Tuesday, April 27, 2010

துளியுரைகள்-9.


 இந்திய-சிங்களப் படைகள் இணைந்து கண்காணிக்க, இனி வரும் மீனவர் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று நேரடியாக எடுக்து கொள்ளலாம் ... 12:58 PM Oct 4th, 2008

(பாரா தொட்டு சென்றதை போல) கீ போர்டும் ஆர்கனும் தமிழ் சினிமா திரையிசையின் சாபம். சகித்து சகஜமாக்கிக் கொள்ளும் அளவிற்கு ரஹ்மான் பழக்கப்படுத்திவிட்டார் ... 1:37 PM Oct 6th, 2008

ஒரு மாதம் முன்னால் கூட வெறும் வாய்சவடால் என்றுதான் தோன்றியது; இப்போது உண்மையிலேயே பிரபாகரனையே கூட பிடித்துவிடுவார்கள் போல இருக்கிறது ... 1:00 PM Oct 7th, 2008

ஈழப்போர் இந்த விதத்தில் முடிவுக்கு வந்தால் இதை விட மோசமான நெருக்கடியை தமிழினம் அடையமுடியாது; ஒட்டுமொத்தமாய் விரட்டப்பட கூட நேரலாம். ... 1:02 PM Oct 7th, 2008

தமிழ்நாட்டு மீனவனை கொல்வதை கூட கேட்க வக்கில்லாத மாநிலஅரசு, உடந்தையாக இந்தியா; ஈழத்தமிழனுக்கு புலியின் இருப்பை தவிர வேறு நாதி இருப்பதாக தெரியவில்லை ... 1:10 PM Oct 7th, 2008

இன்றய நாதியற்ற சூழலை அடைய மற்ற எல்லாரையும் விட புலிகளின் பங்கே மன்னிக்க முடியாததாக இருக்கிறது என்பது வேறு விஷயம் ... 1:19 PM Oct 7th, 2008

இந்த சாரு என்ற முட்டாள் என்ன எழவிற்கு தனக்கு வராத, தெரியாத, குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத விஷயங்களை பற்றி எழுதுகிறார்! உதாரணமாய் அரசியல், இசை ... 10:55 PM Oct 8th, 2008

சாருவின் எழுத்திற்கு முக்கியத்துவம் உண்டு; அதற்கே படிக்க போகிறேன். ஆனால் ஏதோ அத்துமீறல், கலகம், குடி, யோனி என்று எழுதிவிட்டு போக வேண்டியதுதானே! ... 10:57 PM Oct 8th, 2008

சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பற்றிய பதிவின் முதல் பத்தியை படித்துவிட்டு எழுதுகிறேன்; என்ன ஒரு முட்டாள்தனம்! ... 10:58 PM Oct 8th, 2008

இந்தியாவில் தமிழ்நாட்டைபோல அரசியல் உணர்வும், அரசியல் சார்ந்த விவாதமும் உள்ள மாநிலம் வேறு கிடையாது;வங்காளம்/கேரளம் விஷயம் வேறு. இந்த அடிப்படை கூட தெரியாமல் பல முட்டாள்கள் ஆங்கிலத்தில் பத்தி எழுதலாம்; லொக்கல் முட்டாளுக்கு அந்த அவசியம் என்ன?! ... 11:01 PM Oct 8th, 2008

சாரு சிரஞ்சீவி பற்றிய அரைவேக்காடு கட்டுரையை எழுதியிருப்பது கலாகௌமுதியில்; 'காட்டிகொடுப்பதாக' ஜேமோவை திட்டிய ஆசாமிதான், மலையாள அரகன்ஸ் குறித்த பிரஞ்ஞையில்லாமல், தமிழ்நாட்டு மக்களை அரசியல் உணர்வற்றவர்களாக சொல்லி கட்டுரையை தொடங்குகிறது ... 6:44 PM Oct 17th, 2008

இன்னொரு கேஸ் இந்த தமிழவன்; வலம்புரி ஜான் எப்படி ஒரு அறிவாளி, திராவிட இயக்கம் அதை எப்படி நாசமாக்கியது என்பதற்கு ஆதரமில்லாமல் http://is.gd/4inE ... 12:21 PM Oct 18th, 2008

திராவிட இயக்கம் இன்றி ஜானை யாருக்கு தெரிந்திருக்கும்? வலம்புரி போன்ற ஆளுமைக்கான இடம் வேறு ஏது? தமிழவன் படித்தது எல்லாம் எங்கே போகிறது? ... 12:23 PM Oct 18th, 2008

அதாவது இலக்கிய சான்னித்தியம் இல்லையென தமிழவன் கருதும் ஒருவருக்கு, திராவிட இயக்கமன்றி சிறு பத்திரிகை வெளியில் எப்படி இருப்பு சாத்தியமாகியிருக்கும்? ... 12:28 PM Oct 18th, 2008

சரோஜா = மொக்கை + bizarre! யுவனின் இசை -எட்டுத்திசைலிருந்தும் இறக்கிய தேவையற்ற காரேமூரே பிண்ணணி. படம் சிலருக்கு பிடித்திருந்ததை புரிந்து கொள்ள முயல்கிறேன் ... 6:43 PM Oct 9th, 2008


'பொய் சொல்லபோறோம்' பார்த்தேன்; பிரம்மாதம்! சரோஜா என்ற மட்டசரக்கின் ஹேங் ஓவர் தீர்ந்தது. மலையாள தழுவல் இல்லை என நம்புகிறேன் ... 9:45 PM Oct 10th, 2008

என் பார்வையில் ஒரிஜினலான 'கோல்மாலை' விட தழுவலான தில்லுமுல்லு பல மடங்கு பிரமாதம்; அந்த ஒப்புமை குறித்து தெரியாவிட்டாலும், ஒரு திரைப்படம் தழுவப்பட்டாலும் மீண்டும் பிறப்பதாகவே நான் கருதுவதால், 'பொய் சொல்லப்போறோம்' அதனளவில் சிறந்த ஒரு படம் என்றே நினைக்கிறேன் ... 10:56 PM Oct 10th, 2008

சன்னில் செய்தி. *இந்திய கடலெல்லைக்குள்* மீனவர் மீது இலங்கை கடற்படை பயங்கர தாக்குதல்; இந்தியப்படை கூட ரோந்துக்கு சென்றதா என்று தெரியவில்லை ... 7:05 PM Oct 9th, 2008

