Wednesday, March 17, 2010

துளியுரைகள்-4.

11:51 PM Sep 3rd, 2008
மலைப்பாதையில் நிறுத்தத்தில் அவன் இறங்கிய 8 வது நிமிடத்தில் விபத்து நடந்து எல்லோரும் காலி. 'நான் இறங்கிருக்க கூடாது' என்று நினைக்கிறான். ஏன்?

1:29 PM Sep 5th, 2008
'சுப்பிரமணிய புரத்'தில் 'சிறு பொன் மணி' பாடல் துண்டு ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்ற என் யூக முடிவை படம் பார்த்த இரு நண்பர்கள் ஆமோதிக்கிறார்கள்

1:30 PM Sep 5th, 2008
பெல் பாட்டம், ஜாரி என்று obviousஆன சமாச்சாரங்களை பற்றி எல்லாம் 'ஆழமாய்' பேசி விமர்சிக்கும் சாருவிற்கு இந்த பாடலின் முடிச்சு தென்படவில்லை.

1:36 PM Sep 5th, 2008
20 ஆண்டுகள் கழித்து ராஜாவின் இசை வேறு ஒரு இடத்தில் முற்றிலும் வேறு பட்டு இயங்குவது புரியவில்லை. அய்யோ பாவம்!

1:57 AM Sep 7th, 2008
துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம் என்று நினைக்கிறேன்.

1:01 AM Sep 8th, 2008
முந்நாள் underworld donஆக இருந்த முத்தப்பா ராய், திருந்தி real estate businessஉம், ஜெய் கர்நாடகா அமைப்பையும் நடத்தி வருகிறார்

1:04 AM Sep 8th, 2008
ஹோகனேகல் பிரச்சனையில் கூட நாராயண கௌடா, வட்டாள் நாகராஜுடம் ஒப்பிடும்படி 5000 பேருடன் கலாட்டாவில் கலந்துகொண்டவர்

1:06 AM Sep 8th, 2008
பல வருஷங்களாய் 'கற்றது தமிழ்' எடுக்க முடியாமல் அலைந்த ராம், முத்தப்பா ராயின் ஃப்ண்டிங்கில்தான் எடுக்க முடிந்ததாம்.

1:09 AM Sep 8th, 2008
முன்னாள் டான் மற்றும் தமிழர்களுக்கெதிரான கன்னட தேசிய அரசியல் நடத்துபவர் பணத்தில் 'கற்றது தமிழ்' எடுத்த தார்மீகம் பற்றி எழுதவரவில்லை
.
1:10 AM Sep 8th, 2008
இந்த தமிழ் சினிமா வியாபாரம் எவ்வளவு விநோதமாக இருக்கிறது என்று மட்டும் சொல்ல வந்தேன்.

No comments:

Post a Comment