that is why we have coined words to represent them. I don't mind if mathematicians want to be recognized as computer engineers. But it is amusing to see an ancient profession aspiring to a modern word coined for a very young profession.


Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்1. கணினி துறையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் அடிப்படை கணிதத்திலா வேலை செய்கிறார்கள்? அடிப்படை கம்ப்யூடிங் தவிர கணிதம் எங்கே இருக்கிறது? கணிதம் சம்பந்தப்பட்ட புரோக்ராமிங் செய்பவர்களும் கணினிகளை அவர்கள் தங்கள் கால்குலேஷணுக்காக் உபயோகப்படுத்துகிறார்கள். அவ்வளவே.

2. கம்ப்யூடிங் என்பது கணிதத்தின் ஒரு பகுதியே. அப்படி இருக்கையில், கம்ப்யூடிங் என்பதனைக் குறிப்பிட கணி என்ற கணிதத்தைக் குறிக்கும் வேர்ச்சொல்லை ஏன் உபயோகிக்கவேண்டும்?

3. கம்ப்யூட்டர் எஞ்சினியர் என்பது ஒரு பொதுவான பயன்பாடு. அதற்கு ஏன் ஒரு கலைச்சொல் வேண்டும். கணினி பொறியாளர் என்றே சொல்லலாம். மற்றபடி, புரோக்ராமர் போன்ற குறிப்பிட்டுச் சொல்லும்படியான சொற்களுக்கு வேறு பொருத்தமான கலைச்சொற்களை உருவாக்கலாமே?

மணி மணிவண்ணன் So, are mathematicians so starved of creativity that they have to steal a word coined to represent another field? Remember, these words were coined almost two decades ago. How long have mathematicians been around?

Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்So, is the issue about mathematicians trying to snatch a word that has been in vogue for just two decades? If there is an argument that kaNi represents more mathematics than computing why not revisit that usage? It's just couple of decades old. smile emoticon

மணி மணிவண்ணன் But there are words to represent mathematicians that are more than 1000 years old. Why is there an aversion?

Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்I don't think there is an aversion. It's more about trying to come up with something that is more appropriate for terms related to computing. That's all

மணி மணிவண்ணன் But as I have shown from Tamil lexicon, kaNithar is the word used to refer to both mathematicians and astrologers (because they used mathematics to do their computation). If there is no aversion, why try to coin a new word for an ancient profession?

மணி மணிவண்ணன் And of course, eNNar is also an alternate word used to refer to mathematicians. Why is that not appropriate?

Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்I don't think eNNar is inappropriate. IMHO it vibes more with arithmetician

மணி மணிவண்ணன் ஆனால், அதுதான் மரபுவழி வந்த சொல். சீனிவாச ராமானுஜனும் எண் கணிதத்தினால்தான் இன்றும் பாராட்டப்படுகிறார். அது பொருத்தமற்றது என்றால் கணிதம் என்ற துறை அதன் ஆயிரக்கணக்கான வரலாறைப் புறக்கணிக்கிறது என்றல்லவா சொல்ல வேண்டும்? கணி என்ற சொல் வடமொழி வேரிலிருந்து வந்தது. எண் என்ற சொல் தமிழ் வேரில் பிறந்தது. ஆனால், நம் முன்னோர்கள் எண்ணர்கள் என்ற சொல்லை கணிதவல்லுநர்களுக்கும் புழங்கியிருக்கிறார்கள். பழமையான மரபுள்ள சொல்லைத் தவிர்க்க ஒரே காரணம் அதே சொல் கோள்களின் இடத்தைக் கணித்து ஆரூடம் சொல்பவர்களுக்கும் புழங்குவதால் மட்டுமே என்பது தெளிவு.

Arul Selvan தொடர்ச்சிக்காக... எனக்கென்னமோ கணிதர்/கணிதன் என்பதே கணிதவியலின் அனைத்துத் துறைகளையும் அடக்க பொதுவானதாக, விரிவானதாக, போதுமானதாக இருக்கிறது.
நிரல் எழுதுபவர்கள் நிரலாளர் (ப்ரொக்ராமர்ஸ்), கணினி அறிவியலாளர் (கம்யூடர் சயன்டிஸ்ட்ஸ் ) கணிஞர், கணிப்பொறியாளர் (கம்யூட்டர் எஞ்சினீயர்ஸ்) என்பதெல்லாம் கணி (கம்ப்யூட்) என்பதிலிருந்து இயல்பாக பயின்றுவருகிறது . இந்தப் பயன்பாடும் வழக்கில் பயின்று வருவதால் இதுவே பழக்கப் படுத்திக்கொள்ளவும் எளிது
இதில் எண் , கணி என்பன தமிழில் கணிதக் கருத்துகளை முதலிலிருந்தே குறித்தும் வேர்ச்சொற்களாகவும் உள்ளன. அதனால் கணிதவியல்(மாதமாடிக்ஸ்) என்னும் பரந்த, எண்/கணி சாராத ஆனால் அளத்தல் உள்ளடங்கிய தற்கால( டோபாலஜி,லாஜிக், அனாலிஸிஸ்,ஜியோமெட்ரி போன்று ) விரிவையும் உள்ளடாக்கிய ஒரு சொல் வேண்டும். அதை கணியிலிருந்தோ எண் என்பதிலிருந்தோ அவற்றினும் விரிந்த அளவை எனும் சொல்லிலிருந்தோதான் வருவிக்க வேண்டும். வேர்ச்சொற்கள் மூன்று - கணி, எண், அளவை. இவற்றில் எனக்கு கணிதர்/ன் என்பது பயில்வோற்கும் கணிதம்துறைக்கும் பொருத்தமானதாக உள்ளது. மற்றவர்கள் தம் கருத்துகளைக் கூறுங்கள்