கத்தியால் குத்தி காயத்தில் உப்பு வைத்து அனுப்பினார்களாம்! புலி என்று நினைத்துதான் இப்படி செய்ததாக ஷீலா தீகஷிட் பத்ரியிடம் சொல்லி அனுப்பலாம் ... 7:08 PM Oct 9th, 2008


தமிழின் ஒரேயொரு மாஎழுத்தாளரின் அடுத்த நாவல் 12பாகங்களில் மொத்தம் 12000பக்கங்களில் என்று அரசல் புரசல். உலகில் 12000பக்க நாவல் வந்துள்ளதா? ... 8:00 PM Oct 13th, 2008

@arulselvan (எழுதிய) அவரே 36000 பக்கங்களில் விமர்சனம் எழுதும் திறமையும், உழைப்பும், துணிவும், மடமையும் கொண்டவர் ... 12:08 AM Oct 15th, 2008 from web in reply to arulselvan

ஹரன் பிரசன்னாவுடன் பேசிய போது இந்த வதந்தி 'சரியான தகவல்' இல்லை என்றார்; ஆனால் எனக்கு கிடைத்து பூசாரியிடமிருந்து, ஒரு கை மாறி இரண்டாம் கை தகவலாக. ... 11:31 PM Oct 14th, 2008

எனது இந்தியா' பதிவின் தொடர்சிகளை படித்து மனதார சொல்றேன். ஜெயமோகனின் எழுத்துக்களை போல கயமை நிறைந்தது வேறு இருக்க முடியாது. இதை சொல்லும் நான் இஸ்லாமிய அடிப்படைவாதம், ஸெகூலர் அரசியல் சார்ந்த வன்முறைகளை விமர்சிக்கிறேன்; இந்து(இந்திய) சமுதாயத்தின் பண்மைதன்மை பற்றிய சில கருத்துக்களையும் ஏற்கிறேன்; ஜெயமோகனின் புனைவுத்திறனையும், உழைப்புயும் கூட மதிக்கிறேன். இத்தனையும் சொல்லிவிட்டு, பலவிதங்களில் பலர் சொல்லி அலுத்தது என்றாலும், ஜெமோவின் எழுத்து போல விஷத்தன்மை கொண்டது வேறில்லை என்றும் சொல்கிறேன். 9:58 PM Oct 15th, 2008

ஜெயமோகனை படித்து வரும் கோபத்தை எழுத்தில் உடனடியாய் காட்டிவிடுவது நலம்; குறிப்பாக ஜேமோவை தொடர்ந்து நிதனமாய் படிக்க அது மிக உதவும் ... 10:41 PM Oct 15th, 2008


விஜயகாந்தின் அலைமோதிய கூட்டம் கடற்கரை பக்க சென்னையை இன்று ஸ்தம்பித்தது என்றால் மிகையில்லை; காசு கொடுத்து இந்த லட்சக் கூட்டத்தை நிகழ்த்தியிருக்க இயலாது ... 12:26 AM Oct 19th, 2008

பத்து வருடத்தில் விஜயகாந்த் உண்மையிலேயே ஆட்சிக்கு வருவாரோ என்று பயமாயிருக்கிறது; வேறு பயங்களிருந்தாலும் இது தமிழகம் பற்றிய முக்கிய பயம் ... 2:04 AM Oct 19th, 2008

Zக்காரியா மீதிருந்த அபிமானத்தாலும், வீட்டிற்கு பக்கத்தில் என்பதாலும் சாருவின் ஜீரோ டிகிரி வாசிப்பு கூட்டத்திற்கு சென்றேன்; நல்ல விஸ்கியும், சில நட்புகளும் கிட்டின ... 12:15 AM Oct 19th, 2008

அச்சு பிச்சு கேள்விகள்(நானும்), எதிர்வினைகள். குறிப்பிடும் நிகழ்வு-Zக்காரியாவுடன் பேசியது உட்பட-எதுவுமில்லை; Subversionஇன் பரிமாணம் இதுதான் என்பதால் 'fuck it' என்பதை தவிர சொல்ல வேறு இல்லை ... 12:59 AM Oct 19th, 2008

(சில தொடர் ட்வீட்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.)

Saturday, April 24, 2010

துளியுரைகள்-8

சன் டீவியில் 'பள்ளிக்கூடம்'. பார்ப்பதை தொடர இயலும் ஒரு 'நல்ல' மலையாளப் படம் போல போய்கொண்டிருக்கிறது. 'ரோஸ்மேரி'பாடலின் கான்செப்ட் மட்டும் புரியவில்லை ... 6:09 PM Sep 27th, 2008

'அழகி' போல இன்னொரு திரைப்படத்தை தங்கர் எப்போது தருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் அப்படி இருக்குமோ வென்று தோன்று வகையில் போய்கொண்டிருக்கிறது ... 6:19 PM Sep 27th, 2008

என்ன எழவுக்கு இளயராஜா இந்த படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று தெரியவில்லை. 6:57 PM Sep 27th, 2008


கோர்ட் சீனில் ஸ்நேகா சாட்சி சொல்லும்போது பின்னால் பெரியார் படம்! இவங்க அரசியல் விசுவாசத்திற்கு அளவேயில்லையா?! அல்லது இது மீகற்பனையா? ... 8:18 PM Sep 27th, 2008

பார்த்தாகி விட்டது; 'அழகி' போன்ற ஒரு கிளாசிக்குடன் ஒப்பிட முடியாது. ஆனால் யாருடைய கவனத்தையும் இந்த படம் ஏன் ஈர்க்கவேயில்லை? ... 8:28 PM Sep 27th, 2008

String theoryஇல் ஆராய்சி செய்யும் நண்பன் ஒருவன் சொன்ன விஷயம்: TIFR conference ஒன்றில் இழை கோட்பாட்டில் தலையாய பங்களிப்பு செய்த அறிவியலாளரிடம் நிருபர் 'Stephen Hawkingஐ பார்பதற்காக இந்தியா வந்தீர்களா? ' என்று கேட்டாராம். ... 2:02 PM Sep 29th, 2008

ஹாக்கிங்காவது யதார்த்தத்தில் அறிவியலாளர்; அறிவியலில் பங்களிப்புகள் உண்டு. நம்மூரில் அப்துல் கலாமை தலை சிறந்த விஞ்ஞானியாக, விஞ்ஞானியாகும் லட்சியத்திற்கான திருவுருவாக்கியிருக்கிறார்கள் ... 2:50 PM Sep 29th, 2008

