Thursday, March 11, 2010

துளியுரைகள்-1.

எனது பழைய ட்விட்களை ஒரு வசதிக்காக (எடிட் செய்தபின்) இங்கே அவ்வப்போது எடுத்து சேமிக்கிறேன். மற்றவர்களும் வாசிக்கலாம்.

4:18 PM Jun 26th, 2008
பாமரனின் ராஜாவுக்கான `ப.க.'வை படித்தேன். வழக்கமான மொக்கை. இதில் இந்தியிசை ஆதிக்கத்தை தார்பூசாமல் வெற்றியதாக ராஜாவுக்கு பாராட்டு. என்ன உளரல்!

6:40 PM Jun 26th, 2008
காலம் கழிந்து சொல்வது! தாமதமாகவேனும் பாமகவை கழட்டி விட்டது திமுகவிற்கு மிகவும் நல்லது. திமுகவின் நலன் பற்றி கவலைப்படுகிறவன் என்ற முறையில்.

8:37 PM Jun 26th, 2008
விஜய் டீவியில் மதுரை. சீரியலுக்கே உரிய ஜவ்வு இருந்தாலும், கதையில் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட.. வசனம் அதுதான் தமிழ் நாடக சினிமாவின் உயிர்நாடி.

9:27 PM Jun 26th, 2008
வெளிப்படையாக குறிப்பிடாவிட்டாலும், `மதுரை'யில் வருவது தேவர் அடையாளம்தான் என்பது தெளிவு. ஆனால் தேவர் ஜாதி பெருமையும், வன்முறையும் கொண்டாடப்படவில்லை

9:28 PM Jun 26th, 2008
ஆனால் தேவர் வாழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இப்படி தேவர் அடையாளம் பொதிவாக அமைவது சிலருக்கு பிரச்சனையாக தெரிகிறது. எனக்கு அப்படி தோன்றவில்லை.

9:32 PM Jun 26th, 2008
பிராமண ஜாதி உட்பட எல்லா அடையாளங்களும் (உம்: திஜா) விமர்சனமின்றி புனையப்படலாம். ஆனால் அந்த விமர்சனமின்மை மிக கவனமாக கையாளப்பட்டிருக்க வேண்டும்

9:35 PM Jun 26th, 2008
மதுரை (விமர்சனம் எதுவுமின்றி) , தேவர் சாதி சார்ந்த வாழ்வை கவனமாக கொண்டாடும் உதாரண பிரதியாக எனக்கு தெரிகிறது

9:19 AM Jun 27th, 2008
ஸ்ரீகாந்தின் மதியிறுக்கம் பற்றிய கட்டுரையை நேற்றிரவு படித்தேன். தொடர்ந்த பதிவுகளாக எழுதிய போது, வழக்கமான காணாமல் போதலில் தவறிட்டது

9:23 AM Jun 27th, 2008
மயிலாடுதுறை சிவா ஒருமுறை சொன்னதால் மீனாட்சியின் கட்டுரையை அறிந்தேன். ஆழமும் உணர்வும் கொண்ட கட்டுரை. டெக்னிகலாக இருந்தும் கண்ணீர் வந்துவிட்டது

12:32 PM Jun 27th, 2008
`ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க கூடாது' என்று பேச்சை துவங்குவதன் பின்னுள்ள வன்முறையை ஒரு கவுண்டமணி செந்தில் வசனம் முதலில் சிந்திக்க தூண்டியது


12:58 PM Jun 27th, 2008
"அண்ணே, ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே!" "டேய், நான் தப்பா நினைக்காத மாதிரி நீ சொல்லுடா நாயே!"

12:35 PM Jun 27th, 2008
தப்பாக நினைக்க கூடியது என தெரியும் என்பதால்தான் இந்த பீடிகை.; ஒரு நாசுக்கு தடையை உண்டாக்கி எதிராளி எதிர்வினையாற்றாமல் பார்த்துக் கொள்கிறது

12:51 PM Jun 27th, 2008
பல சாதிய வக்காலத்துக்கள் இப்படி துவங்குவதை பார்க்க முடியும். நான் அவதானித்து இதற்கு பொருத்தமான எதிர்வினையை உரியவரிடம் கண்டதில்லை; அசடு வழிதலை மட்டுமே!

No comments:

Post a Comment