Monday, December 14, 2015

மதுவிலக்கும் ஹிபாக்ரசியும் (6 ஆகஸ்ட் FB)

பெருங்குடிகாரர்களாக இருந்தவர்கள் மனம் மாறியோ மாறாமலோ மது விலக்கிற்கு ஆதரவாக பேசுவதில் எந்த ஹிபாக்ரசியும் இல்லை. குறைந்த பட்சமாக இன்றய டாஸ்மாக் சீரழிவை பற்றி கவலை யார் கொண்டாலும் அது முழுக்க சமூக அக்கறை சார்ந்தது.
ஒரு காலத்தில் மதுவிலக்கை விலக்கி மதுவை அறிமுகப்படுத்திய அரசியல்வாதி, இன்றய காலத்திற்கு ஏற்ப, மதுவிலக்கிற்கு ஆதரவான நிலை எடுப்பதிலும் எந்த தார்மீகம் சார்ந்த முரணும் இல்லை. மதுத்தடையின் எதிர்மறை அம்சங்களுக்கு எதிராக அரசே ஆபத்தற்ற மதுவை அளிப்பது அன்று ஒரு சரியான செயல்பாடாக இருந்திருக்கலாம். இன்று நோய் முற்றிய நிலையில் ஒரு அதிர்ச்சி வைத்தியமாக (படிப்படியான) முழுமையான மது விலக்கு தற்காலிகமாகவேனும் தேவைப்படலாம். இதைவிடயெல்லாம் உளறல் கலைஞர் குடும்பத்தில் யாரோவும், ராமதாஸ் பேரனும் தண்ணியடிப்பதையும் ஒரு மேட்டராக பேசுவது.
மொத்த முரண்களில் விநோதமாக இருப்பது, மது சார்ந்த தொழில் வருவாய் கொண்டவர்கள் மதுவிலக்கு அரசியல் செய்வது; இவர்கள் அரசியல் லாபத்திற்காக பொய்யான அரசியல் செய்வதாக சொல்லலாம்; அல்லது அரசியல் வாழ்க்கை முரண்களால் ஆனது என்பது போன்ற சால்ஜாப்பிற்குள்ளும் வரலாம். ஆனால் ஒரு க்ளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துவிட்ட மது விலக்கு சார்ந்த போராட்டம், சில பாதிப்புகளை மது விற்பனையில் விளைவிக்குமானால், இவர்களுக்கு அதனால் தொழில் சார்ந்த பாதிப்புதானே நிகழும்? அப்படி இருக்கையில் தங்கள் தனிப்பட்ட லாபத்திற்கு எதிரான ஒரு அரசியலை, அரசியல் லாபத்திற்காக அவர்கள் கையெலெடுக்கும் இந்த ஹிபாக்ரசி கொஞ்சம் விநோதமானதுதான்.
ஆனால் அப்பட்டமான ஹிபாக்ரசி என்பது இணைய ̀சோ'வினிஸ்டுகள்தான். டாஸ்மாக் கலச்சாரத்தை கீழானதாக கருதும் பார்வையை கொண்டிருந்து, மது விலக்கிற்கு ஆதரவாக கருத்து நிலையும் கொண்டு, டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் முக்கிய கட்டத்தில் இருக்கும்போது, எதோ தங்கள் சொத்து பறிபோவது போல் பரபரப்புடன் இந்த போராட்டத்திற்கு எதிராக இவர்கள் எழுதி வருவது மட்டுமே கலப்படமற்ற அப்பட்டமான ஹிபாக்ரசியாக எனக்கு தெரிகிறது. ஜெ ஆதரவால் டாஸ்மாக் ஆதரவாளர்களாக மாறிப்போனவர்கள், நேரடியாக அப்படி கருத்து நிலை எடுக்க முடியாத பிரச்சனையால், தங்கள் ஹிபாக்ரசியை மறைக்க, ஊரில் உள்ள விநோதமான ஹிபாக்ரசி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment