Tuesday, November 15, 2011

NO COMMENTS!

(தேவதேவனின் 'நுழைவாயிலிலேயே நின்று விட்ட கோலம்' தொகுப்பிற்கு தேவ தேவன் எழுதிய முன்னுரையிலிருந்து).

ஒரு இலக்கிய கூட்டத்தில் பிரமீள் தனது கவிதைகள் குறித்து கேட்கப்பட்டபோது "அவைகள் ரத்தினங்கள்" (gems) என்றார். அதற்கு ஒரு வாசகர் "அப்படியானால் அது ஒரு வெறும் அணிகலன்தானா?" என்று எதிர்வினை செய்ததற்கு அவர் "ரத்தினம் அது சக்தி மிக்க ஆயுதம் (weapon)" என்றார். பிரமீள் தனது வாசகனுக்கு தான் சென்றடைந்த உயரத்திற்கு அவனை அழைத்துச் செல்ல அடிவாரத்திலிருந்து உச்சி வரை படிக்கட்டுகளை அமைத்துக் கொண்டிருப்பதில்லை. அவனது ஆர்வத்திலும் திராணியிலும் நம்பிக்கை வைத்தபடி வெகுவேகமாகமாயும் லாவகமாயும் தாவித் தாவிச் செல்வது அவர் சிந்தனை.

'கானகவாசி'யில் வைரத்தைத் (ரத்தினம்) தேடிச் செல்கிறது ஒரு கூட்டம். ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி. அது இங்கே பேராசை ஒன்றின் குறியீடாகிறது. ஒரு தேர்ந்த வாசகரை திடுக்கிடச் செய்தது.

ஓர் சந்தர்ப்பத்தில் "அப்படியானால் கவிதை இந்த வாழ்கைக்கு ஒன்றும் செய்யாதா?" என்று கேட்கப்பட்டபோது நான் சொன்னேன். "ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி என்ற நிலையில் நம்மிடம் கேட்டு நிற்கும் விலை என்ன? மனித சமூக அளவுகோல்களால் நாம் அதற்கு அளித்திருக்கும் மதிப்பு, விலை, மனிதனை படுகுழிக்குள் தள்ளிவிடக் கூடியதானது. நமக்கு இன்று உணர்த்துவதுதான் என்ன? ரத்தினம் ஒரே சமயத்தில் சிருஷ்டிகரத்தின் குறியீடாகவும் பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சி கொள்ளும் வாழ்வே கவிதை..."

(மேலே பிரமீள் சொன்னதை முன்வைத்து தேவதேவன் சொன்னதை ஜெயமோகன் மொழிபெயர்த்தது கீழே. )

சிலகாலம் முன்பு தமிழின் தலைசிறந்த கவிஞரான பிரமிள் தன்னுடைய கவிதைகள் அரசியலற்றவை என்று சொன்னார். அவர் வைரங்கள் போல என்றார். அதைக்கேட்டு ஒரு முற்போக்கு விமர்சகர் கொதித்தார். அப்படியானால் அக்கவிதைகளுக்கு பயன்மதிப்பு என ஒன்றும் இல்லையா? வெறும் அலங்காரமோ ஆடம்பரமோ மட்டும்தானா அவை?

அதற்கு தமிழின் மகத்தான கவிஞராகிய தேவதேவன் ஒரு கட்டுரையில் பதில் சொன்னார்.. ஆம் , அவை வைரங்கள்தான். ஆனால் வைரங்கள் பயனற்றவையா? நாம் உலகியல் சூழலில் பயன்படுத்துவதுபோன்ற பயன் அவற்றுக்கு இல்லை, அவ்வளவுதான். அவை ஒரு இட்லி போல ஒரு கோவணம் போல ஒரு பாய்போல நமக்கு பயன்படுபவை அல்ல. அவற்றின் பயன் குறியீட்டு ரீதியானது.

வைரம் நமக்கு சுட்டுவது எதை? நம்முடைய உலகியல்செயல்பாடுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று நம்முடைய உலகியலை மதிப்பிடக்கூடிய ஒரு அபூர்வப்பொருளாக அது உள்ளது. நம்முடைய உலகியலின் மதிப்பையும் மதிப்பில்லாமையையும் அது நமக்கு உணர்த்துகிறது.ஒரு வைரம் பல டன் சோற்றுக்குச் சமமாக இருப்பது அதனால்தான்.

(ஜெயமோகன் எழுதிய "வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்"லிருந்து)

No comments:

Post a Comment