Gazaவில் செத்தவர் செய்தியை தினமும் படிப்பது போல், இப்போது தமிழ் மீனவர்களை சிங்களப்படை சுட்டு கொல்வதை சாதாரணமாக படித்துவிட்டு அலுவலை கவனிக்கும் நிலமை ... 4:32 PM Sep 29th, 2008

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் நடத்துக்கிறார்களாம்! மெண்டலா? போராட வேண்டியது இந்தியாவை எதிர்த்து! ... 4:35 PM Sep 29th, 2008

உலகத்தில் எந்த இனத்திற்கு இது நடந்தாலும் கிளர்ந்து எழவும், உலகின் கவனத்தை கவரும் வகையில் செயல்படவும் கூட்டம் இருக்கும் ... 4:37 PM Sep 29th, 2008

தமிழ்நாட்டில் சுரணையற்று இருப்பது அல்ல விசயம்; திசை திருப்புவதும், கொலைகாரரகளுக்கு வக்காலத்து வாங்குவதும், பேசுபவனை தேசத்துரோகி ஆக்குவதும்! ... 4:41 PM Sep 29th, 2008

புலிகள்தான் மீனவர்களை சுடுவதாக ஒரு நாடகத்தை நிகழ்வேற்றியதையும், அதை துக்ளக் துவங்கி வலைப்பதிவு வரை பிரச்சாரம் செய்ததையும் மறக்க முடியுமா? ... 4:43 PM Sep 29th, 2008

நம் மீனவர்கள் ட்ராலரில் மீன் பிடித்து, அதனால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிப்பதால்தான் இந்த கொலைகள் நடப்பதாக ஒரு மலப்புழு என் பதிவிற்கு பதிலாக தொடர்பதிவுகள் எழுதி, அதற்கு ஜால்ராவாக கூட்டமாக பின்னூட்டம் வந்ததையும் மறக்க முடியுமா? ... 4:47 PM Sep 29th, 2008

@snapjudge என் பார்வையில் 'பொலிடிகலி இன்கரெக்ட்' என்று எதுவும் (not correct உண்டு) இல்லை; அது ரவி ஶ்ரீனிவாசின் அச்சு பிச்சு கான்செப்ட் ... 9:47 PM Sep 29th, 2008 from web in reply to snapjudge

'Political correctness'இன் ஆபாசத்திற்கு அண்மைய உதாரணம் 'கற்றது தமிழ்'. இன்னொரு உதாரணம் வேலு பிரபாகரனின் ' புரட்சிக்காரன்' ... 9:49 PM Sep 29th, 2008

'பொலிடிகலி கரெக்ட்னெஸ் கொண்ட அதே நேரம் கலையாகவும் மாறிய உதாரணம் 'அன்பேசிவம்'; அண்மைய உதாரணம் 'கல்லூரி' ... 9:51 PM Sep 29th, 2008

'தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு' விஜய் நிகழ்ச்சியை ஐந்து முறை முயற்சித்தும் (வெள்ளாள பரப்புரையால் ஏறும் ரத்த அழுத்தத்தில்) பார்க்க இயலவில்லை. ... 10:08 PM Sep 29th, 2008

விரிவாக அறிவுபூர்வமாக எழுத தேவை உள்ள விஷயங்களை 'விரிவஞ்சி நிறுத்தி'க்கொள்ளும் ரவி ஶ்ரீனிவாஸ், மொக்கைகளை மட்டும் விரிவாக தருவதேனோ! ... 6:49 PM Oct 2nd, 2008

Monday, April 19, 2010

இறுதியாக சில.

நடந்து முடிந்த கருத்து சுதந்திர பிரச்சனை, கண்டனம், கலாட்டா குறித்து எனக்கு மிக சிக்கலான முறையில் பலர் மீதும் பலவகையான விமர்சன கருத்துக்கள் இருந்தாலும், இதையெல்லாம் வேலை மெனக்கிட்டு பதிவு செய்யவேண்டியது முக்கியமாக தோன்றவில்லை. சில முடிச்சுகளை மட்டும் இங்கே பதிகிறேன்.

அதற்கு முன் சம்பிரதாயமாக சில. லீனாவின் கவிதை எந்த வித தகுதியும் இல்லாமல் ஒரு அதிகப்படியான முக்கியத்துவத்தையும் விளம்பரத்தையும் அடைந்துள்ளது. இப்போதாவது நேரடியாக சொல்வதென்றால் கவிதை என்ற அளவில் அதை ஒரு குப்பையாகவே கருதுகிறேன். மீண்டும் சொல்கிறேன், ஆபாசம் என்ற பார்வையில் அல்ல. பா.விஜயின் கவிதையை குப்பை என்று ஏன் சொல்வேனோ அதை ஒத்த காரணங்களால் சொல்கிறேன். அதை உலக கலக ரேஞ்சுக்கு இட்டு சென்றதில் வினவு குழுவினரின் பங்கு மறுக்கவியலாதது. அதே நேரம் வினவில் வெளிபட்ட ஆணாதிக்க எதிர்வினைகள், பெண் என்பதாலேயே அவர்கள் இன்னமும் காட்டும் பிடிவாதம், அடிக்கவும் தயாராக இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, சமூக மதிப்பிடுகளை இந்துத்வ இயக்கங்களை போலவே இவர்களும் பயன்படுத்துவது, தர்க்கப்படுத்துவது ... இவை அனைத்தையும் எதிர்க்கிறேன். அவர்களிடம் ஏதோ ஒரு நேர்மை வெளிப்படுவதாக கருதி கூட ஆதரிக்க முடியாது. அந்த நேர்மையை நான் இன்னமும் ஆபத்தானதாக கருதுகிறேன் -போல்பாட்டிடம் வெளிபட்ட நேர்மையை போன்றது. இதைவிட நான் ஹிபாக்கரசியையே மேலானதாக கருதுவேன்.

