Monday, December 14, 2015

FB ஏப்ரல் 8

இஸ்லாம் பற்றி பத்ரி சேஷாத்ரியோ, அரவிந்தன் நீலகண்டனோ, இஸ்லாம் பற்றி எதையுமே வாசிக்காத ஒருவர் கூட பாசிடிவாக ஒரு ஃபேஸ்புக் பதிவு போட்டால், இஸ்லாமியர்கள் கூட்டமாக அதை லைக் செய்வார்கள். ஒருமுறை (இஸ்லாமியத்தை விமர்சிக்கும், மோடியை ஆதரிக்கும்) சின்னக்கருப்பன் என்ற எழுத்தாளர் இஸ்லாம் பற்றி நல்லதாக எழுதிய போது, திண்ணையில் அதற்கு மகிழ்ந்து பாராட்டை முஸ்லீம்கள் தெரிவித்திருந்தனர்; இன்னும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. இளையராஜாவை திட்டும் ஒருவர், எங்காவது ராஜாவை பாராட்டினால் கூட ராஜா ரசிகர்கள் சிலர் அதை லைக் செய்வார்கள். இது சாதாரண மனித இயல்பு.
எத்தனையோ கரணங்களுக்காக கருணாநிதியை திட்டுவதை புரிந்து கொள்ளமுடியும். கலைஞரின் ̀ராமானுஜர்' இன்னும் வெளிவரக்கூட இல்லை; அவர் நிச்சயமாக ராமனுஜரை பற்றி இழிவாக எதையும் எழுதப்போவதில்லை; பாசிடிவாகத்தான் எழுதப்போகிறார் என்று முன்னோட்டத்திலேயே தெரிகிறது. அதற்குள் எத்தனை வெறுப்புகள்! இப்படி தனக்கு பிடித்ததை பற்றி, தனக்கு பிடிக்காதவன் எழுதுகிறான் என்கிற ஒரே காரணத்திற்காகவே, வாசிக்காமலே வெறுக்கும் மக்கள் கூட்டம் வேறு எங்கும் இருக்குமா என்று தெரியவில்லை.
கலைஞரின் ராமானுஜர் பற்றி எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை; ̀மந்திரி குமாரி'க்கு பிறகு நான் கலைஞர் எழுத்தை ரசிப்பதும் இல்லை. வெகுஜன பார்வையாளர்களுக்கு ராமனுஜரை பற்றி ஒரு ஆழமான க்ளசிக்கை உருவாக்க எந்த தேவையும் இல்லை; கவிதை என்று நினைத்து ஆபாசமான அடுக்கு வார்த்தைகளில் வாலி எழுதுவதை விட எவரும் எழுதி ஏதேனும் ஒரு நியாயத்தை செய்ய முடியும் என்பது என் எண்ணம்; வாலியை விமர்சிக்காதவர்கள், இன்னும் காணவே கிடைக்காத ஒன்றை பற்றி எத்தனை வெறுப்புடன் கிண்டலும் கேலியுமாக எழுதிக் கொண்டே இருக்கிறா ர்கள். ஒரு நூற்றாண்டு காலமாய் தங்களை எந்த சுயவிமர்சனமும் செய்துகொள்ளாத கூட்டம் ஆங்கில நாளிதழ்களில் தங்கள் மீதான விசாரணைகளை கற்பித்து ஒப்பாரி வைத்து வருகிறது.

No comments:

Post a Comment