மணி மணிவண்ணன் கணிதர், கணியர் என்ற சொற்கள் ஏன் தீண்டத்தகாதவை? அவை ஆரூடக்காரர்களையும் குறிப்பிடுவதாலா? அவர்களிடமும் கணி என்ற சொல்லைப்பற்றிச் சண்டை போடலாமா?

Arul Selvan எனக்கென்னமோ கணிதர்/கணிதன் என்பதே கணிதவியலின் அனைத்துத் துரைகளையும் அடக்க பொதுவானதாக, விரிவானதாக, போதுமானதாக இருக்கிறது.

Arul Selvan நிரல் எழுதுபவர்கள் நிரலாளர் (ப்ரொக்ராமர்ஸ்), கணினி அறிவியலாளர் (கம்யூடர் சயன்டிஸ்ட்ஸ் ) கணிஞர், கணிப்பொறியாளர் (கம்யூட்டர் எஞ்சினீயர்ஸ்) என்பதெல்லாம் கணி (கம்ப்யூட்) என்பதிலிருந்து இயல்பாக பயின்றுவருகிறது . இந்தப் பயன்பாடும் வழக்கில் பயின்று வருவதால் இதுவே பழக்கப் படுத்திக்கொள்ளவும் எளிது

Arul Selvan இதில் எண் , கணி என்பன தமிழில் கணிதக் கருத்துகளை முதலிலிருந்தே குறித்தும் வேர்ச்சொற்களாகவும் உள்ளன. அதனால் கணிதவியல்(மாதமாடிக்ஸ்) என்னும் பரந்த, எண்/கணி சாராத ஆனால் அளத்தல் உள்ளடங்கிய தற்கால( டோபாலஜி,லாஜிக், அனாலிஸிஸ்,ஜியோமெட்ரி போன்று ) விரிவையும் உள்ளடாக்கிய ஒரு சொல் வேண்டும். அதை கணியிலிருந்தோ எண் என்பதிலிருந்தோ அவற்றினும் விரிந்த அளவை எனும் சொல்லிலிருந்தோதான் வருவிக்க வேண்டும். வேர்ச்சொற்கள் மூன்று - கணி, எண், அளவை. இவற்றில் எனக்கு கணிதர்/ன் என்பது பயில்வோற்கும் கணிதம்துறைக்கும் பொருத்தமானதாக உள்ளது. மற்றவர்கள் தம் கருத்துகளைக் கூறுங்கள்


கணிஞர்- விவாதம்- 1

என் முதல் பதிவு: Badri Seshadri ராமானுஜனை முன்வைத்து இரண்டு முக்கிய பதிவுகளை எழுதியுள்ளார். அதை முன்வைத்து பேச எனக்கு சில கருத்துக்கள் இருந்தாலும் (விமர்சனமல்ல), இப்பதிவு அதற்கல்ல. Mathematician என்பதற்கு கணிஞர் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார். இதற்கு முன் யாராவது இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளனரா தெரியவில்லை, மிக பொருத்தமான சொல்லாக்கமாக தோன்றுகிறது. ரொம்ப சாதரணமாக, இயல்பாக தோன்றியிருக்க வேண்டிய சொல்லாக்கம், கணிதவியலாளன் போன்ற கடூரப்பயணத்திற்கு பின் வந்தடைந்திருக்கிறது ( ̀கணினி' போலவே). ஒருவேளை சிலருக்கு இது பொருத்தமான சொல்லாக இப்போது தோன்றாமல் இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தினால் பொருந்திவிடும். நான் இனி கணிஞன் என்ற சொல்லையே பாவிப்பதாக உள்ளேன்.

Haran Prasanna கணி என்றால் கணினி. கணிஞர் என்பது கணிப்பொறியலாளரைக் குறிக்கும் விதமாகப் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணிஞர் குழப்பத்தையே உருவாக்கும்.

Roza Vasanth கணிப்பொறியாளர் என்று சொல்வதே சரி- அவர் பொறியியலாளராக இருப்பதால். கணிஞர் அதற்கு பொருத்தமானதாக தோன்றவில்லை. ஆனாலும் ஏற்கனவே சிலர் பயன்படுத்தியிருந்தால் குழப்பம்தான். (நான் வாசித்ததில்லை.)