நாகம்மையை 'தேவிடியா' என்று காங்கிரஸ் தெருவில் எழுதியதை பெரியார் எதிர்கொண்டது போல எதிர்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பேசுவது இருக்கும் பல அபத்த தர்க்கங்களில் ஒரு உதாரணம். சமூக மதிப்பிடுகளை ஆயுத மாக்குவதுதான் பிரச்சனையே ஒழிய, அதை எதிர்த்தாலோ எதிர்வினை செய்தாலோ, அந்த மதிப்பீடுகள் சார்ந்து செய்வதாக கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் பெரியாருக்கு ஆண் என்ற வசதியும் சுதந்திரமும் இருந்ததையும், அவ்வளவு எளிதில் அதை புரியாதவர்களுக்கு விளக்க முடியாது. மதிப்பிடுகள் ஆணாதிக்கமாக இருக்கும் யதார்த்தத்தில் அதை பயன்படுத்துவதும், நிராகரிப்பதுவும் இரண்டுமே ஆணுக்குதான் சாதகமானது. இன்னொரு பார்வையில் பெண்ணீயம் பேசுவதும், எதிர்ப்பதும் இரண்டுமே வேறு வேறு தளங்களில் ஆண்களுக்கு சாதகமானதே. இது பெரியாருக்கும் பொருந்தும்; எனக்கும் பொருந்தும். ஆணாதிக்க மதிப்பீடுகளை நிராகரிப்பதாலும், பெண்ணியம் பேசுவதாலும் ஆண் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் மிஞ்சி போனால் மனைவியை, அம்மாவை உதாரணம் காட்டுவதற்கு மேல் எதுவுமில்லை. அதை எதிர்கொள்ளும் உரம் உள்ளவர்களுக்கு அது பிரச்சனையில்லை. ஆனால் அந்த அம்மாவிற்கும், மனைவிக்கும் அது அத்தனை எளிய பிரச்சனையில்லை. இதையெல்லாம் போல்பாட்டின் பொலிடிகலி கரெக்ட்னெஸ்ஸை சுய பிரஞ்ஞையாக கொண்டவர்களிடம் விளக்க முடியாது.

இவை இப்படியிருக்க NDTV-Hindu செய்த பதிவையும், அதில் லீனாவும், அ,மாவும் அளித்த சிறு பேட்டியை மோசமான ஒன்றாக கருதுகிறேன். ஒரு ஜனநாயக அடிப்படையில் எதிர்கருத்தாக எதையும் சின்னதாக அவர்கள் பதிவு செய்யவில்லை. குறைந்த படசம் (ஹுசேன் சரஸ்வதியை நங்காவாக வரைந்தார் என்பது போல கூட அல்லாமல்) எதிர்ப்பு வந்த லீனாவின் கவிதையை பற்றி எந்த தகவலையும் தராமல் ஒருதலை பட்சமான செய்தி அது. லீனா (காரல்)மார்க்சையும், லெனினையும் metaphoricalஆக பயன்படுத்தியதாக மட்டும் விடுகிறார். மெடாஃபாரிக்கலாக பயன்படுத்தியது மார்க்ஸ் லெனினையா, யோனி, விந்து, புணர்தல் போன்றவற்றையா? தமிழ்நாட்டில் ஏதோ கலாச்சார பாசிசம் தலை விரித்தாடுவதாக சொல்வதெல்லாம் தன் கோபத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மீது கொட்டும் விஷம் மட்டுமே. மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் இன்னமும் ஆரோக்கியமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். NDTV தமிழ்நாட்டை ஒரு பாசிச பூமியாக காட்டும் நோக்கத்துடன் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தருவது லீனாவிற்கு பிரச்சனையாக இல்லாதது குறித்து நான் கவலைப்படவில்லை, அ.மார்க்ஸும் துணை போவதுதான் எனக்கு பிரச்சனை. இறுதிவரை ஈழப்போரில் zero civilian casualties நிகழ்ந்ததாக இந்து ஊடக கும்பல் சொல்லி வந்ததை விட அயோக்கியத்தனமும், பாசிசமும் வேறு கிடையாது. அ.மார்க்ஸ் கூட்டத்தில் செய்த பிரச்சனையை, ஈழப்பிரச்சனையில் தங்கள் கையாலாகாத்தனத்திற்கு அவர்கள் தேடிக்கொள்ளும் வடிகாலாக கூட கருதலாம். இப்படி சொல்லி அதை நியாயப்படுதவில்லை. ஆனால் அது பாசிசம் அல்ல. ஒரு பெரும் இனப்படுகொலையை நியாயப்படுத்துவதும், அதை மறுப்பதும்தான் பாசிசம். அதை விட மனிதநேயத்தில் அக்கறையுள்ளவர்கள் முக்கியமாக கொள்ளவேண்டிய விஷயம் வேறு கிடையாது.

அ.மார்க்ஸ் லயோலாவில் நடந்ததையும், கண்டன ஒன்று கூடலில் நடந்ததையும் தமிழ் சேனல் ஒன்றிலோ, அல்லது தமிழ் சூழலில் வேறு எங்கிலோ பகிர்ந்தால் நான் பிரச்சனையாக பார்க்க மாட்டேன். தமிழ்நாட்டில் யாரோ ஒரு புருசன் பொண்டாட்டியை அடிப்பதை கூட தமிழ்பாசிசமாக மாற்றும் கூட்டத்தின் பிரச்சரத்திற்கு ஒத்து ஊதியிருக்க வேண்டாம். ஒருவேளை அதுதான் அ.மார்க்சின் நோக்கம் என்றால் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.

Sunday, April 18, 2010

கடித்து எலி சாதல்.

சிறுவயதின் ஒரு மழைக்கால ஈரத்தில் மிதித்ததில், தேள் ஒன்று மிகையழுத்தம் கொண்ட மின்னதிர்ச்சி தாக்குதலாக கொட்டி, நடக்க இயலாமல், அழுகையும் வலியுமாக, மருத்துவ சிகிச்சையுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. பாம்பு கடித்தால் சாகக்கூடிய வாய்ப்பு உண்டு என்றாலும், வலியனுபவத்தில் பாம்புக்கடி தேள்கடி போல கொடூரமாக இருக்காதாம். அவ்வளவு தீவிரமான தேள்கடி அனுபவத்தை சிறுவயதில் பெற்றும், அதில் சுவாரசியமாக சொல்ல எதுவும் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமானதுதான். பின், துவக்க தொண்ணூறுகளில், பெங்களூரில் நான் இருந்த கல்வி நிலையம் ஒன்றில் நட்டுவாக்களி என்ற பெரிய சைஸ் தேள்கள் மானாங்கன்னியாய் அலைந்தும் ஒரு முறை கூட கடி வாங்க நேர்ந்ததில்லை. (கடி வாங்கியிருந்தால் அந்த தீவிர அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்க கூடிய சாத்தியம் மிக குறைவு. ஏனெனில் நான் அறிந்தவரை நட்டுவாக்களி கடித்தால், அந்த வனாந்திரத்தில் போய் சேருவதற்குதான் வாய்ப்பு அதிகம். ஆனால் நட்டுவாக்களி தேள்களை போல் பொதுவாக போட்டுதள்ளுவதில்லை. அதன் பிடிமானம் சரியாக இருக்காத காரணத்தால், பிடித்து வாலால் அடித்து கொட்டுவதில் அதற்கு சிக்கல்கள் உண்டு.)

