Monday, December 14, 2015

கலாம் (6, ஆகஸ்ட FB)

அரசியலுக்கு அப்பால், அறிவுப்புல திருவுருவாய் கலாமிற்கு வெகுஜன தளத்தில் நிகழ்ந்த உணர்வு பூர்வமான அஞ்சலி, அவரை அறிவுப்புலம் சார்ந்தவராக ஏற்காதவர்கள் புரிவதற்கு கடினமானது . கலாமின் கல்வி சார்ந்த பிம்பம் மட்டுமின்றி, அவரது ஊழலற்ற பிம்பமும் இந்த அஞ்சலிக் கொண்டாட்டத்திற்கு காரணமாகின்றது. அதே நேரம் வெகுஜனம் எந்த ஒழுங்கிற்கும் ஒத்துவராத, ஊழலுடன் முழு சமரசம் செய்துகொண்ட தன் உளவியலுக்கு இந்த கொண்டாட்டத்தை வடிகாலாக்கிக் கொள்வதாகவும் தோன்றுகிறது.

No comments:

Post a Comment