Selvakumar Ramachandran கணிஞர் என்ற சொல்லை திரு. மணி மணிவண்ணன்நீண்ட காலமாக கணினி வல்லுநர்களுக்காக பயன்படுத்தி வருகிறார். கணித வல்லுநர்களை கணிஞர் என்று சொல்வது பொருத்தமானதைப்போல தெரிந்தாலும், கணிஞர் என்ற சொல் கணினித் துறையில் இருக்கும் வல்லுநர்களுக்கு மிகச்சிறப்பாக பொருந்துகிறது.

Roza Vasanth தமிழில் computaionற்கும் (கணக்கு), mathற்கும் (கணிதம்) வேறு வேறு சொல் இல்லாத சிக்கலால் வருகிறதோ என்று தோன்றுகிறது. என் கருத்தில் கணித வல்லுனர்கள் கணித வல்லுனர் என்றே சொல்லவேண்டும்; கணிணி வல்லுனர்கள் கணினி வல்லுனர் என்றே சொல்ல வேண்டும். கணினி துறையில்பங்களிப்பு செய்துள்ளவர்களை கணினியாளர் என்றும், கணிதத் துறையில் பங்களிப்பு செய்துள்ளவர்களை கணிஞர் என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. (கணினித்துறை கணிதத்தின் ஒரு பகுதிதான் என்கிற வகையில் அவர்களைதும் கணிஞர் என்றால் பெரிய தவறாக தோன்றவில்லைதான்.

மணி மணிவண்ணன் கணியன் பூங்குன்றனார் என்ற பெயரில் வரும் கணியர் என்ற சொல்லும் கோள்களின் இடத்தைக் கணித்து ஆரூடம் சொல்பவர்களைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அவர் ஆசீவகராக இருந்திருந்தால் அது வேறு பொருளைக் குறிப்பிட்டிருக்கும். கணிஞன் என்ற சொல்லைக் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களைக் குறிப்பிட 15 ஆண்டுகளுக்கு மேலாகப் புழங்கி வந்திருக்கிறேன். இது பத்ரிக்கும் தெரியும்.

Roza Vasanth /கணிஞன் என்ற சொல்லைக் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களைக் / இது கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் முந்திக் கொண்டதால் வந்த பிரச்சனையாக மட்டும் தோன்றுகிறது. உங்களுக்கு, அது பொருத்தமானதாக தோன்றுகிறதா?

மணி மணிவண்ணன் கணி, கணினி, கணிஞர் என்ற வரிசை இயல்பாக எழுந்தது. கணக்கு, கணக்கியல், கணக்காயர் என்ற சொற்களும் ஏற்கனவே உள்ளன. கணிதவியலாளர்களைக் கணிஞர்கள் என்று குறிப்பிட்டால் குழப்பம்தான் வரும். நான் பொறிஞன், கணிஞன் ஆனால் கணிதவியலாளன் அல்லன்.

Roza Vasanth /கணக்கு, கணக்கியல், கணக்காயர்/ நவீன கணிதத்துடன் இந்த வார்த்தைகளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்பதுதான் பிரச்சனை.

மணி மணிவண்ணன் கணக்கு வேறு கணிதம் வேறா?

Roza Vasanth நாம் தரும் அர்த்தத்தை பொறுத்தது. நவீன கணிதம் எந்த பொருளிலும் கணிக்கிடுவது தொடர்பானது அல்ல. அது முழுக்க தர்க்கம் சார்ந்தது.

Roza Vasanth என்னை பொறுத்தவரை தர்க்கம் அதன் முழுமையுடன் செயல்படும் எந்த சட்டகத்தையும் கணிதம் என்பேன்

மணி மணிவண்ணன் அப்படியென்றால் கணியன் பொருந்தலாம். ஆசீவக ஏரணவியலாளர்களைக் கணியர்கள் என்பார்கள்.

Roza Vasanth (நீங்கள் குறிப்பிட்ட பிறகு) கணியன் என்பதும் எனக்கு ஏற்கத்தக்கதாகவே உள்ளது. கணியன் என்பதுடன் வேறு எந்த பொருள் குழப்பமும் இல்லை என்று தமிழ் அறிஞர்கள் ஒருமித்து தெளிவுபடுத்தினால்.

Poovannan Subramani // என்னை பொறுத்தவரை தர்க்கம் அதன் முழுமையுடன் செயல்படும் எந்த சட்டகத்தையும் கணிதம் என்பேன்.//புரியவில்லை சார்.கொஞ்சம் விளக்க முடியுமா?

Roza Vasanth இங்கே logic என்பதை தர்க்கம் என்கிறேன் (வேறு பொருத்தமான வார்த்தை பயன்படுத்தியிருக்கலாம்); முரண்படாத (consistant) என்கிற பொருளில் முழுமையானது என்கிறேன். எந்த ஒரு மொழிதலும் பல வாசிப்புகளுக்கான சாத்தியத்தை கொண்டிருக்கும்; அதில் ஒன்றுக்கு ஒன்று முரண்படலாம். அவ்வாறு பல வாசிப்புகள் சாத்தியமற்ற, ஒற்றை வாசிப்பை மட்டுமே கொண்ட மொழிதலுக்கான எந்த சட்டகத்தையும் கணிதம் எனலாம் என்கிறேன். மிக விளக்கமாக சொல்ல கட்டுரை எழுத வேண்டும்.