தூத்துக்குடியில் வாழ்ந்த இறுதி எண்பதுகளில் கஞ்சா பழக்கம் எனக்கு அறிமுகமாகி, பின் 13 வருடங்களுக்கு தொற்றிக் கொண்டிருந்தது. கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளிவந்திருந்த அந்த கட்டத்தில், சிவமூலிகை என்றழைக்கப்படும் கஞ்சாவை புகைப்பதற்காகவே சிவன் கோவிலுக்கு செல்வதுண்டு. பிரதட்சணமாக வந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பலமான கஞ்சா மணம் தினப்படி சுவாசத்தில் கலந்து பழக்கமாகியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் பீடி புகைப்பதாகவாவது தோற்றமளிக்கும் அந்த கஞ்சா புகைக்கும் காட்சியை கண்டு கொள்ளமாட்டார்கள். நாங்களும் யாராவது கடக்கும்போது கைகளுக்கிடையில் மறைக்கும் மரியாதையை செய்வதுண்டு. பிரச்சனை யாரும் செய்ததில்லை. கோவில் பணியாளர்கள், கோவில் வாசலை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்று பலரும் புகைக்கும் குழுவில் அடக்கம். ஒரு இளைய பட்டரும் சில சந்தர்ப்பங்களில் ஓரிரு இழுப்பு இழுத்துவிட்டு செல்வதுண்டு. சிவன் கோவில் பிரகாரம் கஞ்சா புகைப்பதனால் மட்டும் வித்தியாசப்படவில்லை. இன்னமும் சமூக வெளியில் அங்கீகாரம் பெற்றிராததனால், காதலை கள்ளத்தனமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், காதலர்கள் கூடுவதற்கு தேவையான மாலை இருட்டையும் அது அளித்தது. நகரில் பல இடங்களில் நெருக்கடி ஏற்படும் சில சீசன்களில் கள்ளசாராயமும் கிடைக்கும்; வாங்கி சிவன் கோவில் மூலை சுவரில் ஒண்ணுக்கு அடிப்பது போன்று நடித்தபடி, அந்த சில நிமிடங்களில் குடித்துவிட்டு சுவருக்கு பின்னால் எரிந்துவிட வேண்டும்.

ஒரு முன்பகல் வேளையில், கிடைத்த ஒரு நயம் சரக்கின் போதையுடன், மூடியிருந்த சன்னதிகளின் படிகளில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சின்னதாக இடுப்பில் அரிப்பு, சிறிது நேரத்தில் மெல்லிய கடுப்பாக மாறியது. எறும்பு என்று நினைத்து பார்காமலேயே தட்டிவிட்டு பேச்சை தொடர்ந்தேன். ஒரு கால இடைவெளியில் கடுப்பு கவனத்தை கட்டாயமாக ஈர்க்கும் வலுவை அடைந்ததால் எழுந்துவிட்டு பார்த்தேன். ஒரு குட்டி தேள். ஒருமுறைக்கு மேல் கடித்திருக்க கூடும். தேள் என்று அறிந்தவுடன் கடுப்பின் காட்டம் உணரத் தொடங்கியது; ஆனாலும் வலி பெருசாக இல்லை. என்ன செய்வது என்று ஐடியா இல்லை. தேள் குட்டிக்கு என்னை கடித்ததில் போதையேறிவிட்டது போலும், அசையாமல் கிட்டதட்ட மயங்கிய நிலையிலிருந்தது. "அது செத்துரும்" என்றான் கஞ்சா தோழன் உறுதியாக. செத்ததா என்று பொறுத்திருந்து ஆராயாமல், தேளை வேறு எதுவும் செய்யாமல் நகர்ந்தோம். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வாங்கி தடவலாமா என்ற யோசனையையும் செயல்படுத்தாமல், வேறு இடத்தில் உட்கார்ந்து இன்னொரு பீடி போட தொடங்கினோம். கடுப்பு சற்று தொடர்ந்தாலும், அரைமணி நேரம் சற்று வியர்த்து விஷம் உடலோடு செமித்துவிட்டது. கஞ்சா சித்தனாக இருந்தபோது இப்படி தேள்களிடம் கூட கலங்கியிராதவனை, நடுத்தர குடும்ப வாழ்க்கையில் செட்டிலான பின் அல்ப எலிக்கடி அலைக்கழித்தது.

ஒன்றரை வருடம் முன்பு சாந்தோமில் வாழ்ந்த வீட்டின் தரையில் தூங்கி கொண்டிருந்த ஒரு இரவில், இடது கை நடுவிரலை தேர்ந்தெடுத்து எலி ஒன்று கடித்தது. முந்தய நாள் இரவிலேயே அது காது பக்கம் கத்திரி போட முயன்றதை பிறகே ஊகித்து அறிந்துணர்ந்தேன். விழித்து பார்த்ததில் கடித்த இடத்தில் துளி ரத்தம். எழுந்து சோப் போட்டு கழுவி விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் டாக்டரிடம் போயே ஆகவேண்டும் என்று துணைவி வற்புறுத்தியதில், அருகில் இருந்த குழந்தைகளுக்கான டாக்டரிடம் சென்று, டெடனஸ் ஊசி, கையில் கட்டு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டேன். ஒரு எலிக்கடிக்கு தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு சிகிச்சை செய்துகொண்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால் மறுநாள் வேலையிடத்தில் பெங்காலி நண்பன் தீர்த்தோ 'இது இப்படி எளிதாக எடுத்துக் கொள்ள கூடிய சாதாரணம் விஷயம் அல்ல' என்றான். 'ஆண்டிபயாடிக் போதாது, எலியிடம் ராபீஸ் இருக்கலாம்' என்றான். இதை சொல்லிவிட்டு கல்கத்தாவில் தான் சந்தித்த, முதலிலேயே கவனிக்கப்படாமல் பிரச்சனை முற்றிய ராபீஸ் நோயாளிகளை பற்றி சொல்லத்தொடங்கினான். அவை எல்லாம் நாய்கடி உதாரணங்கள் என்றாலும், வாய் உள்ள எல்லா மிருகத்திற்கும் பொருந்தும் என்றான். எனக்கு நான் எலி போல ஒடி, கத்தி சாக நேரிடுமே என்று பயம் வரும் அளவில் விரிவாக பல கேஸ்களை பேசினான். ஜெமினி படத்தில் கலாபவன் மணி ஜெயிலில் விக்ரமுடன் சண்டையிடும் கட்டத்தில் எலியாக மிமிக்ரி உருவெடுத்து நடித்த காட்சிகள் மனதில் வந்து போனது.

