சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் -அரங்க வாடகை, கலைஞர்களின் சம்பளம் என்று கொடுத்த பின் - ஒரு படத்திற்கு இசையமைப்பதில் வரும் வருவாயில் ஒரு பகுதி கூட வர சாத்தியமில்லை. இன்றும் வருஷத்திற்கு ஐந்திலிருந்து பத்து படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜா ஐந்தாயிரத்திற்கு மேல் பாடல்களை இயற்றியுள்ளார். தனது ஒரு இசை நிகழ்ச்சியில் ஐம்பது பாட்ல்கள் பாடினால் அதிகம். ஆக அவரது பாடல்களை ரிபீட் செய்யாமலேயே நூறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ரிபீட் செய்தாலும் அவரது நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் காண ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரையான அவரது நிகழ்ச்சிகளுக்கு பத்தாயிரத்துக்கு குறையாமல் ரசிகர்கள் கூடியுள்ளனர். வேறு யாரும் இசை நிகழ்ழ்சிகளை நடத்தி இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரியவில்லை. இந்நிலையில் எம் எஸ்வி பாடல்களை தான் பாடி காசு சம்பாதிக்க வேண்டிய அவசியமே இளையாராஜாவிற்கு கிடையாது என்பது மடையனின் மடையனாக அறிவுநிலை கொண்டவர்களுக்கும் புரியும். ஆனால் தமிழ்சூழலில் பலர் - அவர்களுக்கு அறிவு இல்லை என்றில்லை; ஜீனில் கோளாறா, பிறப்பில் கோளாறா, சாதி பித்தமா நானறியேன் - ஏதோ இந்த நிகழ்வை வைத்து காசு சம்பாதிக்க போவதாக காலையில் இருந்து எழுதிவருகிறார்கள். ட்விட்டரில் இருக்கும் பொறுக்கிகள் சொந்த நலனுக்காக பொண்டாட்டியையும் அம்மாவையும் பற்றி எதையும் எழுதும் தன்மை கொண்டவர்கள்; அவர்கள் அதை எழுதியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படி எல்லாம் இல்லாமல் உண்மையிலேயே தன்னளவுல் ஒரு நேர்மை கொண்டவர் (அதாவது intellectual honesty என்ற அறிவு நேர்மை அல்ல, காசுக்காக விலைபோகாதது போன்ற நேர்மை) என்று நினைக்கும் ஞாநியும் இப்போது எழுதியுள்ளார். இந்த மனுசனுக்கு என்ன பிரச்சனை, இந்தாள் வெறும் முட்டாள் மட்டும்தானா, அரசியல் நேர் சார்ந்த மடத்தனமா, அல்லது ஆழமனதில் மறைந்திருக்கும் சாதி வெறியா, கருத்து சீசோஃபெர்னியா மாதிரி ஏதாவது ஒரு நோயா எதுவென்று நானறியேன். ஆனால் மீண்டும் மீண்டும் இந்த மடையன் எழுதி வருவது தமிழ் சமூகத்தில் பெரும் தீங்கை, அறிவுக்கு எதிரான ஒரு போக்கை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே இந்தாளின் பிழைகளை சுட்டியாகிவிட்டது; அதை எதிர்கொள்ளும் அறிவு நேர்மையை சிறிதேனும் கண்டதில்லை. இந்தாளை இன்னும் திட்டுவதற்கு பொருத்தமான வார்த்தைகளே மொழி சார்ந்த உலகில் இல்லை. விஷயம் என்னெவெனில் இந்த நிகழ்ச்சி மூலம் வரும் பணம் எம்மெஸ்வி பெயர் கொண்ட டிரஸ்டிற்கு செல்லும் என்பதுதான். இந்த தகவல் தெரிந்தவுடன் ஒரு ஈடில்லா கலைஞன் மீது சேற்றை வாரி இறைத்ததற்கு மன்னிப்பு கேட்பார்கள் என்று முட்டாள்தனமாக நானும் எதிர்பார்த்தேன். அதற்கு பிறகு இன்னும் திமிராக பேசுகிறார்கள். இது போன்ற அற்பங்களுக்கும், இந்த கேடான போக்கிற்கும் ஆதரவாகவே அறிவுஜீவிகளாக நான் நம்பியவர்களும் இருக்கிறார்கள். இந்த கேவலத்தை கண்டிக்காத தமிழ் சூழலில் இயங்குவதற்காக மட்டுமல்ல பிறந்ததற்காகவும் வெட்கப்படுகிறேன்.
Monday, December 14, 2015
FB ஏப்ரல் 8
இஸ்லாம் பற்றி பத்ரி சேஷாத்ரியோ, அரவிந்தன் நீலகண்டனோ, இஸ்லாம் பற்றி எதையுமே வாசிக்காத ஒருவர் கூட பாசிடிவாக ஒரு ஃபேஸ்புக் பதிவு போட்டால், இஸ்லாமியர்கள் கூட்டமாக அதை லைக் செய்வார்கள். ஒருமுறை (இஸ்லாமியத்தை விமர்சிக்கும், மோடியை ஆதரிக்கும்) சின்னக்கருப்பன் என்ற எழுத்தாளர் இஸ்லாம் பற்றி நல்லதாக எழுதிய போது, திண்ணையில் அதற்கு மகிழ்ந்து பாராட்டை முஸ்லீம்கள் தெரிவித்திருந்தனர்; இன்னும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. இளையராஜாவை திட்டும் ஒருவர், எங்காவது ராஜாவை பாராட்டினால் கூட ராஜா ரசிகர்கள் சிலர் அதை லைக் செய்வார்கள். இது சாதாரண மனித இயல்பு.
எத்தனையோ கரணங்களுக்காக கருணாநிதியை திட்டுவதை புரிந்து கொள்ளமுடியும். கலைஞரின் ̀ராமானுஜர்' இன்னும் வெளிவரக்கூட இல்லை; அவர் நிச்சயமாக ராமனுஜரை பற்றி இழிவாக எதையும் எழுதப்போவதில்லை; பாசிடிவாகத்தான் எழுதப்போகிறார் என்று முன்னோட்டத்திலேயே தெரிகிறது. அதற்குள் எத்தனை வெறுப்புகள்! இப்படி தனக்கு பிடித்ததை பற்றி, தனக்கு பிடிக்காதவன் எழுதுகிறான் என்கிற ஒரே காரணத்திற்காகவே, வாசிக்காமலே வெறுக்கும் மக்கள் கூட்டம் வேறு எங்கும் இருக்குமா என்று தெரியவில்லை.
கலைஞரின் ராமானுஜர் பற்றி எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை; ̀மந்திரி குமாரி'க்கு பிறகு நான் கலைஞர் எழுத்தை ரசிப்பதும் இல்லை. வெகுஜன பார்வையாளர்களுக்கு ராமனுஜரை பற்றி ஒரு ஆழமான க்ளசிக்கை உருவாக்க எந்த தேவையும் இல்லை; கவிதை என்று நினைத்து ஆபாசமான அடுக்கு வார்த்தைகளில் வாலி எழுதுவதை விட எவரும் எழுதி ஏதேனும் ஒரு நியாயத்தை செய்ய முடியும் என்பது என் எண்ணம்; வாலியை விமர்சிக்காதவர்கள், இன்னும் காணவே கிடைக்காத ஒன்றை பற்றி எத்தனை வெறுப்புடன் கிண்டலும் கேலியுமாக எழுதிக் கொண்டே இருக்கிறா ர்கள். ஒரு நூற்றாண்டு காலமாய் தங்களை எந்த சுயவிமர்சனமும் செய்துகொள்ளாத கூட்டம் ஆங்கில நாளிதழ்களில் தங்கள் மீதான விசாரணைகளை கற்பித்து ஒப்பாரி வைத்து வருகிறது.
எதிர்வினை (8 ஜனவரி, FB)
பிரான்சில் இனவாதம் இல்லவே இல்லை என்று சொன்னால் நகைப்பிற்குரியது; ஆனால் நான் புரிந்துகொண்டவரை அரசின் கொள்கைகளும், சட்டங்களும் இனவாததிற்கு எதிரானது. என் புரிதலில் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தை இனவாதத்தை தூண்டுவதாக ஃபிரான்சில் வழக்கு தொடுக்க முடியும்; இது ஒரு சாத்தியக்கூறு மட்டுமல்ல, இந்தியாவில் எந்த உறுத்தலும் இன்றி வெளிவரும் ஃபேர் அண்ட் லவ்லி (மேலும் பல) விளம்பரங்களுக்கு அடுத்த நாளே ஃப்ரான்சில் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்பதுதான் ஒரு வருடம் அங்கு வாழ்ந்த என் மனப்பதிவு. ஒரு பத்திரிகை கார்டூன் இனவாதமாக உள்ளது எனில் அதற்கு நிச்சயமாக வழக்கு தொடுக்க முடியும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கார்டூன்கள் ஒவ்வொன்றும் இனவாதம் அல்ல என்று வாதிடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் பல நேரங்களில் ஒரு கார்ட்டூன் உருவாவது ஏதோ ஒன்றின் எதிர்வினையாக. ஒருவரின் மத நம்பிக்கையை மதிக்காவிட்டால் அது இனவாதம் என்று ஒருவர் வாதிடலாம்; சுதத்திரவாத சமுதாயத்தில் புண்படுத்த -குறிப்பாக ஒரு எதிர்வினையாக நக்கல் அடிக்க- உரிமை உண்டு என்று இன்னொருவர் சொல்லலாம். ராமர் படத்தை செருப்பால் அடித்தவர் மேல் மிகுந்த மரியாதை உள்ள நான் இரண்டாவது நிலைபாட்டைத்தான் எடுப்பேன்; இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப என் நிலைபாட்டையும் தர்க்கத்தை மாற்ற மாட்டேன்.