Selvakumar Ramachandran ரோசா வசந்த் சார், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒரு சொல்லை, வேறொரு துறையில் பயன்படுத்துவது அனாவசிய குழப்பத்தைக் கொடுக்கும். கணிஞன் சொல்லை நானும் தமிழில் தொழில்நுட்பப் பதிவுகள் எழுதும்பொழுது பயன்படுத்தி வருகிறேன். கணினித்துறையில் ஏற்கனவே பயன்பாட்டில்இருப்பது தெரிந்தும் கணிஞன் என்ற சொல்லை கணித வல்லுநர் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். நான் கணினி வல்லுநர்களை கணிஞர் என்று குறிப்பதையே தொடர்வேன். smile emoticon

Arul Selvan கணிதம் என்பதன் வேரும் கணி-தான் என்றாலும் -'தம்' அதை துறையாக மாற்றிவிடுகிறது. கணி என்பதிலிருந்து இரு கிளைகளாக 1. கணி->கணினி->கணிஞர் 2 கணி->கணிதம் -> கணிதவியல் -> கணிதவியலாளர் என்று பிரிவது இயல்பாக உள்ளது. நவீன கணிதம் கணிப்பதையும் உள்ளடக்கி இருப்பதால் இந்த உள்ளிசைவு தேவையாக இருக்கிறது. முழு கணிதவியலையும் கணி/கணிஞர்-என் அழைப்பது ஒரு குறுக்குதலே.

Roza Vasanth கணிதன்? கணிதர்?

Arul Selvan கணிதம்-> கணிதர் என்றால் சரியாகத்தான் இருக்கிறது ஆனால் புதிதாக இருப்பதால் பயன்படுத்தித்தான் வழக்கத்திற்க்கு கொண்டுவர வேண்டும்.

Roza Vasanth /பயன்படுத்தித்தான் வழக்கத்திற்க்கு கொண்டுவர வேண்டும்./ வேற வழி? கணிப்பொறி கணினியானது அப்படித்தானே!

Arul Selvan கண்டிப்பாக. நான் இப்போதிருந்து செய்கிறேன்

Roza Vasanth அப்ப இப்போதைக்கு அறிவிச்சிரலாமா? கணிதர் -mathematician, கணிஞர் -computer scientist; அல்லது ஏதேனும் ஆட்சேபம்? Badri Seshadri மணி மணிவண்ணன்

Badri Seshadri கணிதர் என்பதைப் பயன்படுத்துவதில் ஆட்சேபம் ஏதும் இல்லை. மாற்றிவிடுகிறேன்.

Roza Vasanth ஆனாலும் கவிஞன் என்பது போல் கணிஞன் என்று கவித்துவமாக தெரிந்த சொல்லை இப்படி பிடுங்கிக் கொண்டது வருத்தம்தான்

மணி மணிவண்ணன் அட நீங்க வேற. வலைப்பூ என்ற சொல்லைக் “கவித்துவமாக”ப் படைத்தேன் என்று சிலர் கலைச்சொல்லில் கவிதையா என்று கடிந்தார்கள். கணிஞன் என்ற சொல்லை நான் எடுத்துக் கொண்டபோது கணியன் என்ற சொல்லிலிருந்து வேறுபடுத்திச் சொல்ல வேண்டும், அதே நேரம் கணி என்ற வினைச்சொல், கணினி என்ற பெயர்ச்சொல்லோடு தொடர்பும் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் படைத்தேன். கவிஞன் போல, கணிஞன் என்பதும் கலையுணர்வைச் சுட்டிக் காட்டுவதும் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. நல்ல கணிஞர்கள் கலைஞர்களாக இருக்க வேண்டும். smile emoticon

Roza Vasanth கணிஞர்கள் கலைஞர்களுடன் ஒப்பிடுவது சரி; அதே நேரம் கணிதம் கவிதை போன்றது

(லக்கி லுக் பதிவில் இருந்து)

Yuva Krishna அநியாயம். கம்ப்யூட்டர் சயின்ஸ் வருவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பாகவே கணிதம் வந்துவிட்டது. எனவே அந்த விளிப்பு உங்களுக்குதான் சொந்தம். விட்டுராதீங்க!

Roza Vasanth ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதாலும், அருளின் குறுக்குவதாக சொல்லும் (கம்யூட்டர் சயின்ஸ் கணிதத்தின் ஒரு பகுதி) விளக்கமும் ஏற்கத்தக்கதாக உள்ளது. பத்ரியும் மாற்றிக்கொள்ள ஒப்புகொண்டுவிட்டார். அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் கணிதர் என்ற வார்த்தையுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.

Yuva Krishna Roza Vasanth பஞ்சாங்கம் கணிக்கிறவர்களை கூட ‘கணிதர்’ என்கிறார்களாம். பரவாயில்லையா? smile emoticon

(இதை நான் அக்கம் பக்கத்தில் விசாரித்தும், கூகுளிட்டும் உண்மை என அறிந்தேன்; அதன் காரணமாக அடுத்த பதிவு.)