அவனே சென்னையில் ரேபீஸ்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை இணையத்தில் தேடி, தொலைபேசி விசாரித்தான். வாக்சின் பெயர்களை அவனே சொல்லி விசாரித்தது மருத்துவமனை பணியாளர்களுக்கு விளங்கவில்லை. நாய் கடிக்கு உள்ள அதே வாக்சின்தான் எலிக்கடிக்குமா என்ற என் சந்தேகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. இப்போழுதெல்லாம் மருத்துவம் முன்னேறிவிட்டது, ஒரே ஒரு ஷாட் போதும் என்றான். எலிக்கடி, அதற்கான ரேபிஸ் வாக்சின் தங்களிடம் இருக்கிறதா என்று தொலைபேசி எதிர்முனையில் தெளிவான பதில் இல்லை.

தொடர்ந்த செமினாரில் மற்ற கலிக்களிடம் விஷயம் சென்றது. செமினாரில் பேசவேண்டிய விஷயத்தை தொடங்காமல் எல்லோரும் என் எலிக்கடி குறித்து தெளிவில்லாமல் கொஞ்ச நேரம் பேசினார்கள். ஒரு விஞ்ஞானி நண்பர் சுண்டெலி என்கிற வகையாக இருந்தால் ஆபத்து எதுவும் இருக்க வாய்பில்லை, மற்ற எலிகள் மட்டுமே ரேபிஸ் இருக்க வாய்புள்ளது என்றார். அவர் அந்த தகவலை எங்கிருந்து பெற்றர் என்பதை குறிப்பிடவில்லை. ரேபிஸ் கிருமி கலந்த ரத்தமே என் உடலில் ஒடுவதான உணர்வு என்னையறியாமல் தொற்றியிருந்தது. என் எச்சிலை முழுங்கவே தயக்கமாக இருந்தது. அந்த எலி எங்காவது இறந்து கிடக்கிறதா என்று கவனிக்க வேண்டும் என்றான் தீர்த்தோ. எனக்கு சுஜாதா எழுதிய 'குதிரை கிச்சாமி' என்ற கதை நினைவுக்கு வந்தது. ஒருவழியாக செமினார் தொடங்கி முடிந்தபின் மீண்டும் இதை பற்றி அவர்களே பேசினார்கள். நான் உடனே கடிபட்ட இடத்தை கழுவிவிட்டதை சொன்னேன்; அது போதாது என்றார்கள். ஏற்கனவே டாக்டரிடம் போய் வந்ததை சொன்னேன்; ஒரு பீடியாட்ரிக்ஸ் டாக்டருக்கு எலிக்கடி குறித்து தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றார் நண்பர். டாக்டர் என்பவர் ஏற்கனவே தன் அனுபவத்தில் இருக்கும் உதாரணங்களை கொண்டு இயங்குபவர், ஏற்கனவே ஒரு எலிக்கடி கேஸை அவர் எதிர்கொண்டிருந்தால் ஒழிய அவரை நம்ப தகுந்த காரணம் இல்லை என்றார். நான் இன்னொரு டாக்டரை பார்க்க வேண்டிய அவசியத்தை சொன்னார்கள். அந்த இன்னொரு டாக்டருக்கு எலிக்கடி சிகிச்சை செய்த அனுபவம் இருக்கிறதா என்று எப்படி அறிவது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை.

என்னுடன் மருத்துவமனைக்கு வந்தே தீருவதாக இருந்த தீர்த்தோவை ஒருவழியாக தவிர்த்து, வீட்டிற்கு வந்து துணைவியிடம் எல்லாவற்றையும் சொன்னவுடன் கலவரம் வீட்டிலும் பற்றிகொண்டுவிட்டது. இஸபெல் மருத்துமனையில் மீண்டும் எலிக்கடி குறித்து (எந்த வார்ட் என்று) ஏற்படகூடிய எல்லா குழப்பங்களையும் குழம்பி, ஒருவழியாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடமே அனுப்பினார்கள். அவர் ரேபிஸ் நாய்மூலம் மட்டுமே பரவும், எலி பூனை போன்ற விலங்குகளால் ஆபத்து எதுவும் இல்லை. நான் அடுத்த நாளே எடுத்து கொண்ட சிகிச்சை போதுமானது என்றார். ஆனால் எலி வீட்டில் எங்காவது சிறுநீர் கழித்திருந்தால் அதன் மூலம் லெப்டோஸ்பைரசிஸ் வர வாய்புள்ளது, அதுவும் எலி கடிப்பதன் மூலம் வராது என்று சொன்னார். மழைக்காலத்தில், பழமையான அந்த வீடு பல இடங்களில் ஈரமாகியிருந்த அந்த பருவத்தில், எலி மூத்திரத்தை நான் எப்படி அடையாளம் காண்பது?

ஆனால் மறூநாள் மீண்டும் தீர்த்தோ புதிய சந்தேகங்களையும் கிலிகளையும் கிளப்பினான். எனக்கு வேறு ஒரு நண்பனின் நினைவு வந்தது. (எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பேசும் மிகுந்த அவநம்பிக்கையாளன் அவன்; அவனிடம், அனில் கும்ளே 10 விக்கட்டையும் எடுத்த வரலாற்று நிகழ்வை சொன்னபோது , உடனடியாக 'He can't do it again' என்றான்.) ஒருவழியாக ஒரு மூத்த பேராசிரியர் கிண்டியிலிருக்கும் கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு போன் செய்து அதன் தலைமை பொறுப்பாளரிடம் பேசி, ஏற்கனவே இஸபெல் மருத்துவமனை டாக்டர் சொன்னதையே அவரும் சொல்வதை உறுதி செய்து சொன்னார். ஆனால் மனமூலையில் சந்தேகம் மிதமிருக்கும் வகையில் தீர்த்தோ கிலியாக்கியிருந்தான். அதற்கு பிறகு நான்கு மாதங்கள் கழித்தும் எனக்கு ஒன்றுமே நிகழாததால் அந்த எலியிடம் ரேபிஸ் கிருமி இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அதிநிச்சயமாக முடிவு செய்துகொண்டேன்.

கஞ்சா பழக்கம் எனக்கு தொடர்ந்திருந்து, தேளும் பாம்பும் கஞ்சா கிராக்கியை கடித்தால் செத்து போகும் என்கிற மரபான நம்பிக்கையின் படி எலி செத்துபோவதாக புனைந்தால், இந்த பதிவு எப்படி உருமாறியிருக்கும் என்று என் யோசனைக்கும் உங்கள் வாசிப்புக்கும் விடுகிறேன்.

