Monday, March 15, 2010

துளியுரைகள்-3.

2:31 PM Aug 30th, 2008
http://tinyurl.com/5aymbd அருந்ததி மேல் மிகுந்த அன்பும், அவரது அபுனைவு எழுத்தின் மீது மிகுந்த மதிப்பும் உள்ளதால் அவரது புது புனைவை, ரவி ஶ்ரீனிவாஸ் போல் 'பாடாவதி' என்று சொல்ல முடியவில்லை.

1:21 AM Aug 31st, 2008
http://www.shobasakthi.com/shobasakthi/?p=176 வெகு நாட்களுக்கு பிறகு அ.மார்க்ஸின் மிக அருமையான கட்டுரையை படித்தேன்

1:45 AM Aug 31st, 2008
தமிழச்சி தங்கபாண்டியன் என்பவரின் முகம் அவரது 'கவிதை'யை விட பரிச்சயமாகிவிட்டது. முதலில் புத்தகச் சந்தை போஸ்டர்களில்..போஸ்டர்களில்.. 'வார்த்தை'யில், தீராநதியில்..

1:46 AM Aug 31st, 2008
தமிழச்சியின் ஓரிரண்டு கவிதையை பார்த்தது எங்கே என்று நினைவில்லை; நமக்கு ஒத்து வராது; ஆனால் முகம் எல்லா இடங்களிலும் பார்க்க பிடித்திருக்கிறது.

11:06 AM Aug 31st, 2008
'அன்பே சிவம்' படத்தில் 'சேதி' சொல்லி கூத்து நடத்தும் வீதி கம்யூனிஸ்டுகள் (சிவப்பிற்கு பதில்) ஏன் கருப்பு அணிந்திருக்கிறார்கள்?

8:31 PM Aug 31st, 2008
இன்று சென்னையில் மராத்தானாம். நல்ல விஷயத்திற்கென நினைக்கிறேன். ஆனால் நம்ம ஊரில் பெரும் பிரச்சனை தராமல் நடத்த இயலாத இதெல்லாம் தேவைதானா?

8:35 PM Aug 31st, 2008
இப்போதுதான் உறைக்கிறது. சென்னையில் இந்த ஊர்வலம் என்று ஒன்று விஷயம் தொல்லை தருவது நின்று விட்டது போல!

(குறிப்பு: பிறகு ஒரு வருடம் கழித்து விஜய்காந்தின் ஊர்வலம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்ததை கண்டேன். இடையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்.)

8:58 PM Aug 31st, 2008
'மோடிக்கு விசா மறுப்பு' என்று செய்தி வருவதில் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருப்பதால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

9:04 PM Sep 1st, 2008
ராவணா சீதையை தரமாட்டியா?' ̀ராக்ஷஸா, ராணியை தரமாட்டியா?'வாக மாறியதற்கு என்ன இந்துத்வா தலையீடு என்று தெரியவில்லை

9:08 PM Sep 1st, 2008
ஆனால் `கென்யா ஜெயித்த' dairy milk விளம்பரம் மிக திறமையாக தேசியவாதத்தை நக்கல் செய்கிறது. இன்னும் எதிர்ப்பே வராதது ஆச்சரியம்!

9:09 PM Sep 1st, 2008
ஆனால் கென்யா தவிர வேறு எந்த நாடு ஜெயித்திருந்தாலும் களேபரமாயிருக்கும்.

No comments:

Post a Comment