Thursday, December 24, 2015

பகுப்பு

ராஜாவை வெறுப்பவர்கள் சமூகத்தின் தவிர்க்கமுடியா அங்கமான நோய்கிருமிகள்; மேலோட்டமாக வகைப்படுத்தும் கருத்து கந்தசாமிகள் பொதுப்புத்தியின் தீங்கற்ற நடுத்தரவாசிகள்; ரசித்து விளக்க முற்படுபவர்கள் மலையை தடவிய குருடர்கள்; எதிலும் சிக்காததால் கடவுள் என்பவர்கள் மீதமுளோர்.


https://www.youtube.com/watch?v=eXfaWeFE3jM

முகநூல் கும்மி

ஒரு அரசியலை அதன் எதிரிகளால் காலி செய்யமுடியாது; உண்மையில் எதிரிகளால் அந்த அரசியலை உயிர்ப்போடு வைத்திருக்கத்தான் முடியும். ஆனால் அதே அரசியல் பேசும் ஒரு மொள்ளம்மாரி நடிகனால் அதை எளிதாக காலி செய்ய முடியும். அது புரியாமல் அதை கும்மியடித்து ஆதரிப்பவர்கள் இந்த பதிவை லைக் செய்தால் முட்டாள்; வாசித்தும் லைக் செய்யாவிடில் அறிவு போதவில்லை என்று அர்த்தம்.

அறிவுக்கசடுகள்

அறிவிருக்கா' மேட்டர் ஒரு செய்தியாக கவனிக்கக் கூட தேவையில்லாத ஒரு சம்பவம். தன்னிடம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் கேட்கப்பட்ட, தனக்கு எரிச்சலூட்டுய கேள்விக்கு, அந்த கணத்தின் உணர்ச்சியில், ஒரு பிரபலம் எதிர்வினை செய்தது குறித்து, பலவித கருத்துக்கள் கந்தசாமிகளுக்கு இருக்கத்தான் செய்யும்; இப்படி பண்ணிருக்கலாம் என்று ஆளாளுக்கு மனதில் தோன்றுவதை விவாதிப்பது போன்ற ஒரு மூட அறட்டைத்தனம் கிடையாது; அதை மீறி பெரிதாக கருத்துச் சொல்லவும் முரண்படவும் அதில் எதுவுமே இல்லை. அதிலும் ஒரு பேரழிவு நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகாத நிலையில், சாதாரணமாக கடந்து போக வேண்டியதை, ஒரு சமுகப்பிரச்சனையாக பேசுவதை போன்ற ஆபாசம் வேறில்லை. இப்படி நினைத்தாலும், இந்த விஷயம் பற்றி மேலும் எழுத எனக்கும் ரொம்பவே அலுப்பாகவும் அறுவையாகவும் இருந்தாலும், ஒரு விஷயத்தை கவனிக்கோணும்; மற்றவர்கள் எழுதுவதும், அதில் காணும் அறிவீனங்கள், ஆபாசங்கள், கயமைத்தனங்களுக்கு எதிர்வினையாகவே - இளையராஜாவை பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்று நினைக்கும் ஒருவன் என்ற முறையில் - மீண்டும் மீண்டும் எழுத வேண்டியதாகிறது.
மிக ஆபாசமான முறையில் தாக்கப்பட்டதையும், ஒரு மேதையை ஒருமையில் திட்டி எழுதப்பட்ட வசைப்பதிவுகளும், புனையப்பட்ட ஆபாசக்கதைகளும், முட்டாள்தனமான தர்க்கங்களையும் விட்டுவிடலாம்; அவைகள் சமுகத்தின் அழுகிய பகுதிகள். ஆனால் சமுக அக்கறை கொண்டு எழுதிவரும் கருத்தாளர்கள் யாராவது -அதிலும் அரசியல் காரணங்களால் மட்டும் இளையராஜாவை விமர்சித்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் யாராவது - இந்த சமூக ஆபாசத்திற்கு எதிராக, இளையராஜாவின் நியாயத்தை ஆதரித்து பேசுவார்கள் என்று மிக மிக முட்டாள்தனமாக எதிர்பார்த்தேன்.
தீவிர தார்மிகம்/ கலகம்/எதிர்ப்பரசியல் என்கிற பாவனையுடனான சுயநல பொறுக்கித்தனத்தின் முழுமையடைந்த முகம் சாருநிவேதிதா; அந்தாளை கணக்கிலேயே சேர்க்கவில்லை. அரவிந்தன் கன்னையன் போன்ற, தலைவீங்கிய சூப்பர் குமாஸ்தாக்களையும் கணக்கில் கொள்ளவில்லை. என்னதான் ஞாநியை முட்டாளாக நான் நினைத்தாலும், இந்த சந்தர்ப்பத்தில் நேர்மையான ஒரு நிலைபாட்டை எடுப்பாரோ என்று ஒரு நப்பாசை கொண்டிருந்தேன். அந்த ( முழு) வீடியோவை பார்க்கும் யாருக்கும் எளிதில் அந்த பையனின் ஆபாச குறும்பு புலப்படும். ஒரு ஆசிரியனை நக்கல் செய்யும் பொறுக்கி மாணவனது போன்ற - திட்டினாலும் கோபப்படாத - ஒரு ஏளன புன்னகை முகத்தில். ஞாநி போன்றவர்கள் அதை ஆதரிக்கும், அல்லது பீப் பாடல் ஒரு கலகம் என்று நினைக்கும் ஆசாமிகள் அல்ல; பழைமைவாத ஒழுக்க மதீப்பீடு கொண்டிருக்கும் அவர், குறைந்தது வெள்ள நிவாரணத்தில் வெளிப்பட்ட மனிதாபிமானம் பற்றி பேசி முடித்த அடுத்த நொடி, அந்த கேள்வி கேட்டதை ஒரு அசந்தர்ப்பம் என்று நினைக்கும் முடிவிற்குதான் அவரை போன்றவர்கள் இயல்பாக வந்திருக்க வே ண்டும்; ஆனால் வெளிப்பட்டதோ இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் அற்பத்தனம்; இவ்வாறான ஆழ்ந்த வெறுப்பு மனநிலையில் இருப்பவர், ரசிக மனப்பான்மை பற்றி (எந்த ஒரு அறட்டையாளனும் சொல்லிவிடக்கூடிய) அச்சு பிச்சு சாதாக்கருத்தை கூறுகிறார். டி என் கோபலன் என்பரோ அதைவிட மூளைக்கசடு வழிகிறார். ஜெமோ யாரையாவது திட்டினால் பத்தி எழுதும் பலர், இப்போது காட்டுவதற்கு பெயர்தான் கள்ள மௌனம்.
இத்தகைய சூழலில் புழங்கத்தான் வேண்டுமா என்ற அவநம்பிக்கை முன் எப்போதும் இல்லாத அளவு இப்போது தோன்றுகிறது.