Friday, April 16, 2010

துளியுரைகள்-7

Congrats Mamta-இப்போதைக்கு! CPI(M)ஐ கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் லட்சியத்தை அடையாவிட்டாலும், மார்சிஸ்டுகள் சாதிக்கவெ இயலாததை சாதித்ததற்காக! 1:41 AM Sep 25th, 2008

டாடாவின் வெளியேற்றம், எந்த வித வெற்றியுமாக கருத இயலாவிட்டாலும், நிச்சயமாக தோற்கப்போகும் போராட்டத்தில் ஒரு வறலாற்று நிகழ்வு ... 1:48 AM Sep 25th, 2008

தமிழ்நாட்டு கோர்ட்டுகள் தமிழிலும் புழங்கவேண்டுமென்றதை தமிழ்வெறியாக ஆங்கில ஊடகங்களில் சித்தரித்தார்கள். இனி உச்ச நீதி மன்றத்தில் ஹிந்தியில்தான் தீர்பளிக்கவே விருக்கிறார்களாம் ... 10:14 AM Sep 25th, 2008

பிகாரில் வெள்ள நிவாரண முகாம்களில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை 200ரூபாய்க்கு விற்கிறார்களாம்-இன்றய DC
முதல் பக்க செய்தி. 10:17 AM Sep 25th, 2008

மீண்டும் கவனிக்கணும், ராஜ்தாக்கரேக்கு தொடரும் கண்டனங்களில் 1 விழுக்காடாவது கன்னட வெறி அரசியலின் அத்துமீறல்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? ... 10:31 AM Sep 25th, 2008

புகைப்பழக்கம்முள்ளவனுக்கு புகைப்பதென்பது பல நேரங்களில் உந்துதலும், தேவையும், தாகமும் இல்லாத போதும், இயல்புக்கு எதிராகவும் நிகழ்கிறது; ... 2:27 AM Sep 27th, 2008

புகை பழக்கத்திலிருந்து விடுதலையடைய அன்றய எல்லா சிகெரெட்டையும் தொலைக்க வேண்டும்; மிக கடினமான அந்த சாகசத்திற்கு பின் 0க்கு திரும்ப ஒரு இழுப்பு போதும் ... 2:32 AM Sep 27th, 2008

பல வருடங்கள் புகை பழக்கத்தில் கழித்து, விட்டு விடுதலயாகி, பின் புகைக்காதன் உண்மை சுகத்தை உணர ஆண்டுகள் ஆகும்; பின் திரும்ப பழைய நிலைக்கு வர வாழ்வில் எல்லாம் தோற்றவனுக்கு கூட மனசு வராதென நினைக்கிறேன் ... 2:36 AM Sep 27th, 2008

நான் புகைப்பதை தொலைத்து 5வருடங்களாகிறது; இப்போதும் சிகெரட் மணம் கவர்ந்திழுக்கிறது; passive smoking மிகவும் பிடிக்கிறது ... 2:56 AM Sep 27th, 2008

மாதங்களுக்கு இடையில் ஒரு தம் யாரிடமாவது வாங்கி இழுப்பதுமுண்டு. ஆனால் புகைக்காததன் அமைதியை இழக்காமலிருப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் ... 2:57 AM Sep 27th, 2008

@anathai புகைப்பதை முன்வைத்து எழுதிய குறிப்புகள் புகைத்தலை மட்டும் குறிப்பவை அல்ல! ... 8:45 AM Sep 28th, 2008 from web in reply to anathai

Wednesday, April 14, 2010

இடியட்டும் கோபி கிருஷ்ணனும்.

பைத்தியக்காரனின் பதிவில், சென்றதற்கு முந்தய ஞாயிறு திரையிடப்பட்ட 'இடியட்' திரைப்படம் குறித்த ராஜசுந்தரராஜனின் பார்வையாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. பதிவில் நான் சற்றும் எதிர்பாராமல், (ஒருவேளை ஆழ்மனதில் மிகவும் எதிர்நோக்கியிருந்த), கோபி கிருஷ்ணனின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாஸ்தேயெவ்ஸ்கியின் நாவலை நான் படித்ததில்லை (18 வருடங்களாக கைவசம் இருந்தும்). குரோசவாவின் படத்தில் இடியட்டான கமெதா, தாயெகோ நசுவின் கண்களை தான் ஏற்கனவே எங்கோ சந்தித்தித்திருப்பதாக சொல்லி வருவான். பின் ஒரு கட்டத்தில் அதை நினைவுபடுத்துவான். எனக்கு படம் முழுவதும் அதற்கிணையான உணர்வுடன், கமெதா கதாபாத்திரத்தை எங்கோ ஏற்கனவே சந்தித்து உரையாடியிருப்பதான உள்ளுணர்வு. படம் முடிந்து அன்றிரவு தூங்கும் வரை அந்த உணர்வு தொடர்ந்தது. யாரை அந்த கதாபாத்திரம் நினைவு படுத்தியது என்று நினைவை துருவி விடை காண முடியவில்லை. சற்று முன்னர் ராஜசுந்தர்ராஜனின் பதிவில் கோபி கிருஷ்ணன் பெயரை வாசித்ததும் மின்னதிர்வு தாக்கிய உணர்வு. ஆழ்மனதில் இடியட் கதாபாத்திரம் கோபி கிருஷ்ணனை பல வருடங்கள் முன்பு சந்தித்த நினைவை தூண்டி, பழக்கமான ஒரு உணர்வால் அன்று அலைபாய வைத்ததா என்று இப்போதும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த பதிவை சற்று முன்னர் படித்த பின்பு அதை உறுதியாக நம்ப தொடங்கியிருக்கிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் கோபி கிருஷ்ணனை சந்தித்தேன். சாரு தனது வழக்கமான கலக நாடகங்களில் ஒன்றை நடத்தி முடிவுக்கு வந்த கூட்டம். சாருவிற்கு (எதிர்)தூண்டுதலாக துவக்கத்திலிருந்து லஷ்மி மணிவண்ணன் கலகி கொண்டிருந்தார். மதிய இடைவேளையில் கொஞ்ச நேரத்திற்கு கோபி கிருஷ்ணனை எதிரில் வைத்து தாறுமாறான கேள்விகளை லஷ்மி கேட்டுக்கொண்டிருந்தார். தர்க்கபூர்வமாகவோ, விமர்சன பூர்வமாகவோ அல்லாமல், 'தெருவில் இப்படி ஒவ்வொரு பேப்பரா பொறுக்கி வாழ்க்கையின் பொருளை கண்டடைய முடியுமா? .. டேபிள் டென்னிஸ் எல்லாம் ஒரு புனைவா?' என்று சலம்பல் பூர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றை இடியட் பட நாயகனின் சாந்தம் கொண்ட முகத்துடன் எடுத்து பதில்களை 'அப்படி எல்லாம் இல்லை' என்பது போல் ஓரிரு வார்த்தைகளில் கோபி சொல்லிகொண்டிருந்தார். கோபப்படுத்தவே சாத்தியமில்லாத மனிதராக அவர் தெரிந்தார். மறுநாள் முகமது சஃபி சேவியர்ஸ் காலேஜ் விடுதியில் தங்கியிருந்த கோபியை பார்க்க என்னையும் அழைத்து சென்றார். விரிவாக பேசினோம் என்று சொல்லமுடியாது. லஷ்மி மணிவண்ணன் நக்கல் செய்ததில் அவர் புண்பட்டாரா, தப்பா ஒண்ணும் எடுக்கலையே என்று சஃபி கேட்டார். முகம் முழுவதும் தெளிவான அடையாளமாக பரவிய மெல்லிய சஞ்சீவ புன்னகையுடன் "நான் எதையும் தப்பா எடுக்கலை.. தப்பா எடுக்கற மாதிரி அவர் எதுவும் பேசலை.." என்று மட்டும் சொன்னார். என் போதை பழக்கத்லிருந்து வெளி வந்து, இயல்பான வாழ்கைக்கு உதவ அப்போது ஆண்டி டிப்ரசண்ட் மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஆண்டி டிப்ரசன் மாத்திரைகள் இன்றி வாழமுடியாத நிலையில் அவர் இருந்ததாக சொன்னார். அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பேசிய விஷயங்கள் எதுவும் முக்கியமானது இல்லையெனினும், தீவிர பிரச்சனைகளால் பரிசுத்தமான ஒரு மனதுடன் பேசும் உணர்வு ஏற்பட்டது. அப்போது பதிந்து விட்ட அவரின் பாவங்களையே இடியட் படத்தில் என் உள்ளுணர்வு உறுத்தி நினைவு படுத்தியதாக ராஜ சுந்தரராஜனின் பதிவை படித்த பின் கற்பித்து நம்ப விரும்புகிறேன்.

