Monday, December 14, 2015

2, நவம்பர் FB

தமிழக அரசு பாடகர் கோவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருப்பதை எந்த வகை ஜனநாயக நெறிகளை பேசுபவரானாலும் கண்டிக்காமல் இருக்க முடியாது; ஜனநாயக நெறிகளை சந்தர்ப்பத்திற்கும் தங்கள் அரசியலுக்கும் ஏற்ப வளைத்துக் கொள்பவர்களும், தக்காளி சட்னி -ரத்தம் லாஜிக் கொண்டவர்களும் மட்டுமே நியாயப்படுத்த முடியும். பயம் காரணமாகவோ, வேறு அரசியல் கணக்குகள் காரணமாகவோ பலர் வெளிப்படையாக கண்டிக்காமலும் இருக்காலம். கண்டனத்தை அமைதியான முறையில் பொதுக்களத்தில் தெரிவித்தால் கூட, எதேச்சதிகாரத்தை அரசு பிரயோகிக்கும் என்கிற யதார்த்தம்தான் நிலவுகிறது. இத்தனை நியாயங்கள் இருந்தாலும், எந்த வித வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத அரசின் காவல் துறையை எதிர்கொள்ளும் போராட்டக் களத்திற்கு, போராட்டம் சாத்வீகமாக இருக்கப் போவதில்லை என்ற நிலையில், குழந்தைகளை அழைத்துச் செல்வது எவ்வித போராட்ட அறமும் அற்றது.

No comments:

Post a Comment