மாயக்கருத்தியல்

குவாண்டம் மெகானிக்ஸை முன்வைத்து நிறைய மாயயதார்த்த கருத்தாக்கங்கள் உலாவுகின்றன; அங்காங்கே மதம் சார்ந்த வாசிப்புகளும் மூளை மெனெக்கிட்டு நிகழ்கின்றன. அதற்கெல்லாம் கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்லமுடியாது; ஜாலியாக நிறைய செய்யலாம், பேசலாம். ஆனால் மனதில் நிறுத்த வேண்டியது - குவாண்டம் மெகானிக்ஸ் இதற்கு முன் மனித அறிவு ஆராய்ந்தடைந்த எந்த கோட்பாட்டையும் விட மிக மிக … மிக கறாரான, கணிதரீதியாக வடிவமைக்கப்பட்ட, கணித சட்டகத்தில் மட்டுமே முன்வைக்கப்பட்ட, அதே நேரம் பல்லாயிரக்கணக்கான நடைமுறை சோதனைகளால் சரி பார்க்கப்பட்ட ஒரு தியரி. அதில் எந்தவித மம்போ ஜம்போவிற்கும் இடமில்லை. இதை புரிந்து கொள்ள வெறும் ஆச்சரியம் கொள்ளும் கலையார்வமும், உணர்வு பூர்வமான உளநிலை மட்டும் போதாது; நிரம்ப மூளை உழைப்புடனான அர்பணிப்பும் வாசிப்பும் தேவை.

மாற்றுக் காரணம்

ஒரு வாக்கெடுப்பு நடந்தால் அந்த இளைஞனை தூக்கில் போடுவதற்கு ஆதரவாகத்தான் முடிவாகும்; இந்தியாவின் அந்த பெரும்பான்மை பொதுப்புத்தியை மீறி அவன் விடுதலை செய்யப்படுவது, எனக்கு இந்தியா என்ற சட்டகத்தின் மீதும், அதன் அரசியல் சட்டம், அதன் ஜனநாயகம் மீதும் நம்பிக்கைக்கான ஒரு காரணமாகிறது.