Monday, April 5, 2010

தெளிவு.

அ. தேவதாசனின் பேட்டியை ஷோபாசக்தியின் வலைப்பதிவில் வாசித்தேன். சாதியொழிப்பை முன்வைத்து பேசும் விஷயங்களில் பிரச்சனைகொள்ள எனக்கு எதுவும் இல்லை. கீழே உள்ள மேற்கோள்கள் - இவை வெளிப்படுவதன் சூழல், அதற்கான நியாயங்கள், பின்னணியிலுள்ள சிந்தனை குழப்பங்கள், அரசியல் பழக்க வழக்கங்கள் - இவற்றை புரிந்து கொள்ளும் சவாலில் என் சிந்தனையை தூண்டி விட்டுள்ளது என்பதை பதிவு செய்வதற்காக இந்த பதிவு. என் வாசிப்பை சவாலாக்கும் மேற்கோள்களை கீழே 1,2 .. என்று வரிசை படுத்தியுள்ளேன். வரிசையினுள் மேற்கோள்கள் ஒன்றை ஒன்றை ஒப்பிட்டு கொள்ள அதற்குள் (i), (ii) .. என்று உள்வரிசை படுத்தியுள்ளேன்.


1. அய்க்கிய தேசியக் கட்சி பச்சையான முதலாளியக் கட்சி என்பது நீங்கள் அறிந்ததே. அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இடதுசாரியம் பேசும் முதலாளியக் கட்சிகளின் கூட்டுத்தான். எனினும் அய்க்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது நாட்டுக்கு மிகப்பெரும் தீமையையும் ராஜபக்சவின் வெற்றி மிதமான தீமையையும் கொண்டுவரும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே நாங்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்கச் சொன்னோம்.


2.(i) நாங்கள் ஒருபோதும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததில்லை. நாங்கள் யுத்த நிறுத்தத்தையும் போரைப் பேச்சுவார்த்தைகளின் முலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையுமே வலியுறுத்தினோம். மகிந்த அரசின் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் நாங்கள் நியாயப்படுத்தவுமில்லை.

(ii) ஒரு இலங்கைக் குடிமகனாக இலங்கையின் இறையாண்மையில் அக்கறையுள்ளவனாக மகிந்தவின் அரசை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் மனிதவுரிமை என்ற பெயரிலும் அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரிலும் மேற்கு ஏகா திபத்தியங்களின் விருப்புகளிற்காகச் செயற்படுவது வேறு என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

(iii) மேற்கு நாடுகளின் எதிர்ப்பாளனாக இருக்கும் மகிந்த ராஜபக்ச மீது மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரை மேற்கு நாடுகளிற்குப் பணிய வைக்கும் முயற்சியையே இந்த அமைப்புகள் செய்து வருகின்றன.



3. (i) நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகமயமாக்கல் சூழலில் ஒரு சே குவேராவிற்காக நீங்கள் வேண்டுமானால் காத்திருக்கலாம், ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன்.

(ii) இப்போது இலங்கை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் மூன்றாமுலக நாடுகளின் அணியிலிருக்கிறது. சீனா, இந்தியா, வியட்நாம், லிபியா, ரஷ்யா, கியூபா, வெனிசுலா, பாலஸ்தீனம் இருக்கும் அணியில் இலங்கை இருக்கிறது.

(iii) ஆனால் இந்த அதிகாரப் பகிர்வு என்பது சிங்கள முதலாளிகளிடமிருந்து தமிழ் முதலாளிகளுக்கு மாற்றிக்கொடுக்கப்படும் அதிகாரக் கையளிப்பாக இருக்கக் கூடாது. ....... தீவின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படும் வகையில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.

(iv) ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன்.


(4) கிழக்கு வெறுமனே தமிழ் மக்களின் பூமி மட்டுமல்ல. மூவின மக்களும் வாழ்ந்துவரும் பூமி. அவர்கள் தனித்திருப்பதா அல்லது வடக்கோடு சேர்வதா மேற்கோடு சேர்வதா என்பதெல்லாம் அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டியது.