Sunday, May 8, 2016

ரசனை 02/05/2016

'மோகமுள்' திரைப்படம் பலருக்கு பிடித்திருந்திருக்கலாம்; ஆனால் மோகமுள்' நாவலை இருபது அருகிலான பருவத்தில் வாசித்து, பின் மீண்டும் மீண்டும் வாசித்துள்ளவர்கள், படம் பார்த்து அவஸ்தைபட்டு, அதன் கொலைபாதகத்தை உணரலாம். தமிழில் தீவிர இலக்கியவாதியாக அறியப்படும் இந்திரா பார்த்தசாரதி, ஹிந்தி மொழிமாற்று சீரியல் போன்ற படத்தை க்ளாசிக் ரேஞ்சிற்கு புகழ்ந்து 'சுபமங்களா'வில் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். அது பரவாயில்லை. படத்தில் ஒரே அற்புதமான இசையை பற்றி, 'இசையை அடிநாதமாக திரைக்கதை கொண்ட படத்தில் இசை சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதை தவிர வேறு குறையில்லை' என்று முடித்திருப்பார். (ஞாபகத்திலிருந்து எழுதுவது.) எனக்கு இந்த தமிழ் இலக்கியவாதிகள் என்ன விதம் என்று என்றுமே வகைப்படுத்த முடிந்ததில்லை

No comments:

Post a Comment