Saturday, December 19, 2015

நம்பிக்கையும் மனித நேசமும்

/மனிதநேயம் வரவைக்க தான் இறைவன் இந்த பேரிடரை ஏவியிருக்கிறார்ன்னு உமாஷங்கர் IAS சொல்லியிருந்தா , இங்க இருக்க யோக்கிய சிகாமணிகள் என்ன பேசியிருப்பாங்கன்னு நல்லா தெரியுமே:)/ என்று ஒருவர் எழுதியிருந்ததை சற்று முன் பார்த்தேன். மனுஷ்யபுத்திரன் உட்பட பல அறிவாளிகள் இந்த கேள்வியை கேட்டுள்ளதால், இதை எதிர்கொண்டு பதில் சொல்வோமே என்று இந்த பதிவு.
முதலில் இந்த கருத்து கந்தசாமிகளின் -அதிலும் ஃபேஸ்புக் கருத்து கந்தசாமிகளின் - பிரச்சனை என்னவெனில், மிக மேலோட்டமாக, ஒரு தர்க்கம் என்பது போல தோன்றும் ஒன்று மனதில் பட்டதும் அதை ஒரு கருத்தாக மாற்றிவிடுவது; குறைந்த பட்சமாக அந்த தர்க்கம் உதாரணத்துடன் பொருந்துகிறதா என்று பரிசீலிக்கும் பொறுமையும் பயிற்சியும் கிடையாது என்பதுதான். உமா ஷங்கர் ஒருபோதும் /மனிதநேயம் வரவைக்க தான் இறைவன் இந்த பேரிடரை ஏவியிருக்கிறார் / என்று சொல்லமாட்டார்; சொல்லவில்லை. ஏசு மீதான நம்பிக்கையின்மையால் நடந்ததாகத்தான் சொல்கிறார். இது மற்ற மதத்தினரை கோபமுற செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் விஷயம் என்னவென்றால் ஒரு நம்பிக்கையாளனாக, அவரது நம்பிக்கைக்கு முழு நேர்மையுடன் அவர் அவ்வாறுதான் சொல்லமுடியும். ஆனால் அந்த நேர்மை மத நல்லிணக்கத்திற்கு விரோதமானது; அந்த வகையில் அது மானுட விடுதலைக்கு விரோதமானது.
இதேபோல காஃபிர்களுக்கு கிடைத்த தண்டனை, ஒரு பாலுறவினர் மிகுந்ததால் ஏற்பட்டது, சங்கராச்சாரியாரை அவமதித்ததால் நடந்தது என்று எது சொன்னாலும் அது மானுட விரோதமானது என்ற முடிவுக்கு அதனதன் தர்க்கத்தில் நாம் வரலாம்.
இளையராஜாவும் ஒரு நம்பிக்கையாளர்தான்; எல்லா நம்பிக்கையளனும் இயற்கையின் செயலை கடவுள் செயலாகத்தான் கற்பிக்க வேண்டியுள்ளது; ஆனால் அவர் இந்துப் பன்மை மரபில் வந்த நம்பிக்கையாளர் என்பதால், அவர் மற்ற நம்பிக்கையை முன்வைத்து, குறைந்த பட்சம் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களால் இந்த பேரழிவு நிகழ்ந்ததாக கூட சொல்லவில்லை. மனிததன்மை இல்லாததால், நமக்கு மனித தன்மையை வரவழைக்க நமக்கு ஆண்டவன் இந்த தண்டனை அளித்ததாக கூறுகிறார். கவனிக்க வேண்டும், அவர் மற்றவர்களுக்கு அளித்த தண்டனையாக இதை சொல்லவில்லை; தன்னையும் சேர்த்து தனக்கும் கிடைத்த தண்டனையாக சொல்கிறார். இன்று வெளிபட்ட மனிதாபிமானத்தை முன்வைத்து -தானும் மனிதாபிமானத்தை காட்ட நேர்ந்ததை -இந்த பேரழிவின் நண்மையாக கற்பித்து, இந்த நோக்கத்தில் இறைவன் அளித்த தண்டனையாக சொல்கிறார்.  ஒரு நம்பிக்கையாளனாக  இளையராஜா சொல்வதை நான் கொஞ்சம் கூட ஏற்கவில்லை. அவரது இசையும், இசை சார்ந்த கருத்துரைப்புகளும் மட்டும்தான் எனக்கு முக்கியம். என்றாலும் அவரது இந்த கருத்து உதிர்ப்பு எந்த வகையிலும் மானுட விரோததன்மை கொண்டது அல்ல, மாறாக மனித நேயம் சார்ந்தது என்பதுதான் என் பார்வை.
மற்றபடி புவி சூடேற்றத்தினாலும், நீர்நிலைகளின் உணர்வை மதிக்காததாலும், சரியான வடிகால் ஏற்பாடு செய்யாததாலும், இதற்கெல்லாம் மேலாக இந்த அரசின் மடத்தனத்தாலும் இது நிகழ்ந்தது என்பது என் கருத்து. எனது இந்த கருத்தை இசையமைப்பாளரான இளையராஜா அதே போல அச்சுபிசகாமல் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று, அறிவாளியாக தன்னை கற்பித்துக் கொண்ட சில முட்டாள்கள் கருதுவது போல, நான் நினைக்கவில்லை. அவர் எதை நமக்கு இதுவரை அளித்துள்ளாரோ அதுவே தமிழகத்தின் தகுதி மீறீயது.

