Monday, December 14, 2015

பொய் செய்தி குறித்த பொய்ப்புலம்பல்கள் (11 அக்டோபர் FB)

இணையத்தில் தலித் மீது தாக்குதல் நடந்ததாக ஒரு போலி வீடியோ வெளியாகி, அதை நம்பி பலர் கொந்தளித்ததில் எந்த தவறும் போலித்தனமும் இல்லை. தலித் மீது அனுதினம் ஒரு தாக்குதல் நடக்கிறது. இந்த வீடியோ பொய்யாக இருந்தாலும், இந்த சமூக மனம் அழுகிப்போன, சாதிய நாற்றம் பிடித்த, அறமற்றது என்பது நிதர்சனம். இதற்கு ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளது. தலித் ஒருவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு சதவிகிதம் அறிந்தவர் கூட வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் நியாயத்தை உணருவர். இந்த விவகாரத்திலும் தலித் செய்த புகார் கணக்கில் கொள்ளப்படாததும் அதனாலேயே அவர்கள் இப்படி ஒரு போராட்டத்தில் இறங்கினார்கள் என்பதும் ஒரு பேசவேண்டிய அம்சம்தான். போலியானது என்பது என்ன என்றால், இந்த ஒரு வீடியோ பொய்யான காரணத்தால், ஏதோ இந்தியா சமூகம் பற்றி அபாண்டமாக எதோ கூறிவிட்டதாக எழும்பும் புலம்பல்தான். கொஞ்சம் கூட வெட்கமும், குற்றவுணர்வும் அற்ற பொய்ப் புலம்பல்.

No comments:

Post a Comment