ஒவ்வொரு முறை இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனம் நடக்கும்போதும் தவறின் வேர் வேறு எங்கோ இருப்பதாக கிளம்புகிறார்கள். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை அடைவதை எதிர்ப்பது வேறு; ஏதோ ஒரு வகையில் கொல்லப்பட்டவர்களை நடந்ததற்கு காரணமாக்குவது வேறு. பிரச்சனை இருக்கிறது என்று தெள்ள தெளிவாக தெரிந்தும், எல்லாவற்றையும் போல இஸ்லாத்தின் பிரச்சனைகளை பேசுவதை பொலிடிகல் கரெக்ட்னெஸ் கொண்டு தடை செய்ய முனைவது முஸ்லீம்களுக்கு எந்த நண்மையும் செய்ய போவதில்லை; ஏற்கனவே ஏராளமான தீமைகளைத்தான் செய்துள்ளது. இஸ்ரேலின் அட்டூழியங்களிற்கு, அமேரிக்க அராஜகங்களுக்கு மற்றும் இந்துத்வத்திற்கு எதிராக கொண்டிருக்கும் தொடர் நிலைபாட்டை இப்படி சொல்வதன் மூலமே உறுதிபடுத்த முடியும் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்படும் வரை Charlie Hebdo இனவாததிற்கு எதிரான நிலைபாடு கொண்டதாகவே அறிகிறேன். வெளிப்படையான நிலைபாட்டை வேஷம் என்று சொன்னால் மேலே உரையாட ஏதுமில்லை.
எதிர்வினை
(7, ஜனவரி அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)
(நாளை எழுதலாம் என்று இருந்தேன்; தூக்கம் வராததால் இப்பொழுதே;
Badri Seshadri பதிவில் என் பின்னூட்டங்களை பார்க்கவும்.)
(நாளை எழுதலாம் என்று இருந்தேன்; தூக்கம் வராததால் இப்பொழுதே;
Badri Seshadri பதிவில் என் பின்னூட்டங்களை பார்க்கவும்.)
பிஜேபி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திகிலூட்டும் பல கூத்துக்கள் அரங்கேறும்; ஒப்பீட்டளவில் அவற்றில் ஆபத்து குறைந்ததாக பண்டைய இந்தியாவில் இன்றய நவீன அறிவியல் அறிவுக்கூறுகளை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சிகளை சொல்லலாம். 1999இல் அசோக் சென் என்ற (பத்ரிக்கு பிடித்த மாதிரி சொல்லவேண்டுமானல் உலகத்தரத்தில்) முக்கியத்துவம் வாய்ந்த அறிவியலாளருக்கு ஏதோ ஒரு பரிசு வழங்கும் விழாவில் முரளி மனோகர் ஜோஷி ̀ஏற்கனவே வேதங்களிலும் உபநிதஷத்களிலும் சொல்லப்பட்டவைகளைதான் இன்றய விஞ்ஞானிகள் மறு கண்டுப்பிடிப்பு செய்வதாக சொன்னார். மேடையில் இருந்த அசோக் சென் எதிர்வினையாக ஒரு வார்த்தை சொல்லாதது (அல்லது சொல்லி பதிவாகாதது) பற்றி அன்று ரொம்ப புலம்பிக்கொண்டிருந்தேன். இன்று இது போன்றவைகள் குறித்த பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை என்று தோன்றுகிறது. யாரும் இந்த காமெடிகளை சீரியசாக எடுக்க போவதில்லை. பண்டைய இந்தியாவின் நியா யமான பங்களிப்புகளையும் பீலா என்று புறம்தள்ளவே இந்த மிகைப்படுத்தல்கள் உதவும் என்று அவர்களுக்கு புரியவில்லை. ஆகையால் உண்மையான தேசாபிமானம் கொண்டவர்கள் இந்த காமெடி மிகைப்படுத்தல்களைத்தான் எதிர்க்க வேண்டும். அந்த வகையில் பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்துவில் எழுதியுள்ள கட்டுரை சரியான எதிர்வினை. அதே போன்ற நவீன மனதுடன் இந்திய அறிவியல் மீதான கரிசனத்துடன் பத்ரியும் பதிவு எழுதியுள்ளார். ஆனால் அவர் தன் எல்லைக்குள் நிற்காமல் பல தடாலடி தீர்ப்புகளையும் தீர்வுகளையும் தருகிறார், அதை நம் ஃபேஸ்புக் பொதுஜனங்களும் அறிஞர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்டபின் இந்த பதிவு.
பத்ரியின் இந்த பதிவும் அதற்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட லைக்குகளையும் பார்த்து ̀என்ன மாதிரி சூழலில் வாழ்கிறோம்' என்றுதான் அங்கலாய்க்க தோன்றுகிறது. கணிதம் அறிவியல் துறைகளுக்கு வெளியே வேறு தளத்தில் செயல்படும் ஒருவர் ஒரு பதிவில் கடந்த நூறு ஆண்டுகால இந்திய அறிவியல் கணித சாதனைகள் பற்றி பல தீர்ப்புகளை சொல்லி, நம் கலிதீர சில யோசனைகளையும் முன்வைக்கிறார். யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் சிந்தித்து முடிவுக்கு வந்து அதை முன்வைக்கலாம். ஆனால் முடிவுக்கு வந்த விதத்தை ஏதேனும் ஒரு வகையில் விளக்க வேண்டும். அப்படி சொல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமெனில் அவர் அந்த குறிப்பிட்ட துறையில் ஒரு வல்லுனர் என்று நிறுவி இருக்கவேண்டும். குறிப்பாக அந்த துறை சா ர்ந்த ஒருவர் ̀இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தீர்கள்?; என்று கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ̀ஜல்லியடிக்கிறார்' என்று நான் குறிப்பிட்ட பிறகும் பத்ரியின் பதிவிற்கு சுமார் எண்பது லைக்குகள் விழுந்திருக்கலாம். பத்ரி பதில் சொல்லப்போகிறாரா அல்லது செலிபிரிடி வழக்கமாக ஏராளமான பின்னூட்டங்களுக்கு நடுவில் உள்ள அர்த்தபூர்வமான ஒரு கேள்வியை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடப்போகிறாரா என்று தெரியவில்லை. 7 மணி நேரம் ஆகிவிட்டதால் இதற்கு மேல் காத்திருக்காமல் என் கருத்தை பதிந்துவிட்டு வேறு வேலைக்கு செல்கிறேன்.
பத்ரியின் தற்போதய சார்புகள், எதிர்கால உதிர்ப்புகள் இந்துத்வத்துடன் என்ன தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் ஒரு பழைமைவாதி கிடையாது. அதனால்தான் பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை, நவீன வளர்ச்சிகளுக்கேற்ப அறிவை புதுப்பித்துக்கொண்டு நாம் உலக தரத்திற்கு உயர முயற்சிக்க வேண்டும் என்கிறார். சரியான அணுகுமுறைதான். அத்தோடு நின்றிருக்கலாம்; ஆனல் தனக்கு தெரியாத இந்திய அறிவியல் கணிதத்துறைகளில் உலகத்தரத்தில் எந்த சாதனையும் நிகழவில்லை என்கிறார்; அது மட்டுமல்ல சாதனை நிகழ சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறார். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பிய தரத்திலான ஒரே கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே என்கிறார். ஐரோப்பிய தரத்திலான ஆராய்ச்சியாளர்களை உருவாக்க ̀புதுமையான, நவீனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள் உருவாக்கவேண்டும்' என்கிறார். இதுதான் அவர் தீர்வு. அவர் தீர்ப்புகளை விட தீர்வுகள் இன்னும் பலத்த அதிர்ச்சியை தருகிறது. கேள்வி கேட்காமல் 160 பேர் லைக் செய்கிறார்கள். நாளை ஜெயமோகன் இதை மேற்கோள் காட்டி பதிவு போட்டால் கூட ஆச்சர்யம் வராது.
கணிதம், அறிவியல் என்று பத்ரி பேசுவது தியரிடிகலான விஷயங்கள்தான் என்று தெரிகிறது. CERNஇல் இருப்பது போன்ற ஆய்வுகூடம் எதுவும் அதற்கு தேவையில்லை. இதற்கு தேவை முக்கிய புத்தகங்களும், ஆய்வு இதழ்களும் உள்ள நூலகம், உட்கார்ந்து வேலைசெய்ய நாற்காலி மேஜையுடன் அலுவலக அறைகள் கொண்ட கட்டிடம், கணினிகள், மிக முக்கியமாக ஆராய்சியாளர்களுக்கு சம்பளம். இது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஐஐடிகளில், IMSc, HRI, TIFR, IISc, ISIக்களில் ஏற்கனவே உள்ளதே. புதிதாக ஒரு பணக்காரர் செய்யப்போவது என்ன? என்ன லாபத்திற்காக ஒரு பணக்காரர் பற்பல கோடிகள் செலவாகும் இந்த வேலையை அறிவியல் கணித கண்டுபிடிப்புகள் நிகழவேண்டும் என்ற அக்கரையில் செய்யப்போகிறார்? (மாணவர்கள் பேராசியர்களுக்கு ஒரு மாதசம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு மேல் போகும்). நிதி உதவி மட்டும் செய்ய வேண்டும் என்றால் அதைத்தான் ஏற்கனவே டாடா, இன்ஃபாசிஸ் தொடங்கி ஸ்பிக்வரை செய்துள்ளனரே. இதில் எதை அரசு நிறுவனம் சாராமல் ஒரு பணக்காரர் புதிதாக என்னத்தை செய்து அறிவியலை உய்விக்க யோசனை தருகிறார் என்று தியரிடிகலாகவும் பிராக்டிகலாகவும் எதுவும் புரியவில்லை.