Friday, December 18, 2015

இசையர்த்தம்

பிரதியின் ஒரு வரியை உரைநடையாக வாசித்து அர்த்தம் கற்பிப்பதில், வாசிப்பவருக்கும், சூழலுக்கும், அவரது மொழிக்கிடங்கிற்கும், ஆழ்மனதிற்கும் இன்னும் பலவற்றிற்கும் தொடர்பு இருப்பதை, ரோலண்ட் பர்த்தின் ஒரு வரியை கூட வாசித்திராத பலரும் கேள்விப்பட்டிருப்பர். இப்படியிருக்க, இசையில் உட்கார்ந்த ஒரு பாடல்வரி, அர்த்தத்தை பின்னுக்கு தள்ளி, உணர்வை முன்நிலைப் படுத்தும் போது, பாடல்வரியின் இயக்கம் மிக மிக இன்னமும் சிக்கலாகின்றது. எழுதி வாசித்தால் ஒரு அர்த்தமும் இல்லாத பாடல்வரி, கேட்கும்போது பெரும் கிளர்ச்சியை தூண்டுவதும், சாதரணத் தோற்றமளிக்கும் வரி, வடிகாலாக்கும் அழுகையை பீறிட வைப்பதும் இந்த சிக்கலான இயக்கத்தின் சில வெளிபாடுகள். இதை தத்துவரீதியாக சுயம்புவாக சிந்தித்து தான் வந்தடைந்ததை விளக்கத்தான் இளையராஜா, அர்த்தரீதியாக சாதரணமாக இருக்கும் ஒரு வரி இசையின் மூலமாக பேரர்த்தம் பெறுவதாக சொல்லவருகிறார். அதற்கு அவர் எடுத்தாண்ட 'தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்' என்பது துரதிர்ஷ்டவசமாக ஒரு தவறான உதாரணம். தன்னளவிலேயே அது மிகவும் கவித்துவமான வரி என்பதை அவரால் அணுகமுடியவில்லை; ஆனால் இசையில் அவ்வரி வேறு உணர்வுத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை அவர் விளக்கினாலும், அவர் பேச வந்த விஷயத்திற்கு பொருத்தமில்லாத உதாரணமாகிறது. பொருத்தமான பல உதாரணங்கள் அவரது இசையில் நிறைந்து இருந்தாலும், தன்னை பற்றி தானே பேசுவதன் பிரச்சனையால் அவரால் அந்த உதாரணங்களை எடுத்தாள முடியவில்லை.
உதாரணமாக இப்போது நான் கேட்டுக் கொண்டிருக்கும், "மாலை செவ்வானம் உன் கோலம்தானோ… வானம் .. அது நாளும்… எழுதும் ஓவியம்.. உன்னெழில் ஆகுமோ… நாளை பூமாலை என் தோளில் ஆடும்.. அன்பும்… தமிழ் பண்பும்… தலைவன் உன்னிடம் என்னையே தந்தது.." மெனெக்கிடாமல் எதேச்சையாக எடுத்ததால், வாசிக்கும் போது கொஞ்சம் அர்த்தமளித்தாலும் மிக மிக சாதாரண அற்பமான வரிகள். ஆனால் வரிகளின் அர்த்த அபத்தம், எந்த பிரச்சனையையும் இடையூறையும் செய்யாமல், பெரும் கிளர்ச்சியை கேட்பவனுக்கு அளிக்கிறது; இசையின் முலமாக ஒரு அர்த்தப் பரிமாணத்தை அடைகிறது. (எல்லோருக்கும்னு சொல்ல வரலை; யாருக்கு அளிக்கிறதோ அவர்களுடன் மட்டுமே இந்த பதிவு உரையாட விழைகிறது.) அல்லது 'காலங்கள்.. மழைக்காலங்கள்' என்ற பாடலை எடுக்கலாம்; நேரடியாக எழுதி வாசித்தால் பாதிக்கு மேல் சுத்த நான்சென்சாக தெரியும் வரிகள். அதை கண்ணதாசன் எழுதியுள்ளார் என்பதை நினைவில் கொண்டு அணுகும்போது, இசைக்காக பேரர்த்தம் பொருந்தி அந்த வரிகள் எழுதப்பட்டுள்ளதை உணரலாம்.
மிக முக்கிய உதாரணமாக பினவரும் வரிகளை உரைநடையாக வாசியுங்கள் "வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்; வாழ்வென்பதின் பாவங்களை நான் காண வேண்டும். நாளும் பல நன்மை… காணும் எழில் பெண்மை… பூவை வைத்த பூவாசம்… கோதை கொண்ட உன் நேசம்… தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ" இந்த பாட்டை கேட்டிராதவர் வாசித்தால் என்ன ஒரு அர்தக்கோர்வையற்ற, அர்த்தம் வந்தாலும் சாதாரணமான வரிகள். ஆனால் இந்த பாட்டை கேட்டுக்கொண்டு சாகத்தயாராக இருக்கும் ஜீவன்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் என்பது என் எண்ணம். மிகச்சாதாரண வார்த்தைகள் இசையில் உட்காரும்போது, மொத்த மானுட சோகத்தையும், சோகத்தின் பேருவகையையும் உருவாக்குகிறது. இது போல உதாரணங்கள் இளையராஜா பாடல்களில் பஞ்சமே இல்லை. ஆயிரம் பக்க தடிமனில் புத்தகம் எழுதலாம்.
மகுடேஸ்வரனின் இந்த பதிவு குறித்து, அவர் அழுததற்கு 'பாடல்வரிகளும், மெட்டும் காரணமல்ல அழுகையை அடக்கி வைத்த செயல்தான் காரணம்' என்று ஒரு கருத்து கந்தசாமி விமர்சகர் எழுதியதை வேறு இடத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போது சந்தித்து வரும் தமிழ் சமுகத்தின் அறிவுக்கு எதிரான தொற்று மனநோய் எபிடெமிக்கினிடையில், தீங்கற்றதாக புன்னகையை மட்டுமே அக்கருத்து வரவழைத்தது என்றாலும், அதற்கு ஒரு நேர்மறை பயனாக நமக்கு தோன்றியதை பதிவு செய்வோமே என்று…