Sunday, May 8, 2016

10/0302016

விஜயகாந்த் கடந்த சில தேர்தல்களில் பெற்ற வாக்குகள் திமுகவிற்கும் அதிமுகவிற்கும்- இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட - இருப்பதை போன்ற ஒரு நிலையாகிப்போன ஒரு வாக்கு வங்கி என்று கருத முடியாது. அந்தந்த தேர்தல் அலையிலும், கூட்டணியினாலும் தற்காலிகமாக உருவானவை. அவருக்கு தேவையற்ற ஒரு முக்கியத்துவத்தை முட்டாள்தனமாக இவர்களாகவே உருவாக்கியதோடு, அதிமுகவை எதிர்க்கும் - கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் - அரசியல் தார்மிகத்தை இழக்கும் வேலையையும் மக்கள் நலக்கூட்டணியும், திமுகவும் செய்து வந்தனர். ஒரு வகையில் கூட்டு சேர்த்து உருவாக்கப் போகும் ஆபத்து, தலைவலி மற்றும் அவப்பெயரில் இருந்து, திமுகவையும் மக்கள் நலக்கூட்டணியையும் விஜயகாந்த் தன்னையறியாமல் விடுவித்திருக்கிறார்; அவர்களாக முயன்று சம்பாதிக்க நினைத்த துர்பயன்களில் இருந்து, மிக விநோதமாக விஜய்காந்த் அவர்களை ஏமாற்றியதன் மூலம் காப்பாற்றித் தொலைத்திருக்கிறார். 
விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி, திமுக என்று ஓட்டு சிதறுவதால் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்று கருதுவதற்கும் முழுமையான நியாயங்களில்லை. முதலில் விஜயகாந்தை ஒரு அரசியல் சக்தியாக வலுவாக்கி, அதன் பயனாக அதிமுகவை தோற்கடிப்பது என்கிற ஐடியாவே, அசிங்கமான அரசியலில் மிக அசிங்கமான ஒரு அரசியல்; அடுத்து அதிமுக மீண்டும் வருவதை விரும்பாத, ஆனால் தீவிர திமுக எதிர்ப்புணர்வு கொண்ட பலரும் கூட இருக்கக் கூடும்; அவர்களின் வாக்குகள் அதிமுகவிற்கு போகாமல் சிதறக் கூட இதனால் வாய்ப்புண்டு. என் கருத்தில் -திமுக தலைமையே இதை நம்பாவிட்டாலும் கூட- இப்போது திமுக இன்னமும் வலுவாக உள்ளது. மக்கள் நலக்கூட்டணி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கத்தான் செய்யும். அதற்கு இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது

No comments:

Post a Comment