அடுத்து உலகத்தரமான ஆராய்ச்சி என்று எதை கற்பனை செய்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. (விரல் விட்டு எண்ணகூடியதானாலும்) இந்தியாவின் கணித அறிவியல் நிறுவனங்களில் நிகழும் ஆய்வுகள் உலகத்தரமானவைதான். ராமானுஜன் போன்ற பெரும் மேதை எப்பொழுதாவது நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் தோன்றமுடியும். உலகத்தரம் எனப்படும் ஐரோப்பிய அமேரிக்க ஆய்வாளர்கள், சாதனை புரிந்தவர்கள் எல்லாம் கூட ராமானுஜன் தரத்தில் இல்லவும் இல்லை. மற்றபடி தற்போது உலகத்தரமாக பங்களிப்பை செய்தவர்களாக ஒரு நூறு ஆய்வாளர்களாவது கணிதத்தில் மட்டும் இந்தியாவில் இருப்பார்கள். அறிவியலில் இன்னும் சில மடங்கு இருப்பார்கள். கடந்த ஒரு நூற்றாண்டில் எனக்கு சரியாக கணக்கு சொல்ல வராவிட்டாலும் இதைவிட இன்னும் ஒரு மடங்கு நிச்சயம் இருக்கும். பலர் இங்கு தொடங்கி வெளிநாட்டில் குடியேறி இருக்கலாம்; வெளிநாட்டில் ஆராய்ச்சி தொடங்கி இங்கே வேலையுடன் குடியேறி இருக்கலாம். எல்லாவற்றையும் இந்திய பங்களிப்பாகத்தான் கருத வேண்டும். இதை எழுதிக்கொண்டிருக்கும் என் பங்களிப்புகளும் உலகத்தரமானவைதான். உலகத்தரமான ஆய்வு இதழ்களில் வெளிவருபவைகளை உலகத்தரமானவை எனறுதான் சொல்ல முடியும். எதை வைத்து இங்கே உலகத்தரமான ஆய்வு வேலைகள் குறிப்பாக கணிதத்தில் நிகழவில்லை என்று நினைக்கிறார் என்று புரியவில்லை. இங்கே நாம் உருவாக்கும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்கு செல்வது வழமைதான். ஜப்பான் போன்ற நாடுகளிலும் யாரும் உள்ளூரில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதில்லை. (நம்மூரில் இருந்து செல்ல லௌகிக காரணங்களும் இருக்கலாம்.) ஆகையால் பத்ரி சொன்ன அத்தனையும் முழுமையாக தவறான தகவல்கள்.
ஆனால் எண்ணிக்கையில் தரமான ஆய்வாளர்கள் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் -அதுவும் நம் மக்கள் தொகைக்கு- மிகக்குறைவு என்பது உண்மைதான் (பத்ரி சொல்வது மிக மிகைப்படுத்துதல் என்று மட்டுமே சொல்கிறேன்). அதன் அடிப்படை பிரச்சனை நமது பல்கலை கழகங்கள் எந்த ஆய்வும் நடைபெறாத ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான். இது ஏன் என்பது என் பார்வையில் மிக சிக்கலான பிரச்சனை. பல்கலைகழகங்களின் உதவாக்கரை நிலைகளுக்கு கல்வி நிறுவன விதிகள், அமைப்புகள், அரசியல் தலையீடுகள், உள்ளரசியல்கள், நமது சமூகத்தின் சாதிய அமைப்பு ஆகிய பலவற்றிற்கும் பங்கு உள்ளதாக நினைக்கிறேன். இதை இப்போதைக்கு சரி செய்வதை பற்றிய ஒரு திறந்த உரையாடலை கூட நிகழ்த்த முடியும் எனக்கு தோன்றவில்லை. அது குறித்து வேறு சந்தர்ப்பத்தில்தான் பேசவேண்டும்.
இதனோடு ஒப்பிடக்கூடிய இன்னொரு விஷயமும் உண்டு. நியூட்டனுக்கு சில நூறு வருடங்கள் முன்னால் கேரளாவில் கால்குலஸ் சார்ந்த (வேறுவகை) அறிவு இருந்தது என்பது இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் அது ஏன் இந்தியாவில் ஒரு கல்விப்புலமாக பரவவும் இல்லை, காலப்போக்கில் பல்வேறு கணித கருத்தாக்கங்களாக வளரவும் இல்லை என்பது முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட மக்கள் மட்டும் குறிப்பிட்ட வேலையை செய்த நம் சாதிய அமைப்பு அதற்கு ஒரு காரணம் என்பது எளிமையான விடை (கடினமான விடையாக வேறு ஏதாவது கூட இருக்கலாம்)யாக தோன்றுகிறது. ஒரு தொடர்ச்சியான பார்ம்பரியம் இங்கே இல்லாதன் காரணங்களுக்கும், நம் பல்கலை கழகங்கள் வெத்தாக இருப்பதற்கும் கூட தொடர்பிருக்கலாம். இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதும் நம் பல்கலைகழகங்களை ஆய்வுக்குரிய இடமாக மாற்ற முயல்வவதும்தான் தீர்வாகமுடியும். யாரோ சில பணக்காரர்கள் (இன்னொரு) ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இதை தீர்க்க முடியாது.
பின் குறிப்பு: வசந்த கந்தசாமி போன்ற திறமையாளர்களை ஒதுக்கும் பார்பனிய சூழல்தான் கணிதம் அறிவியல் வளராததற்கு காரணம் என்று ஒருவர் பின்னூட்டியிருந்தார். பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். பர்ப்பனிய அரசியல் சார்ந்த பிரச்சனை ஐஐடிகளில் மிக தூக்கலாகவும், மற்ற இடங்களில் ஓரளவும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து. ஆனால் வசந்த கந்தசாமி போலியானவர்.அவரது பக்களிப்புகளுக்கு ஆய்வுலகில் குப்பைகளுக்கான மதிப்பு மட்டுமே உள்ளது. அவர் உண்மையில் தன்னை மாபெரும் கணித மேதை என்று சொல்லி பெரியாரிஸ்டுகளையும் சாதி எதிர்ப்பாளர்களையும்தான் ஏமாற்றி வருகிறார்.
Monday, July 27, 2015
மூட ஊற்று!
எம்மெஸ்வி ரசிகர்கள் என்று சொல்லிகொள்பவர்களின் உள்ளத்தில் ராஜா மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்த்திருக்கவில்லை. கடவுளால் புதிதாக படைக்கப்பட்ட காட்டாறு வழியில் உள்ளதையெல்லாம் தன்மயமாக்கி இழுத்துச் செல்வது போல், ராஜா ஆக்ரமித்துக் கொண்டிருந்த என் சிறுவயது காலத்தில், குழந்தைத்தனம் பொருந்திய பெரியவர்களின் சண்டையை பார்த்ததற்கு மேல் வெறுப்பை நான் எதிர்கொண்டதில்லை. ரஹ்மான் X ராஜா என்ற முரண் புரிதலுக்கு உட்பட்டது. ரஜினி X கமல் என்ற முரண் கூட வரலாற்றில் மழுங்கி போன நிலையில், ராஜா X எம்மெஸ்வி என்ற முரண் இன்று தீவிரமாக இருக்காது என்று நினைத்தேன்.
ஞாநி போன்ற அரசியல் கழிவுகள் பற்ற வைத்தது என்றாலும், மூன்று நாட்களாக ஒரு எம்மெஸ்வி குழுவில் வாசித்ததும் எதிர்வினை வைத்ததும் (நம்ம விடுவோமா!) மனதில் ஏற்படுத்திய தொந்தரவுகளும் முக்கிய பாடம். எம்மெஸ்வி பற்றிய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பதை, நான் பலமுறை எடுத்துச் சொன்ன பிறகும் அவர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. வெறுப்பைப் போன்ற மூடத்தனத்தின் ஊற்று வேறு உண்டோ! இப்போதும் - காசு பிரச்சனை பற்றி பேச இனி எதுவுமே இல்லாதாதால்- ஜேம்ஸ் வசந்தன் தன் அண்மைக்கால பிரச்சனைகளால் வன்மமாக போடும் நிலைத்தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் எங்காவது ஒரு ரசிகர் கூட்டம், தன் ரசனைக்கான ஆதர்ச பிம்பம் குறித்த நிகழ்ச்சி ஒன்று மோசமாக இருக்கிறது என்று சொல்லும் மதிப்புரையை ஆர்வமாக பகிர்ந்து கொண்டிருக்குமா? இதுதான் வெறுப்பின் அழிவுபூர்வமான முட்டாள்தனம். நான் ஒரு ராஜா ரசிகன் என்பதை தூர வைத்துவிட்டு, ஒரு சமூக அவாதானிப்பாளனாக எனக்கு இது ரொம்ப முக்கியமானதாகவும் சுவாரசியமாகவும் உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் உண்டு. ரொம்ப காலமாக கீரல் விழுந்த ரெகார்டாக ஒரு விஷயத்தை புத்திசாலி கிளிப்பிள்ளைகள் சொல்லி வருகிறார்கள். இளையராஜா மீது இன்று பலர் வன்மமாக எழுதுவதற்கு ராஜா ரசிகர்கள்தான் காரணம்; இவர்கள் ராஜாவை தவிர மற்றவர்களை மட்டமாக நினைப்பதாலும், இவர்களின் வாய் நீளத்தாலும்தான் ராஜாவை எல்லோரும் திட்டுகிறார்கள் என்பது. இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொள்வோம். ராஜா ரசிகர்களின் செயல்களுக்கு எதிர்வினையாக அறிவு மழுங்கியவன்தான் ராஜாவை திட்டுவான்; அறிவு உள்ளவன் மிஞ்சிப்போனால் ராஜா ரசிகர்களை மட்டுமே திட்டுவான். சரி, அறிவு மழுங்கியவர்கள் அல்ல நாம் கவனிக்க வேண்டியது. எம்மெஸ்வி ரசிகர்கள் ராஜாவை பற்றி கும்பலாக அவ்வளவு வன்மமாக -தங்கள் ஆதர்ச பிம்பமான எம்மெஸ்விக்கு அஞ்சலி செலுத்தி, வசூலித்த கட்டணத்தை எம்மெஸ்வி குடும்பத்திற்கு அளிக்கப் போவதற்காக - திட்டிக் கொண்டிருக்கும் போது, ராஜா ரசிகர்கள் வருத்தத்துடன் பதில் சொன்னார்களே ஒழிய, ஒருவர் கூட எம்மெஸ்வி பற்றி குறைவாக ஒரு சொல் சொல்லவில்லை. திரும்ப திரும்ப எம்மெஸ்வி மீது ராஜா வைத்துள்ள மதிப்பை பற்றிதான் பேசினார்கள். ஆகையால் ரசிகர்கள் வாய் நீண்டால் ரசிக்கப்படும் திருஉரு அவமதிக்கப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை.
