Sunday, May 8, 2016

ஊழலுக்கு மாற்று 12/02/2016

ஊழலை தவிர்க்க முடியாது, ஊழலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது என் நிலைபாடல்ல. ஊழலின் வீரியத்தை குறைக்கலாமா, அதன் தளங்களில் குறுக்கிடலாமா, குறிப்பாக அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும் அரசாங்க உரிமைகளை பெறுவதில் உள்ள ஊழலை தவிர்ப்பது எப்படி என்பது போன்ற கேள்விகளை கேட்பது அர்த்தமுள்ளது. ஆனால் ஊழல் என்பது நமது சமூக பொருளாதார அமைப்பின் ஒரு விளைபொருள்; அதை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆட்சியில் அமர்த்தி ஒழிக்க முடியுமா என்று கேட்பது ஆக முட்டாள்த்தனம். திரும்பவும் நிதானமாக சொல்கிறேன், இப்படி அணுகுவதே ஆக முட்டாள்த்தனம். ஆகையால் 'ஊழலை ஒழிக்கவே முடியாதா' என்று கேள்வி கேட்டுவிட்டு, இவர்கள் ஊழல் செய்வார்களா தெரியாது, அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்று மொக்கை போடுவதால் பொழுது போவது, கவனம் சிதைவதை தவிர வேறு பயன் இல்லை

No comments:

Post a Comment