tag:blogger.com,1999:blog-8058745433891682416.post381388497589164000..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: பிச்சைக்காரர்களின் சென்னை.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-3037464302165258862010-07-14T02:16:35.507-07:002010-07-14T02:16:35.507-07:00ஒரு பக்கம் இந்த நகர வாழ்வின் ஒரு பகுதியும் விளை பொ...ஒரு பக்கம் இந்த நகர வாழ்வின் ஒரு பகுதியும் விளை பொருளும்தான் பிச்சைக்காரர்களும், சேரிகளும் -குறிப்பாக நமது இந்திய சமுதாயத்தில். ஆனால் பிச்சைக்காரர்களின் இருப்பு சமூகத்தின் பலருக்கும். நகரின் அழகியலுக்கும் நெருடலாக இருக்கிறது. மேயரும் ஸ்டாலினும் ரொம்ப நாட்களாக சிங்கார் எழில் மிகு சென்னை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையை 'நவீன'மாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதான் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்துவது. இதில் ஊழல் இருக்கலாம், ஆனால் ஊழலுக்காகவே இதை துவங்கியுள்ளதாக சொல்லமுடியது. அதாவது பாலங்கள், OMR போல , இன்னொரு பக்கம் இந்த அப்புறப்படுத்துதல்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-51599340952119606842010-07-14T01:51:13.765-07:002010-07-14T01:51:13.765-07:00நீங்கள் சொல்வது புரிகிறது. பிச்சைக் காரர்களில் இரு...நீங்கள் சொல்வது புரிகிறது. பிச்சைக் காரர்களில் இருந்து கிடைக்கும் மாமூல் நின்று விடும் என்ற தடை இந்த நோக்கம் நிறைவேற தடுக்கிறது போல.<br /><br />சரி மேயருக்கோ, கட்சிக்கோ இந்த திட்ட அறிவிப்பால் என்ன நன்மை என கருதுகிறீர்கள்.<br /><br />இந்த திட்ட அறிவிப்பு, வாக்குகளை அதிகரிக்கும் என தோன்ற வில்லை எனக்கு. இரட்டை இலைக்கோ, முரசு சின்னதிற்கோ வாக்கு அளிக்க எண்ணி இருந்த எந்த ஒரு வாக்காளரும் இந்த திட்ட அறிவிப்பால் , விளம்பரத்தால் உதய சூரியனுக்கு தனது வாக்கை மாற்றுவாரா?<br /><br />கட்சிக்குள்ளும் மேயருக்கு, இந்த அறிவிப்பால் புதிய பதவியோ, இடமோ, பணமோ கிடைக்கும் என யூகிக்க முடிய வில்லை.<br />உலக வங்கி, ஜப்பான் வங்கிகளை திருப்தி படுத்த எடுத்த விளம்பரமும் இது இல்லை என நினைக்கிறேன்.<br />இந்த திட்டத்திற்கு அறுநூறு கோடிகள் செலவு செய்தோம் என்று கூறி அந்த பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஸ்பெக்ட்ரம் ஒன்றே போதும் . ஸ்பெக்ட்ரம் இந்த மாதிரி திட்டங்களை விட நூறு மடங்கு பெரிய திட்டம்.<br />'ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-4278503655700171382010-07-13T11:43:28.873-07:002010-07-13T11:43:28.873-07:00அரசின் தற்போதய திட்டம் பிச்சைக்காரர்களை 'மறுவா...அரசின் தற்போதய திட்டம் பிச்சைக்காரர்களை 'மறுவாழ்வு' அளிப்பதோ, பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதோ அல்ல. அப்படி ஒரு நோக்கில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே வேறு. அவர்கள் செய்வது பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்துவது. சரியாக சொன்னால் பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் சுதந்திரங்களுக்கும் தளையிடுவது. நகருக்கு வெளியே கொண்டு விடுவதை வேறு எப்படி புரிந்து கொள்வது. இப்போதிருக்கும் நிலையில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலைவரும் சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கை எதிலும் அரசால் இறங்க முடியாது.