ஞாநி போன்ற அரசியல் கழிவுகள் பற்ற வைத்தது என்றாலும், மூன்று நாட்களாக ஒரு எம்மெஸ்வி குழுவில் வாசித்ததும் எதிர்வினை வைத்ததும் (நம்ம விடுவோமா!) மனதில் ஏற்படுத்திய தொந்தரவுகளும் முக்கிய பாடம். எம்மெஸ்வி பற்றிய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பதை, நான் பலமுறை எடுத்துச் சொன்ன பிறகும் அவர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. வெறுப்பைப் போன்ற மூடத்தனத்தின் ஊற்று வேறு உண்டோ! இப்போதும் - காசு பிரச்சனை பற்றி பேச இனி எதுவுமே இல்லாதாதால்- ஜேம்ஸ் வசந்தன் தன் அண்மைக்கால பிரச்சனைகளால் வன்மமாக போடும் நிலைத்தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் எங்காவது ஒரு ரசிகர் கூட்டம், தன் ரசனைக்கான ஆதர்ச பிம்பம் குறித்த நிகழ்ச்சி ஒன்று மோசமாக இருக்கிறது என்று சொல்லும் மதிப்புரையை ஆர்வமாக பகிர்ந்து கொண்டிருக்குமா? இதுதான் வெறுப்பின் அழிவுபூர்வமான முட்டாள்தனம். நான் ஒரு ராஜா ரசிகன் என்பதை தூர வைத்துவிட்டு, ஒரு சமூக அவாதானிப்பாளனாக எனக்கு இது ரொம்ப முக்கியமானதாகவும் சுவாரசியமாகவும் உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் உண்டு. ரொம்ப காலமாக கீரல் விழுந்த ரெகார்டாக ஒரு விஷயத்தை புத்திசாலி கிளிப்பிள்ளைகள் சொல்லி வருகிறார்கள். இளையராஜா மீது இன்று பலர் வன்மமாக எழுதுவதற்கு ராஜா ரசிகர்கள்தான் காரணம்; இவர்கள் ராஜாவை தவிர மற்றவர்களை மட்டமாக நினைப்பதாலும், இவர்களின் வாய் நீளத்தாலும்தான் ராஜாவை எல்லோரும் திட்டுகிறார்கள் என்பது. இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொள்வோம். ராஜா ரசிகர்களின் செயல்களுக்கு எதிர்வினையாக அறிவு மழுங்கியவன்தான் ராஜாவை திட்டுவான்; அறிவு உள்ளவன் மிஞ்சிப்போனால் ராஜா ரசிகர்களை மட்டுமே திட்டுவான். சரி, அறிவு மழுங்கியவர்கள் அல்ல நாம் கவனிக்க வேண்டியது. எம்மெஸ்வி ரசிகர்கள் ராஜாவை பற்றி கும்பலாக அவ்வளவு வன்மமாக -தங்கள் ஆதர்ச பிம்பமான எம்மெஸ்விக்கு அஞ்சலி செலுத்தி, வசூலித்த கட்டணத்தை எம்மெஸ்வி குடும்பத்திற்கு அளிக்கப் போவதற்காக - திட்டிக் கொண்டிருக்கும் போது, ராஜா ரசிகர்கள் வருத்தத்துடன் பதில் சொன்னார்களே ஒழிய, ஒருவர் கூட எம்மெஸ்வி பற்றி குறைவாக ஒரு சொல் சொல்லவில்லை. திரும்ப திரும்ப எம்மெஸ்வி மீது ராஜா வைத்துள்ள மதிப்பை பற்றிதான் பேசினார்கள். ஆகையால் ரசிகர்கள் வாய் நீண்டால் ரசிக்கப்படும் திருஉரு அவமதிக்கப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை.
Monday, January 5, 2015
'பாப்பான்'னு திட்டலாமா?
என்னிடம் @AmmU_MaanU கேட்டதற்கு சுருக்கமான பதில்: விரிவான எல்லா பிரச்சனைகளையும் தொட்டு பதில் வேண்டுமெனில் விரிவாக நான் எழுதத் தொடங்கும் காலம் வரை காத்திருக்க வேண்டும்.
//சு.சாமி ஒரு பயஸ்ட் உளறுவாயர் என்பது ஊர் அறிந்த விஷயம். ̀பாப்பான்' என்று திட்டுவது பற்றி உங்கள் கருத்தென்ன? ஓக்கேயா, தவறா ?//
முதலில் சுப்பிரமணியசாமி உளரல்கள் பற்றி நான் எதுவும் கருத்து இப்போது சொல்லவில்லை; பத்ரி திருவாய் மலர்ந்தருளியது பற்றி மட்டுமே சொன்னேன். என் குட்டி ஃபேஸ்புக் பதிவை எதிர்கொள்ள விரும்பினால் அது பற்றிதான் நீங்கள் பேசவேண்டும். சு.சாமி சொன்னதை முன்வைத்து பத்ரி சொன்னதும் உளரல் என்கிறீர்களா?
அடுத்து பாப்பான் என்று திட்டலாமா என்பது முக்கியமான கேள்வி. திட்டுவது என்பதே பிரச்சனைக்குரியதுதான்; ஆனால் திட்டுவது என்பதை பலரும் பல நேரங்களில் செய்கிறோம். குறிப்பாக எழுதும்போது கட்டுரைகளில், விவாதங்களில், எதிர்வினைகளில் திட்டுவது மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால் எந்த கட்டத்திலும் யாரையும் திட்டவே திட்டியிராத ஒரு எழுத்தாளரை சொல்வது கடினமாயிருக்கிறது. திட்டுவது என்று வந்தபின் திட்டும் காரணங்கள் அது சார்ந்த மனநிலை பொறுத்தது வசைச்சொல். திருடன், அயோக்கியன் என்பதுபோல போல பாப்பன் என்பது ஒரு வசைதான். திட்டுவதன் பின்னுள்ள கருத்து நிலைபாடு திட்டும் வார்த்தைகளை விட முக்கியம். திட்டுதல் என்ற நிலையில் இல்லாமலே கூட ஊழல் செய்பவனை திருடன் என்றும், அநியாயம் செய்தவனை அயோக்கியன் என்றும் சொல்வதில்லையா! அதே போல பார்பனிய கருத்துக்களை முன்வைப்பவரை பாப்பான் என்று ஒருவர் சொல்லக்கூடடும். நான் பார்ப்பனியம் என்று ஒன்று கருத்தாக்கமாகவும், சமூக ஒழுங்காகவும், நடைமுறையாகவும், அரசியலாகவும் (இன்றும்) இருக்கிறது, அது (மற்ற எத்தனையோ விஷயங்களை போல) மனித குல விரோதமானது என்று நினைக்கிறேன். இந்த நிலைபாடுதான் முக்கியமே ஒழிய திட்டுவது என்பது எல்லோரையும் போல அந்தந்த சமய சந்தர்ப்பங்களை சார்ந்தது.
மற்றபடி வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் சந்தர்ப்பவாதமாக ̀பாப்பான்' என்பதையும், விவாதத்தில் தர்க்க அடிபட்ட கோபத்தில் வாய்க்கு வந்தபடி கண்டதையும் பார்பனியம் என்பதையும் எதிர்த்து நான் பலமுறை கருத்து சொல்லியுள்ளேன். MSS பாண்டியனுக்கு அஞ்சலியாக எழுதிய பதிவிலும் இதை சொல்லியுள்ளேன்.
இவை இப்படியிருக்க இந்த சயம சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பாப்பான் என்று முத்திரை குத்துவதை வேறு வழிகளில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களும் கூட செய்துள்ளனர். அது என்னமோ அந்த நேரத்தில் உங்களை போன்றவர்கள் இப்படி கருத்துக்கு எதிர்வினையாக ஜாதி பற்றி பேசலாமா என்று வருவதில்லை. சமீபத்தில் கூட ராஜன்குறையை அப்படி (அச்சுபிச்சுத்தனமாக) தாக்கிவிட்டு அவர் வாதங்களை எதிர்கொள்ளாமல் ஜெயமோகன் அழுகுணி ஆட்டம் ஆடவில்லையா? ஆகையால் இதெல்லாம் அரசியல் விவாதத்தில் சாதாரணம் என்று சொல்லி இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.
