Saturday, March 13, 2010

துளியுரைகள்-2.

2:37 PM Jul 22nd, 2008
தசாவதாரம் `கல்லை மட்டும் கண்டால்..' இரண்டுமுறை டீவியில் பார்த்தேன். (இப்போது காண நேர்ந்தால் சேனல் மாற்றிவிடுவேன்.)


6:03 PM Jul 23rd, 2008
பாடலின் பிரச்சனை கச்சாவாக, மசாலாவாக, ஒரு வறலாற்று வன்முறையை காட்சிப் படுத்துவது அல்ல; அதை பாடலாக நமது கூடத்திற்குள் கொண்டுவருவது

9:47 AM Aug 5th, 2008
மனுஷ்யபுத்திரன் ரஜினி பற்றி எழுதியிருந்ததை படித்தேன். அவர் எழுதியுள்ள அபத்தங்களில் ஒரு உதாரணம் ̀தொடர்ந்து சினிமாக்காரர்களின் அடையாள அரசியல் இரண்டு மாநில மக்களுக்கும் இடையே பகைமை தீயை வளர்த்து வருகிறது'

9:52 AM Aug 5th, 2008
ஒரு ஹிந்திப்படத்தை தமிழகத்தின் ஒரே ஒரு தியேட்டரில் ஒரு நாள் தடை செய்தால் இந்திய ஊடகம் என்னவெல்லாம் தலையங்க ஃபிலிம் காட்டும்? உதாரணம்: ராஜ்தாக்கரே பிரச்சனை. கர்நாடகாவில் நடப்பது பற்றி எவனாவது வாய் திறக்கிறானா?

12:13 AM Aug 14th, 2008
இரவி டீவியில் வரும் (எவ்வளவு தூரம் மக்கள் கேனமாகக்கூடும் என்ற) சுவாரசியங்களில் சில-எனர்ஜி வைத்தியம், ̀எண்ணியல் சித்தர்', சிவராஜ் தாத்தா.

12:17 AM Aug 14th, 2008
சிவாராஜின் வெகுளி பேச்சு தவிர மற்றவை வ.கட்டிய புருடா! மனிதர்களை புரிந்துகொள்ளும் நோக்கில், போரடிக்கும் கேப்பில் பார்ப்பதுண்டு..

12:18 AM Aug 14th, 2008
இதில் ராஜராஜன் என்று ஒரு பேர்வழி, ̀பெயரியல் பேராசான் என்று தனக்கும், வாய்க்கு வந்தபடி மற்றவர்களுக்கும் பெயர் வைத்து கலாய்கிறார்.

12:21 AM Aug 14th, 2008
ராஜேந்தர் இந்தாளால் விஜய ராஜேந்தரானது விஷயமல்ல. இந்தாள் விளம்பரத்தில் எல்லாம் திருமா சிரித்துக் கொண்டிருப்பதை சொல்லத்தான் இவ்வளவும்.

3:12 PM Aug 18th, 2008
ஸோல்ஜெனிஸ்தின் பற்றி திண்ணையில் நரேந்திரன் என்பவர் எழுதியிருக்கிறார். எனது ஆழமான சந்தேகம் இந்தாள் Gulag Archipelagoவின் அட்டையை யாவது பார்திருப்பாரா என்று

3:13 PM Aug 18th, 2008
மஞ்சுளா நவனீதன் என்பவர் ரொம்ப நாள் முன்பு காரல் பாப்பரை பற்றி எழுதியதை விட இது கொஞ்சம் மேலோ என்று தோன்றுகிறது

No comments:

Post a Comment