<br /><br />பிச்சைக்கார மாஃபியா குறித்து எழுதியுள்ளேன். அது குறித்து எந்த நடவடிக்கையிலும் அரசு இறங்கும் என்று தோன்றவில்லை. பிச்சைக்கார மாஃபியா இருப்பது அனவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு உதாரணாமக CRY போன்ற தன்னாரவ நிறுவன ஊழியர்களுடன் பேசி பார்கலாம். இந்த மாஃபியாக்களிடம் இருந்து தப்பியவர்களுக்கு, மறுவாழ்வு அளிப்பது போன்ற செய்லகளில் ஈடுபடுவதற்கு CRYயின் செயல்பாடுகள் குறித்து அவர்களுடன் பேசியுள்ளேன். தொடர்ந்து அவர்கள் செய்ய வேண்டியது மறுவாழ்வு அளிப்பது அல்ல, இந்த மாஃபியா குறித்து எழுதுவதும், உண்மைகளை வெளிகொணர்வதும், அமைப்புரீதியாக போரடுவதும் போன்ற ஆபத்தான வேலைகளை செய்ய வேண்டும் என்று அவர்களுடன் பலமுறை பேசியுள்ளேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களது இருப்பிற்கே இது போன்ற மாஃபியாவும், தப்பிப்பவர்களின் மறுவாழ்வும் தேவைப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர்களுக்கு காசு அனுப்புவதைவதும் நிறுத்தியுள்ளேன். ஆகையால் நான் அறிந்த வகையில் இந்த மாஃபியாவை ஒழிபது ஊழலை நம் நாட்டில் ஒழிப்பது போன்று சிக்கலானது ஆகும்.<br /><br /><br />மேலே எழுதியுள்ளது விரிவான பதிவு அல்ல. வெளிவந்த அறிக்கையை முன்வைத்து என் சுருக்கமான எதிர்பலிப்பு மட்டுமே.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-51552949097617897352010-07-13T04:09:42.649-07:002010-07-13T04:09:42.649-07:00தனுசுராசி, ராம்ஜி, Bizaree கருத்துக்கு நன்றி. இரவு...தனுசுராசி, ராம்ஜி, Bizaree கருத்துக்கு நன்றி. இரவு வந்து பதில் தருகிறேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-87563036213842622592010-07-12T23:46:13.942-07:002010-07-12T23:46:13.942-07:00லக்கியின் கட்டுரையை படித்த பின் இதை படித்தேன் ! அவ...லக்கியின் கட்டுரையை படித்த பின் இதை படித்தேன் ! அவர் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறார் ...நீங்கள் என்னவென்றால் தெளிவாக எதையும் சொல்லாமல் மேலும் குழப்புகிறீர்கள் ! பிச்சைக்காரர்கள் இல்லாத சமுதாயம் ..எல்லோருடைய கனவும் தான் ! நம் அரசு சாதிக்க முடியாவிட்டாலும் முயற்சிப்பதே வரவேற்க வேண்டியது தான் ! பிச்சைக்காரர்களில் பலர் வாய்ப்பு இருந்தும் வேலை செய்யாமல் சோம்பேறிகளாய் இருக்கின்றனர் !<br />நீங்கள் சொல்வது போல் அயல் நாட்டிலும் பிச்சைக்காரர்கள் உள்ளனர் ! ஆனால் பாட்டு பாடியோ,நடனம் ஆடியோ,இசை கருவிகளை உபயோகித்தே பிச்சை கேட்கின்றனர் ! பிச்சைக்காரர்களில் அவர்கள் மேலானவர்கள் என்று சொல்லவில்லை ...ஆனால் நம்ம ஊரில் எரிச்சல் மூட்டும் வகையில் ...வேலை தருகிறேன் வருவாயா என்று கேட்டாலும் தொடர்ந்து பிச்சை எடுப்பதையே விரும்புகின்றனர் ! பாவம் வயதான பெரியவர் என்று பிச்சை போட்டால் டாஸ்மாக்இல் பத்து நிமிடத்தில் இருக்கிறார் ! ஆகவே ,அரசு என்ன செய்ய போகின்றது என்று கவனித்து பின் இதை பற்றி விவாதிக்கலாம் போராடலாம் இத்யாதி இத்யாதி...Bizzarreehttps://www.blogger.com/profile/15644098127048378459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-50775047100144230362010-07-12T02:26:54.767-07:002010-07-12T02:26:54.767-07:00தமிழக அரசின் நோக்கமும் பிசைக்காரரகளுக்கு மறு வாழ்வ...தமிழக அரசின் நோக்கமும் பிசைக்காரரகளுக்கு மறு வாழ்வு கொடுத்து நல்வழி படுத்துவது மற்றும் புதிதாக பிச்சைக் காரர்கள் உருவாவதையும் தடுத்தல்.<br /><br />நடைமுறையில் செயல் படுத்தும் பொழுது சில இடங்களில் காவல் துறை, அரசு அதிகாரிகள் வன்முறை, கட்டாயப் படுத்துதல் போன்ற வழிமுறைகளை கடை பிடித்து இருப்பார், அது கண்டிக்க தக்கது. அதற்காக இந்த திட்டமே தவறு, இந்த நோக்கமே தவறு என்று சொல்வது சரி அல்ல.<br /><br />நாமும் அரசின் நோக்கம் நிறைவேற நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். குற்றம் கண்டு பிடித்தல் என்பது உலகில் மிக எளிதான வேலை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-58338207646328822062010-07-08T04:21:44.715-07:002010-07-08T04:21:44.715-07:00பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து உதவலாமே தவ...பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து உதவலாமே தவிர, அவர்களை வன்முறையின் மூலம் அழிப்பது என்பது அவ்வளவு நல்லா இருக்காது...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.com