//சு.சாமி ஒரு பயஸ்ட் உளறுவாயர் என்பது ஊர் அறிந்த விஷயம். ̀பாப்பான்' என்று திட்டுவது பற்றி உங்கள் கருத்தென்ன? ஓக்கேயா, தவறா ?//
முதலில் சுப்பிரமணியசாமி உளரல்கள் பற்றி நான் எதுவும் கருத்து இப்போது சொல்லவில்லை; பத்ரி திருவாய் மலர்ந்தருளியது பற்றி மட்டுமே சொன்னேன். என் குட்டி ஃபேஸ்புக் பதிவை எதிர்கொள்ள விரும்பினால் அது பற்றிதான் நீங்கள் பேசவேண்டும். சு.சாமி சொன்னதை முன்வைத்து பத்ரி சொன்னதும் உளரல் என்கிறீர்களா?
அடுத்து பாப்பான் என்று திட்டலாமா என்பது முக்கியமான கேள்வி. திட்டுவது என்பதே பிரச்சனைக்குரியதுதான்; ஆனால் திட்டுவது என்பதை பலரும் பல நேரங்களில் செய்கிறோம். குறிப்பாக எழுதும்போது கட்டுரைகளில், விவாதங்களில், எதிர்வினைகளில் திட்டுவது மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால் எந்த கட்டத்திலும் யாரையும் திட்டவே திட்டியிராத ஒரு எழுத்தாளரை சொல்வது கடினமாயிருக்கிறது. திட்டுவது என்று வந்தபின் திட்டும் காரணங்கள் அது சார்ந்த மனநிலை பொறுத்தது வசைச்சொல். திருடன், அயோக்கியன் என்பதுபோல போல பாப்பன் என்பது ஒரு வசைதான். திட்டுவதன் பின்னுள்ள கருத்து நிலைபாடு திட்டும் வார்த்தைகளை விட முக்கியம். திட்டுதல் என்ற நிலையில் இல்லாமலே கூட ஊழல் செய்பவனை திருடன் என்றும், அநியாயம் செய்தவனை அயோக்கியன் என்றும் சொல்வதில்லையா! அதே போல பார்பனிய கருத்துக்களை முன்வைப்பவரை பாப்பான் என்று ஒருவர் சொல்லக்கூடடும். நான் பார்ப்பனியம் என்று ஒன்று கருத்தாக்கமாகவும், சமூக ஒழுங்காகவும், நடைமுறையாகவும், அரசியலாகவும் (இன்றும்) இருக்கிறது, அது (மற்ற எத்தனையோ விஷயங்களை போல) மனித குல விரோதமானது என்று நினைக்கிறேன். இந்த நிலைபாடுதான் முக்கியமே ஒழிய திட்டுவது என்பது எல்லோரையும் போல அந்தந்த சமய சந்தர்ப்பங்களை சார்ந்தது.
மற்றபடி வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் சந்தர்ப்பவாதமாக ̀பாப்பான்' என்பதையும், விவாதத்தில் தர்க்க அடிபட்ட கோபத்தில் வாய்க்கு வந்தபடி கண்டதையும் பார்பனியம் என்பதையும் எதிர்த்து நான் பலமுறை கருத்து சொல்லியுள்ளேன். MSS பாண்டியனுக்கு அஞ்சலியாக எழுதிய பதிவிலும் இதை சொல்லியுள்ளேன்.
இவை இப்படியிருக்க இந்த சயம சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பாப்பான் என்று முத்திரை குத்துவதை வேறு வழிகளில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களும் கூட செய்துள்ளனர். அது என்னமோ அந்த நேரத்தில் உங்களை போன்றவர்கள் இப்படி கருத்துக்கு எதிர்வினையாக ஜாதி பற்றி பேசலாமா என்று வருவதில்லை. சமீபத்தில் கூட ராஜன்குறையை அப்படி (அச்சுபிச்சுத்தனமாக) தாக்கிவிட்டு அவர் வாதங்களை எதிர்கொள்ளாமல் ஜெயமோகன் அழுகுணி ஆட்டம் ஆடவில்லையா? ஆகையால் இதெல்லாம் அரசியல் விவாதத்தில் சாதாரணம் என்று சொல்லி இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.
Sunday, December 7, 2014
அறிவே ஆயுதமாக மட்டுமின்றி கேடயமாகவும்!
எம்.எஸ்.எஸ் பாண்டியன் இறந்த பிறகு அவரை பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் விடுதலை ராஜேந்திரன் குறிப்பிட்டது போல், இவ்வளவுதூரம் கவனிக்கப்படுவோம் என்று அறிந்திருந்தால் அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க க் கூடும். அறிவுலகில் தனித்துவமான பங்களிப்பை கொண்டவர் இறந்த பிறகாவது சரியான வகையில் கொண்டாடப்படுவது மகிழ்சிக்குரியதுதான்.
திராவிட மற்றும் விளிம்புநிலை அரசியல் சார்ந்து பாண்டியனின் பங்களிப்பை பற்றி பலரும் சொல்லியாகிவிட்டது; அவை அனைத்தும் அவரின் தனித்துவமான அறிவு சார்ந்த பங்களிப்புகள்தான். குறுகிய கால அளவில் பாண்டியனுடம் பழகிய, விவாதித்த வகையில் அவரின் தனித்தன்மையாக ஒரு முக்கிய பண்பை பதிவு செய்ய நினைக்கிறேன். ̀அறிவை ஆயுதமாக்கியவர்' என்று நான் வாசித்த பலவற்றில் ஒருவர் எழுதியிருந்தார். ஆயுதமாக மட்டுமின்றி, கேடயமாகவும் அறிவை மட்டுமின்றி வேறு எதையும் அவர் பயன்படுத்தியதாக தோன்றவில்லை. வேறு மனநிலையில் ஃபேஸ்புக்கில் சில ஒருவரி சில்லறை கமெண்டுகளை அளித்திருந்தாலும், ஒரு அறிவுரீதியான விவாதத்தில் முத்திரை குத்தல்களையோ, குறிப்பாக பதில் சொல்ல முடியாத சிக்கலை சமாளிக்க அடிமடி தாக்குதலை அவர் செய்வதில்லை.
ஒரேவகை இலக்கை கொண்ட எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இருவர், ஒருவரை ஒருவர் மிக மோசமான அவதூறுகளுடன் திட்டிக்கொள்வதை -குறிப்பாக இணையம் சார்ந்த கருத்து பரவலாக்கம் நிகழ்ந்த பின்- சர்வ சாதாரணமாக அனுதினம் காண்கிறோம். இதை முதிராத இளைஞர்கள் மட்டும் செய்யவில்லை; பண்பட்டுவிட்ட முதிர்ந்த அரசியல் எழுத்தாளர்களும், வெகு காலமாக தான் சார்ந்த மாற்று அரசியலையும் தன்னையும் ஆதரித்த ஒருவரை, தனக்கு உவப்பில்லாத மாற்று நிலைபாடு காரணமாக, மிக எளிதாக பார்ப்னிய இந்துத்வ முத்திரை குத்தல் செய்து எதிர்கொள்வதை காணலாம். இதற்கு விதிவிலக்கான அரசியல் எழுத்தாளர் ஒருவரை என்னால் உதாரணிக்க முடியவில்லை.
தனது வாய்ப்பாடுகளில் அடங்காத கருத்தைச் சொல்பவர், உள்ளே உறைந்திருக்கும் இந்துத்வ அல்லது பார்பனிய மனோபாவத்தால்தான் அதை சொல்வதாக சொல்லிவிட்டு தாண்டி செல்வது மிக எளிது; இவ்வாறு சுயலாபத்திற்காக மட்டும் சொல்வதில்லை; குதிரை தட்டை பார்வையில் தென்படுவதை கொண்டு அதை உண்மையாக நம்பி சொல்பவர்களே பலர். ̀இன்னொரு பூனை வெளிவந்துவிட்டது' என்கிற பத்து பைசா பெறாத கண்டுபிடிப்பின் மூலம் ஒப்புக்கு ஒரு பூனைப்படையை கூட உருவாக்க முடியாது. மாறாக தனக்கு உவபில்லாத நட்புத்தரப்பை (அல்லது எதிர்தரப்பை) வேறுபட்ட நிலைபாடாக அங்கீகரித்து எதிர்கொள்வதே அறிவுச் செயல்பாடாக இருக்கமுடியும். நான் அவதானித்த அளவில் தமிழ் சூழலில் பலருக்கு இல்லாத இந்த அறிவு போர்முறை பாண்டியனிடம் உள்ளதாக கருதுகிறேன்.
பார்பனியம், இந்துத்வம் என்ற சொல்லாடல்களை முத்திரைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் சொல்லவரவில்லை. பார்ப்னியம், இந்துத்வம் இன்னும் குறிப்பாக முற்போக்கு நிறம் காட்டும் பார்பனியம் மற்றும் இந்துத்வம் என்பது நம் சூழலின் நிலவும் ஒரு கருத்தியல். அதை வெளிப்படையாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பது மட்டுமல்ல, அது மிக அவசியமான அடையாளம் காணும் வேலையும் கூட. எதிர்கொள்ளும் வசதிக்காகவும், தர்க்கம் தொலைந்த தருணங்களில் வசை மருந்தாக கொள்வதை பற்றியும் மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். கட்டுரையின் போக்கிலோ, தனித்த ஒரு தாக்குதலிலோ சிலவற்றை பாண்டியன் சொல்லியிருக்கலாம்; ஆனால் ஒரு விவாதத்தின் போக்கில் இதற்கு மாறான அணுகுமுறையை பாண்டியன் கொண்டதாக நானறிந்த வரையில் மனப்பதிவு கொண்டிருக்கிறேன். நான் அவரிடம் கற்று பின்பற்ற முயலும் பாடமாகவும் இதை கொள்கிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.
