Monday, December 14, 2015

எதிர்வினை 21, ஜூலை, FB

சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் -அரங்க வாடகை, கலைஞர்களின் சம்பளம் என்று கொடுத்த பின் - ஒரு படத்திற்கு இசையமைப்பதில் வரும் வருவாயில் ஒரு பகுதி கூட வர சாத்தியமில்லை. இன்றும் வருஷத்திற்கு ஐந்திலிருந்து பத்து படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜா ஐந்தாயிரத்திற்கு மேல் பாடல்களை இயற்றியுள்ளார். தனது ஒரு இசை நிகழ்ச்சியில் ஐம்பது பாட்ல்கள் பாடினால் அதிகம். ஆக அவரது பாடல்களை ரிபீட் செய்யாமலேயே நூறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ரிபீட் செய்தாலும் அவரது நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் காண ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரையான அவரது நிகழ்ச்சிகளுக்கு பத்தாயிரத்துக்கு குறையாமல் ரசிகர்கள் கூடியுள்ளனர். வேறு யாரும் இசை நிகழ்ழ்சிகளை நடத்தி இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரியவில்லை. இந்நிலையில் எம் எஸ்வி பாடல்களை தான் பாடி காசு சம்பாதிக்க வேண்டிய அவசியமே இளையாராஜாவிற்கு கிடையாது என்பது மடையனின் மடையனாக அறிவுநிலை கொண்டவர்களுக்கும் புரியும். ஆனால் தமிழ்சூழலில் பலர் - அவர்களுக்கு அறிவு இல்லை என்றில்லை; ஜீனில் கோளாறா, பிறப்பில் கோளாறா, சாதி பித்தமா நானறியேன் - ஏதோ இந்த நிகழ்வை வைத்து காசு சம்பாதிக்க போவதாக காலையில் இருந்து எழுதிவருகிறார்கள். ட்விட்டரில் இருக்கும் பொறுக்கிகள் சொந்த நலனுக்காக பொண்டாட்டியையும் அம்மாவையும் பற்றி எதையும் எழுதும் தன்மை கொண்டவர்கள்; அவர்கள் அதை எழுதியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படி எல்லாம் இல்லாமல் உண்மையிலேயே தன்னளவுல் ஒரு நேர்மை கொண்டவர் (அதாவது intellectual honesty என்ற அறிவு நேர்மை அல்ல, காசுக்காக விலைபோகாதது போன்ற நேர்மை) என்று நினைக்கும் ஞாநியும் இப்போது எழுதியுள்ளார். இந்த மனுசனுக்கு என்ன பிரச்சனை, இந்தாள் வெறும் முட்டாள் மட்டும்தானா, அரசியல் நேர் சார்ந்த மடத்தனமா, அல்லது ஆழமனதில் மறைந்திருக்கும் சாதி வெறியா, கருத்து சீசோஃபெர்னியா மாதிரி ஏதாவது ஒரு நோயா எதுவென்று நானறியேன். ஆனால் மீண்டும் மீண்டும் இந்த மடையன் எழுதி வருவது தமிழ் சமூகத்தில் பெரும் தீங்கை, அறிவுக்கு எதிரான ஒரு போக்கை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே இந்தாளின் பிழைகளை சுட்டியாகிவிட்டது; அதை எதிர்கொள்ளும் அறிவு நேர்மையை சிறிதேனும் கண்டதில்லை. இந்தாளை இன்னும் திட்டுவதற்கு பொருத்தமான வார்த்தைகளே மொழி சார்ந்த உலகில் இல்லை. விஷயம் என்னெவெனில் இந்த நிகழ்ச்சி மூலம் வரும் பணம் எம்மெஸ்வி பெயர் கொண்ட டிரஸ்டிற்கு செல்லும் என்பதுதான். இந்த தகவல் தெரிந்தவுடன் ஒரு ஈடில்லா கலைஞன் மீது சேற்றை வாரி இறைத்ததற்கு மன்னிப்பு கேட்பார்கள் என்று முட்டாள்தனமாக நானும் எதிர்பார்த்தேன். அதற்கு பிறகு இன்னும் திமிராக பேசுகிறார்கள். இது போன்ற அற்பங்களுக்கும், இந்த கேடான போக்கிற்கும் ஆதரவாகவே அறிவுஜீவிகளாக நான் நம்பியவர்களும் இருக்கிறார்கள். இந்த கேவலத்தை கண்டிக்காத தமிழ் சூழலில் இயங்குவதற்காக மட்டுமல்ல பிறந்ததற்காகவும் வெட்கப்படுகிறேன்.

No comments:

Post a Comment