Thursday, July 25, 2013
அரசியல் கருதுகோளும் அறிவு நிஜமும்
ஐஐடியில் நிலவும் பார்பனிய அரசியல் பற்றியும், அதே நேரம் அதற்கான எதிர்பரசியலை வசந்த கந்தசாமியை முன்வைத்து முன்னெடுக்க முடியாது என்கிற வாதத்தையும் கடந்த 10 வருடங்களாக வேறு வேறு இடங்களில் இணையத்தில் நான் முன்வைத்து இருக்கிறேன்.
வசந்தா கந்தசாமி இந்தியாவில் வேறு யாருடனும் ஒப்பிடமுடியாத மாபெரும் கணிதமேதை என்று அவரை சார்ந்தவர்கள் பொய்யாகவும், அவரை சாரத கணிதத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தவறாகவும் செய்தி பரப்பிக்கொன்டிருக்கிறனர். அவரது ஆரய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கைக்காக ஒருவேளை நீதிமன்றம் கூட அந்த பொய்யை உண்மையாக ஏற்று அவருக்கு ஆதரவாக தீர்ப்பு தரகூடும். அப்படி நடந்தால் கூட அவரது ஆய்வு கட்டுரைகள் குப்பை என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் நான் சொல்லுவேன். குப்பைகள் எவ்வளவு எழுதி குவித்தாலும் ஒரே ஒரு உண்மையான இரண்டு பக்க பேப்பரின் அருகில் வரமுடியாது. ஆகையால் ஒரு மாபெரும் கணித மேதைக்கு பதவி உயர்வே தராமல் வஞ்சிக்கபடுவதாக சொல்லப்படும் செய்தி பொய்யானது. பதிவி நியமனத்தில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட அநீதி நிகழ்ந்திருக்கலாம். அது என்ன வகை அநீதி என்று கேள்விப்பட்டவைகளை மட்டும் வைத்து என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை; அவர் தரப்பு வாதத்தை மட்டும் வைத்தும் முடிவுக்கு வரமுடியாது; எதிர்தரப்பின் வாதத்தை நான் முழுமையாக அறியவுமில்லை. ஆனால் அது பார்பனரல்லாத ஒரே காரணத்திற்காக நடந்தது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தோன்றவில்லை. அதே கணிதத்துறையில் இருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் பார்பனியத்துக்கு கூஜா தூக்கியவர்கள் அல்ல. எந்த விஷயத்தையும் சிக்கல்கள் இல்லாமல் புரிய முனைவது வசதியாக இருக்குமே ஒழிய அரசியல் பாதுகாப்பானது அல்ல.
இது தவிர ஐஐடி மீது குறிப்பாக இட ஒதுக்கீடு அரசியல் சார்ந்து விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட அரசியல் நியாயமானது என்பதுதான் என் நிலைபாடு; அதற்காக தவறான உதாரணத்தை கொண்டாடுவது அந்த அரசியலுக்கு நண்மை பயக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் பெரியார் குறித்து ("Fuzzy and Neutrosophic analysis ofPeriyar's views on untouchability") எழுதியுள்ள நூல் எந்த பயனும், அறிவு உள்ளடக்கமும் அற்ற குப்பை மட்டுமல்ல, முழுக்க ஒரு ஏமாற்று வேலை. இதை என்னால் விரிவாக எழுதமுடியும்; ஆனால் என் அரசியல் முன்னுரிமை இதை எழுதுவதற்கு இல்லை. சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்று வரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.தனமான கட்டுரைக்கு எதிர்வாதம் வைப்பதே எனக்கான முன்னுரிமையாக இருக்கும். ஆனால் provoke செய்யப்படும் சவால் வந்து அவசியம் என்று தோன்றினால் இதற்காக வீணாகும் நேரத்தை ஒதுக்கி இந்த செயலில் ஈடுபட நேரலாம்.
வசந்தா கந்தசாமி இந்தியாவில் வேறு யாருடனும் ஒப்பிடமுடியாத மாபெரும் கணிதமேதை என்று அவரை சார்ந்தவர்கள் பொய்யாகவும், அவரை சாரத கணிதத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தவறாகவும் செய்தி பரப்பிக்கொன்டிருக்கிறனர். அவரது ஆரய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கைக்காக ஒருவேளை நீதிமன்றம் கூட அந்த பொய்யை உண்மையாக ஏற்று அவருக்கு ஆதரவாக தீர்ப்பு தரகூடும். அப்படி நடந்தால் கூட அவரது ஆய்வு கட்டுரைகள் குப்பை என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் நான் சொல்லுவேன். குப்பைகள் எவ்வளவு எழுதி குவித்தாலும் ஒரே ஒரு உண்மையான இரண்டு பக்க பேப்பரின் அருகில் வரமுடியாது. ஆகையால் ஒரு மாபெரும் கணித மேதைக்கு பதவி உயர்வே தராமல் வஞ்சிக்கபடுவதாக சொல்லப்படும் செய்தி பொய்யானது. பதிவி நியமனத்தில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட அநீதி நிகழ்ந்திருக்கலாம். அது என்ன வகை அநீதி என்று கேள்விப்பட்டவைகளை மட்டும் வைத்து என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை; அவர் தரப்பு வாதத்தை மட்டும் வைத்தும் முடிவுக்கு வரமுடியாது; எதிர்தரப்பின் வாதத்தை நான் முழுமையாக அறியவுமில்லை. ஆனால் அது பார்பனரல்லாத ஒரே காரணத்திற்காக நடந்தது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தோன்றவில்லை. அதே கணிதத்துறையில் இருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் பார்பனியத்துக்கு கூஜா தூக்கியவர்கள் அல்ல. எந்த விஷயத்தையும் சிக்கல்கள் இல்லாமல் புரிய முனைவது வசதியாக இருக்குமே ஒழிய அரசியல் பாதுகாப்பானது அல்ல.
இது தவிர ஐஐடி மீது குறிப்பாக இட ஒதுக்கீடு அரசியல் சார்ந்து விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட அரசியல் நியாயமானது என்பதுதான் என் நிலைபாடு; அதற்காக தவறான உதாரணத்தை கொண்டாடுவது அந்த அரசியலுக்கு நண்மை பயக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் பெரியார் குறித்து ("Fuzzy and Neutrosophic analysis ofPeriyar's views on untouchability") எழுதியுள்ள நூல் எந்த பயனும், அறிவு உள்ளடக்கமும் அற்ற குப்பை மட்டுமல்ல, முழுக்க ஒரு ஏமாற்று வேலை. இதை என்னால் விரிவாக எழுதமுடியும்; ஆனால் என் அரசியல் முன்னுரிமை இதை எழுதுவதற்கு இல்லை. சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்று வரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.தனமான கட்டுரைக்கு எதிர்வாதம் வைப்பதே எனக்கான முன்னுரிமையாக இருக்கும். ஆனால் provoke செய்யப்படும் சவால் வந்து அவசியம் என்று தோன்றினால் இதற்காக வீணாகும் நேரத்தை ஒதுக்கி இந்த செயலில் ஈடுபட நேரலாம்.
Monday, May 27, 2013
இன்று இப்படித்தான் யோசிக்க முடிகிறது!
ஜெயமோகன் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்பட வேண்டியவர் என்பதுதான் என் நிலைபாடும்; என்னால் ஆன அளவு நானும் எதிர்த்திருக்கிறேன்; எதிர்க்கிறேன். ஆனால் ஜெமோ சொன்னதன் எதிர்வினையாக தமிழ் வெகுசமூகத்தின் ஆழ்நோயை புறக்கணிக்கவோ, அப்படி ஒன்று இல்லையென்று மறுக்கவோ முடியாது. சமத்துவம் சார்ந்ததாக தன் நிலைபாட்டை கற்பித்துக் கொண்ட ஞாநியின் பதிவு வழக்கம் போல அபத்தமானது. அதற்கு ஜெமோவின் (அவரது வார்த்தையில்) தமிழ் 'பரப்பியல் கலாச்சார' சாடுதலே மேல். அறிவுபூர்வத்தை மலினப்படுத்துவதை எதிர்ப்பது பாசிசமாகாது. இந்த மலினப்படுத்தலை தமிழ் சமூகத்தில் எல்லா தளங்களிலும்-பல்கலைகழக்த்திலிரு ந்து, ட்விட்டர்வரை- காண்கிறோம். கேரளத்தில் இப்படி இல்லையா, கர்நாடகத்தில் இல்லையா என்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு சாலைகளில் கேட்கும் ஹார்ன் ஒலிபோல இவ்வளவு நாராசமாக வேறு எங்கும் இல்லை என்பதுதான் என் திடமான மனப்பதிவு. ஜெமோ சொல்லிவிட்டார் என்பதற்காக, அறிவுக்கு எதிரான அதிகாரம் கொண்ட பாமரத் திமிருக்கு கருத்தியல் நியாயம் கற்பிப்பது அறிவுடமை ஆகாது.
ஜெமோவிற்கு இதை சொல்ல அருகதை இல்லை என்றால் இருந்துவிட்டு போகட்டும். தமிழ் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் ஜெமோவை புறக்கணித்து விட்டாவது இந்த நோயை அணுகித்தான் ஆகவேண்டும். இதற்கு திராவிட இயக்கமும் திரைப்பட கலாச்சரமும்*தான்* காரணம் என்று நான் ஜெமோ போல் எண்ணவில்லை; ஒருவேளை அவைதான் காரணம் என்றால், ஜெமோ முன்வைக்கும் அறிவியக்கத்தை விட திராவிட அரசியலும், தமிழ் வெகுஜன கலாச்சாரமும் முக்கியம் என்பதுதான் என் எண்ணம். ஆனால் இவை இரண்டிற்கும் பங்கில்லை என்றும் உறுதியாக சொல்லி காலத்தின் தேவையான விமர்சனத்தையும் மறுக்க முடியாது.
திமுகவின் எல்லவகை ஊழலுக்கும், பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்தது உடப்பட்ட எல்லாவகை சந்தர்ப்பவாத அரசியலுக்கும், துரோகங்களுக்கும் அளிக்ககூடிய கருத்தியல் நியாயத்தை, தமிழ் சமூகத்தின் தீராத நோய்களுக்கும் மருந்து என்று எண்ணி இடலாகாது.
ஜெமோவிற்கு இதை சொல்ல அருகதை இல்லை என்றால் இருந்துவிட்டு போகட்டும். தமிழ் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் ஜெமோவை புறக்கணித்து விட்டாவது இந்த நோயை அணுகித்தான் ஆகவேண்டும். இதற்கு திராவிட இயக்கமும் திரைப்பட கலாச்சரமும்*தான்* காரணம் என்று நான் ஜெமோ போல் எண்ணவில்லை; ஒருவேளை அவைதான் காரணம் என்றால், ஜெமோ முன்வைக்கும் அறிவியக்கத்தை விட திராவிட அரசியலும், தமிழ் வெகுஜன கலாச்சாரமும் முக்கியம் என்பதுதான் என் எண்ணம். ஆனால் இவை இரண்டிற்கும் பங்கில்லை என்றும் உறுதியாக சொல்லி காலத்தின் தேவையான விமர்சனத்தையும் மறுக்க முடியாது.
திமுகவின் எல்லவகை ஊழலுக்கும், பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்தது உடப்பட்ட எல்லாவகை சந்தர்ப்பவாத அரசியலுக்கும், துரோகங்களுக்கும் அளிக்ககூடிய கருத்தியல் நியாயத்தை, தமிழ் சமூகத்தின் தீராத நோய்களுக்கும் மருந்து என்று எண்ணி இடலாகாது.
Saturday, May 4, 2013
அன்புள்ள குழலிக்கு...
அன்புள்ள குழலி, இதை கொலை அல்ல என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. கொலை செய்தவர்களை வண்மையாக கண்டிக்கிறேன். நாட்டில் நடக்கும் ப்ரொஃப்ஷனல் கொலைகளை எல்லாம் நான் கண்டிப்பதில்லை; நீங்கள் என் பெயரை குறிப்பிட்டு கருத்து கேட்பதால் நேரடியான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்.
ஆனால் நீங்கள் குறிப்பாக யாரையோ கண்டிக்க என்னை அழைப்பதாக தெரிகிறது. யாரை என்று தெளிவாக சொல்லுங்கள். திருமாவளவனையா? அவர் இந்த கொலைக்கு பின்னால் ஒரு திட்டமிட்டவாரக இருப்பதாக நீங்களும், வன்னிய ஜாதிவெறி தரப்பை மட்டும் ஒலிக்கும் ஒரு குழு மட்டுமே சொல்கிறது. வேறு வகையில் இதற்கு ஆதரமாக நம்பும்படி எந்த செய்தி வந்தாலும் அந்த நேரத்து கருத்தை பதிவுகிறேன். மற்றபடி இந்த கொலைக்கு தூண்டுதலாக திருமா எந்த பேச்சையாவது முன்வைத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. மறைமுகமாக தூண்டினார் என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் நம்ப ஆதாரம் என்ன? சிறிதும் விமர்சனம் இன்றி ஜாதி சார்பான நிலை எடுக்கும் நீங்கள் சொல்வதை மட்டும் எதை வைத்து நம்புவது? நம்பினால் அது திருமாவிற்கு செய்யும் அநீதியாக இருக்கும். திருமா இதுவரை பொதுவில் தெரிய பேசிய அனைத்தும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் ஆதரிக்கும் அரசியலாக இருக்கிறது என்றுதான் என்னால் என் கருத்தை பதிவு செய்ய முடியும். ஆகையால் திருமாவை கண்டிக்க ஏதுமில்லை.
திட்டமிட்டதாக அல்லாமல், ஆனால் விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் கூட செய்தவர்களை நிச்சயம் கண்டிக்கிறேன். இப்போது கொலை என்று சொல்லியுள்ள போலிஸோ, வேறு ஏதாவது ஆதரத்துடன் (உங்கள் தரப்பை தவிர) யார் சொன்னாலும் தீவிரமாக பரிசீலித்து கருத்தை முன்வைக்கிறேன்.
அல்லது அங்கிருக்கும் தலித் மக்களை கண்டிக்க வேண்டும் என்கிறீர்களா? பாமக ரௌடிகளிடம் அடிவாங்கி குடிசைகள் எரிந்தவர்களை கண்டிக்க சொல்கிறீர்களா? 'இரண்டு உயிரை விட குடிசை முக்கியமா' என்று உங்களை போல நான் கேட்கமுடியாது. தலித்களின் குடிசைகள் இரண்டு உயிர்களை விட முக்கியமாக இருக்கலாம். கலவரத்தை தூண்டிய தாக்கிய தரப்பை சார்ந்தவரை விட, தாக்கப்பட்டவர்கள் வாழும் குடிசைகள் முக்கிமானதாக படலாம். ஆனாலும் இங்கே தலித்கள்தான் தொடங்கினார்கள் என்று நம்ப ஆதரம் எதுவும் கிட்டவில்லை. நீங்கள் வழக்கம் போல போது புது புது தர்க்கங்களை உருவாக்குவதை தவிர வேறு ஆதாரம் கிடைக்கவில்லை.
மாறாக ராமதாஸும் ஒட்டு மொத்த பாமகவும் தமிழகம் இதுவரை காணாத ஜாதிவெறியை முன்வைத்திருக்கிறது. இதுவரை காணாத என்று ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு தீவிரமாக அமைப்புரீதியாக எல்லா ஆதிக்க ஜாதிகளையும் திரட்டி தலித் சமுதாயத்திற்கு எதிராக யாரும் அணிதிரட்டியதில்லை. (தலித்துக்கு எதிரான பொதுப்புத்தி எப்போதுமே உண்டு என்றாலும் அதை பொதுவில் ஒரு பெரும் அரசியல் குரலாக நியாயம் கற்பித்து அணி திரட்டி யாரும் முன்வைக்கவில்லை.) வன்முறையை தூண்டும் வகையில் எவ்வளவோ பேசியுள்ளது. வன்முறையில் இறங்குவோம் என்று பகிரங்கமாக அறைகூவியிருக்கிறது.'அமைதியாக அறவழியில் போராடுங்கள்' என்றாலே தொண்டர்கள் என்னவகை வன்முறையில் இறங்குவார்கள் என்று தெரிந்த நிலையில், இதற்கான விளைவு என்னவென்று சொல்லவேண்டியதில்லை. எந்த சந்தேகமும் இன்றி பலதரப்பட்ட வன்முறையை பாமக செய்திருக்கிறது. இப்படி வெளிப்படையாக தெரிந்த ஜாதிவெறி அரசியலையும், வன்முறை அரசியலையும்தான் மனித நேயமாக அறிவுபூர்வமாக, சிந்திப்பவர்கள் கண்டிக்கமுடியும். அதைத்தான் நான் கண்டிக்கிறேன். அதைத்தான் மரக்காணம் சம்பங்களுக்கு காரணமாக்குகிறேன். இன்னம்மும் நான் நம்பும் நல்லவர்கள் எனக்கு தெரிந்து இதை தீவிரமாக எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
எல்லா கொலைகளையும் நாம் கணக்கு வைத்து கண்டித்து கொண்டிருப்பதில்லை; நீங்களும் கண்டிப்பதில்லை. கண்டிபதற்கு பின் அரசியல் காரணம் உள்ளது. வன்னிய உயிர்கள் போய்விட்டதே என்று நீங்கள் துடிக்கிறீர்கள். வன்னிய ஜாதிவெறி வன்முறை அரசியலுக்கு தலித் மக்களும் இந்த இரண்டு உயிர்களும் பலியானதாக நான் கருதுகிறேன். அதையே கண்டிக்கிறேன்.
'கண்டித்தாயா.. கண்டித்தாயா..'' என்று இவ்வளவு நீளாமாக கேட்கும் நீங்கள் எதையாவது கண்டித்தீர்களா? மரக்காணம் கொலைகளை முற்போக்காளர்கள் கண்டிக்காததால் கண்டிக்கவில்லை என்று அநியாயமா க சொல்லாதீர்கள். அதை பற்றி பேசத்தொடங்கும் முன், சித்திரை திருவிழா பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுத்த போது, எங்காவது ராமதாஸ் + மற்றவர்களின் ஜாதிவெறி பேச்சை வன்முறையை எங்காவது கண்டித்தீர்களா? ஏதோ ஐபிஎல் பார்த்தது போலத்தானே நிலைத்தகவல் போட்டீர்கள். அந்த ஜாதிவெறி வன்முறை பேச்சை கண்டிக்காத நீங்கள் இப்போது அதை நியாயப்படுத்தும் நீங்கள் 'கண்டித்தீர்களா?' என்று மற்றவர்களை கேட்பதே பெரும் அநியாயம். நான் கண்டிக்கிறேன். நடந்த அனைத்திற்கும் ராமதாஸையும் கூட இருந்தவர்களையும் கண்டிக்கிறேன். மாறான புதிய தகவல்கள் நம்பகத்தன்மையுடன் வரும்வரை வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
ஆனால் நீங்கள் குறிப்பாக யாரையோ கண்டிக்க என்னை அழைப்பதாக தெரிகிறது. யாரை என்று தெளிவாக சொல்லுங்கள். திருமாவளவனையா? அவர் இந்த கொலைக்கு பின்னால் ஒரு திட்டமிட்டவாரக இருப்பதாக நீங்களும், வன்னிய ஜாதிவெறி தரப்பை மட்டும் ஒலிக்கும் ஒரு குழு மட்டுமே சொல்கிறது. வேறு வகையில் இதற்கு ஆதரமாக நம்பும்படி எந்த செய்தி வந்தாலும் அந்த நேரத்து கருத்தை பதிவுகிறேன். மற்றபடி இந்த கொலைக்கு தூண்டுதலாக திருமா எந்த பேச்சையாவது முன்வைத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. மறைமுகமாக தூண்டினார் என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் நம்ப ஆதாரம் என்ன? சிறிதும் விமர்சனம் இன்றி ஜாதி சார்பான நிலை எடுக்கும் நீங்கள் சொல்வதை மட்டும் எதை வைத்து நம்புவது? நம்பினால் அது திருமாவிற்கு செய்யும் அநீதியாக இருக்கும். திருமா இதுவரை பொதுவில் தெரிய பேசிய அனைத்தும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் ஆதரிக்கும் அரசியலாக இருக்கிறது என்றுதான் என்னால் என் கருத்தை பதிவு செய்ய முடியும். ஆகையால் திருமாவை கண்டிக்க ஏதுமில்லை.
திட்டமிட்டதாக அல்லாமல், ஆனால் விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் கூட செய்தவர்களை நிச்சயம் கண்டிக்கிறேன். இப்போது கொலை என்று சொல்லியுள்ள போலிஸோ, வேறு ஏதாவது ஆதரத்துடன் (உங்கள் தரப்பை தவிர) யார் சொன்னாலும் தீவிரமாக பரிசீலித்து கருத்தை முன்வைக்கிறேன்.
அல்லது அங்கிருக்கும் தலித் மக்களை கண்டிக்க வேண்டும் என்கிறீர்களா? பாமக ரௌடிகளிடம் அடிவாங்கி குடிசைகள் எரிந்தவர்களை கண்டிக்க சொல்கிறீர்களா? 'இரண்டு உயிரை விட குடிசை முக்கியமா' என்று உங்களை போல நான் கேட்கமுடியாது. தலித்களின் குடிசைகள் இரண்டு உயிர்களை விட முக்கியமாக இருக்கலாம். கலவரத்தை தூண்டிய தாக்கிய தரப்பை சார்ந்தவரை விட, தாக்கப்பட்டவர்கள் வாழும் குடிசைகள் முக்கிமானதாக படலாம். ஆனாலும் இங்கே தலித்கள்தான் தொடங்கினார்கள் என்று நம்ப ஆதரம் எதுவும் கிட்டவில்லை. நீங்கள் வழக்கம் போல போது புது புது தர்க்கங்களை உருவாக்குவதை தவிர வேறு ஆதாரம் கிடைக்கவில்லை.
மாறாக ராமதாஸும் ஒட்டு மொத்த பாமகவும் தமிழகம் இதுவரை காணாத ஜாதிவெறியை முன்வைத்திருக்கிறது. இதுவரை காணாத என்று ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு தீவிரமாக அமைப்புரீதியாக எல்லா ஆதிக்க ஜாதிகளையும் திரட்டி தலித் சமுதாயத்திற்கு எதிராக யாரும் அணிதிரட்டியதில்லை. (தலித்துக்கு எதிரான பொதுப்புத்தி எப்போதுமே உண்டு என்றாலும் அதை பொதுவில் ஒரு பெரும் அரசியல் குரலாக நியாயம் கற்பித்து அணி திரட்டி யாரும் முன்வைக்கவில்லை.) வன்முறையை தூண்டும் வகையில் எவ்வளவோ பேசியுள்ளது. வன்முறையில் இறங்குவோம் என்று பகிரங்கமாக அறைகூவியிருக்கிறது.'அமைதியாக அறவழியில் போராடுங்கள்' என்றாலே தொண்டர்கள் என்னவகை வன்முறையில் இறங்குவார்கள் என்று தெரிந்த நிலையில், இதற்கான விளைவு என்னவென்று சொல்லவேண்டியதில்லை. எந்த சந்தேகமும் இன்றி பலதரப்பட்ட வன்முறையை பாமக செய்திருக்கிறது. இப்படி வெளிப்படையாக தெரிந்த ஜாதிவெறி அரசியலையும், வன்முறை அரசியலையும்தான் மனித நேயமாக அறிவுபூர்வமாக, சிந்திப்பவர்கள் கண்டிக்கமுடியும். அதைத்தான் நான் கண்டிக்கிறேன். அதைத்தான் மரக்காணம் சம்பங்களுக்கு காரணமாக்குகிறேன். இன்னம்மும் நான் நம்பும் நல்லவர்கள் எனக்கு தெரிந்து இதை தீவிரமாக எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
எல்லா கொலைகளையும் நாம் கணக்கு வைத்து கண்டித்து கொண்டிருப்பதில்லை; நீங்களும் கண்டிப்பதில்லை. கண்டிபதற்கு பின் அரசியல் காரணம் உள்ளது. வன்னிய உயிர்கள் போய்விட்டதே என்று நீங்கள் துடிக்கிறீர்கள். வன்னிய ஜாதிவெறி வன்முறை அரசியலுக்கு தலித் மக்களும் இந்த இரண்டு உயிர்களும் பலியானதாக நான் கருதுகிறேன். அதையே கண்டிக்கிறேன்.
'கண்டித்தாயா.. கண்டித்தாயா..'' என்று இவ்வளவு நீளாமாக கேட்கும் நீங்கள் எதையாவது கண்டித்தீர்களா? மரக்காணம் கொலைகளை முற்போக்காளர்கள் கண்டிக்காததால் கண்டிக்கவில்லை என்று அநியாயமா க சொல்லாதீர்கள். அதை பற்றி பேசத்தொடங்கும் முன், சித்திரை திருவிழா பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுத்த போது, எங்காவது ராமதாஸ் + மற்றவர்களின் ஜாதிவெறி பேச்சை வன்முறையை எங்காவது கண்டித்தீர்களா? ஏதோ ஐபிஎல் பார்த்தது போலத்தானே நிலைத்தகவல் போட்டீர்கள். அந்த ஜாதிவெறி வன்முறை பேச்சை கண்டிக்காத நீங்கள் இப்போது அதை நியாயப்படுத்தும் நீங்கள் 'கண்டித்தீர்களா?' என்று மற்றவர்களை கேட்பதே பெரும் அநியாயம். நான் கண்டிக்கிறேன். நடந்த அனைத்திற்கும் ராமதாஸையும் கூட இருந்தவர்களையும் கண்டிக்கிறேன். மாறான புதிய தகவல்கள் நம்பகத்தன்மையுடன் வரும்வரை வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
Wednesday, May 1, 2013
தந்திர அரசியல் நேர்மை.
2004-2006இல் குழலி நேரடியான சாதி சார்புடன், ஆனால் பூடகமாக வன்னிய ஜாதிவெறி தீவிரத்திற்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருந்தபோது, அதை எதிர்த்து நான் எழுதியதை நண்பர்கள் பலர் எதிர்த்தார்கள்; மாறுபட்டார்கள்; சிலர் மென்மையாக கண்டிக்க கூட செய்தார்கள். தங்கமணி நீண்ட விளக்கம் எனக்கு எழுதினார். அதற்கு 'வாவ்..' என்று பாராட்டுக்கள். சங்கரபாண்டி கண்டனமே செய்தார்.
இப்போது குழலி நேரடியாக மிக வெளிப்படையாக ஜாதிவெறி நிலைபாடு எடுத்திருக்கும்போது இவர்கள் யாராவது தங்களது அன்றய நிலைபாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள், குறைந்த பட்சம் குழலியின் இப்போதய ஜாதிவெறி நிலைபாட்டை கண்டிப்பார்கள், சின்ன எதிர்ப்பு குரலாவது ஒலிப்பார்கள் என்று பார்த்தால் .. வாயையே திறக்கவில்லை. (என் கணிப்பு முழு மெய்யாவதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை; ஆற்றைமையான கோபம் மட்டுமே). ஏதோ ஜாதிவெறி பதிவுகளை பார்க்காமல் வேறு வேலையில் இருக்கிறார்களோ என்றும் கொள்ள முடியாது. அவரோ மானாங்கண்ணியாய் பதிவு போடுகிறார். இவர்கள் கண்டும் காணாமல் வேறு ஏதோ பேசுகிறார்கள். எல்லாம் வேறெங்கோ அல்ல, அருகருகில் ஃபேஸ்புக்கில். இதற்கு நடுவில் சுந்தரமூர்த்தி முனிரத்தினம் குழலியின் பதிவுகள் இரண்டை லைக் வேறு செய்கிறார். நான் நிலமை இவ்வளவு கேவலமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் புழங்குவதை விட, காலக்கொடுமையை இங்கே பதிவு செய்துவிட்டு, கிரீயேடிவாக நான் செய்ய காத்திருக்கும் வேலைகளை முழுகவனத்துடன் தொடர்வது மட்டுமே எனக்கிருக்கும் வழியும் வெளியும்.
Subscribe to:
Posts (Atom)